ஜெய ஜெய தந்திர!

பழங்கதை. தெரிந்திருந்தால் ரெண்டாம் பத்திக்குத் தாவுக. ஒரு ஊரிலொரு தையற்காரன். தனியாள். மனசு சரியில்லாமல் சாமியாரிடம் போனான். கல்யாணம் பண்ணிக்கப்பா. பண்ணிக்கிட்டான். பொண்டாட்டி, பிள்ளைகள். மனச்சிக்கல் குறையவில்லை, கூடியது. சாமியாரிடம் மறுபடியும். பூனையொன்று வளர்த்து வா. வந்தான். அதனாலும் கூடுதற் தொல்லை. சாமியார் நாயும், கிளியும் வளர்க்கச் சொன்னார். பன்மடங்கானது நிம்மதியின்மை. பின் நாய், கிளி, பூனை மூன்றையும் ஒவ்வொன்றாய் விடச் சொன்னார். விட்டான். இப்போது எப்படியிருக்கிறாய்? ஒரு தொல்லையுமில்ல சாமி, குடும்பத்தோட சந்தோஷமா இருக்கேன்.

அரசு ஊழியர்களுக்குச் சேர வேண்டியவற்றை ஒவ்வொன்றாய்ப் பறித்தது, விவசாயிகளுக்கான சலுகைகளைப் பறித்தது, குடும்ப அட்டை உரிமைகளைப் (H) பறித்தது, இழந்தவற்றை மீட்டுக்கொள்ளப் போராடிய போது ஊழியர்களது வேலையைப் பறித்தது, இது மாதிரி ஒன்றன் மேல் ஒன்றாக அடி கொடுத்தது, இப்போது பறித்துக் கொண்டவற்றில் சிலதைத் திருப்பித் தருவது. உதாரணமாக இலவச மின்சாரம், இழந்த வேலை மீண்டும். இவற்றைச் செய்வதன் மூலம் நல்லவராகிவிட்டார் என்று பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இது ஒரு பெரிய தந்திரம் என்று எனக்குத் தோன்றுகிறது. அதாவது தரைமட்டத்திலிருந்துகொண்டே மேலேறுவதாகக் காட்டும் உத்தி. செய்ய வேண்டியிருந்ததெல்லாம் இன்னும் ஒரு ஆறடிக்குக் கீழே போய்விட்டு மறுபடியும் மேலேறி வந்தால் போதும், ஏறுமுகம், நல்லவர், ஏழை பங்காளர், தயாபரி என்று சொல்ல வைத்து விடலாம். அட அம்மா இதையாச்சும் செஞ்சாங்களேன்னு வாழ்த்த வைத்து விடலாம். என்னே தந்திரமம்மே! ஆனா நம்ம மக்களுக்கு இந்தத் தந்திரமெல்லாம் தெரியாதென்றா நினைக்கிறீர்கள்?

0 comments: