தெஹல்காவில் வெளியாகவிருக்கும் ஹேமந்த் கார்கரேயின் செவ்வி


மும்பை தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் (இணை ஆணையர்) ஹேமந்த் கார்கரே தனது கொலைக்கு முன் தெஹல்காவிற்கு வழங்கிய செவ்வி:

(மொழி பெயர்க்க நேரமில்லை!)

Interview With Hemant Karkare

By Rana Ayyub

29 November, 2008
Tehelka

ATS chief Hemant Karkare told RANA AYYUB, shortly before his death in the Mumbai terror attacks, that more army officers will not be arrested

The 2008 Malegaon blasts investigations have, for the first time, linked the right wing organisations to terrorist acts in the country. ATS Joint commissioner Hemant Karkare was spearheading the investigation. In an interview with TEHELKA, he had clarified the ATS stand on the conflicting reports that have been trickling out regarding the investigations.


Reports suggest that VHP strongman Pravin Togadia funded Abhinav Bharat, the organisation which is allegedly involved in the Malegaon blasts? Has this been confirmed?

There was a reference to his name during the investigation, but that has nothing to do with the Malegaon blasts investigations of 2008. At this point of time, we are only looking into the 2008 blasts.

Will Pravin Togadia be questioned, since his name has also cropped up in the narco tests done on the accused in the Nanded blasts of 2006?

No, as of now there is no evidence against him. As I said earlier, we are looking at only the Malegaon blasts, so there is no question of interrogating Pravin Togadia.

Reports suggest the involvement of high-profile seers in the Malegaon blasts. Has the ATS got proof of this?

We are not looking at seers or saints in relation to the Malegaon blasts. We are not looking at people from a particular community when we question them. We are just detaining people on the basis of evidence. As for Dayanand Pandey, he has proclaimed himself to be a seer. There are a lot of people going around claiming to be saints.

Was Swami Aseemanand from Dangs involved in other blasts, including the one at Ajmer, as reports suggest?

A reference has been made to his name during the investigations, we cannot divulge much at this stage. These people might not have been seers. Aseemanand could also have taken the garb of a seer.

While presenting its case, the ATS said that there was a possibility of those arrested in the Malegaon blasts case also being involved in the blasts that took place in the Marathwada region in 2006. Is there evidence to prove this? Has the ATS been able to link those arrested to other blasts?

There are agencies that have been looking at the various links, namely the CBI, which has been looking at the Malegaon blasts of 2006. The link we found is that of Rakesh Dhawre. He is a Pune-based counterfeit arms dealer who was involved in the training that took place for the blasts of 2006. He is the common link between the 2006 blasts including the ones in Purna and Parbhani, and the 2008 Malegaon blasts. Investigating agencies are working on it.

There are reports that police officials from other states have been coming to interrogate those arrested by the ATS. Is that true?

Yes, police officials from other states have been coming but that’s something which is protocol in such cases. They wanted to know of the modus operandi so that they could figure out if there are similarities to other blasts, in Andhra Pradesh and Chandigarh. What they found out is something only they will be able to tell you.

The ATS made a flip-flop on the links of those arrested with the Samjhauta blasts, which raised questions when it found no mention in the remand copy.

A lot has been made of the Samjhauta Express statement that was made by the public prosecutor in the case. There was a statement made by the witness that Purohit helped in the procurement of RDX. That was a part of the case diary. It cannot be taken as gospel truth. What was wrong was the mention of the same to the media, although we had said that there is no such evidence of the same.

The BJP has targeted the ATS for its investigations. Has there been any political pressure?

We are here to do our job as an investigating agency and bring out the truth. Having said that, it’s baseless to say that we are working under political pressure. There is absolutely no pressure on me or my officials. We are doing our best to bring the truth out.

Abhinav Bharat has come out as having played a key role. Is the ATS planning to question Himani Savarkar, its founder member?

We look at individuals and not organisations when we carry out our investigations. We are not looking at Abhinav Bharat, we are looking at the individuals involved. We have not questioned Himani Savarkar so far, and as yet, there is no evidence against her.

There are reports that an ATS team has left for Delhi. Is it true?

No, it’s absolutely untrue.

There were also reports that the army was not cooperating with the ATS with regards to information on Col Purohit and his leave records?

I would like to clear this. The army has given cooperation to the ATS right from day one on every aspect of the interrogation. There have been reports that the army has not been cooperating with the ATS and that’s absolutely untrue. The army gave us his leave records and other documents, which we needed.

Is the ATS looking at arresting more army officials?

No, we are not looking at arresting or detaining any more army officials in the case.

Most of the accused have alleged that they have been subjected to physical and mental torture.

We are doing our duty as investigating agencies. Such allegations come during the course of investigations. But they are untrue. We cannot do anything about such allegations

Can Purohit and Dayanand Pandey be called the key conspirators in the Malegaon blasts? Is this evident from the narco tests of the accused?

We are yet to get the narco reports. There is evidence against Purohit, but we can’t reveal anything at this stage

As the findings of narco tests are not admissible in court, does the ATS have substantial proof to nail the accused in the case?

The ATS has been carrying out investigations. We have enough evidence against the people we have arrested and we will present it in court.

There has been a report that Purohit and Dayanand Pandey had conspired to kill RSS veterans like Mohan Bhagwat and Indreesh. What do you have to say on this? Have those arrested confessed to the same? The name of Delhi-based doctor RP Singh too has cropped up during the course of investigations. Does the ATS have evidence suggesting his involvement?

The name of RP Singh came up during the investigation of Dayanand Pandey. I can’t reveal much about it at this stage. As for the assassination of RSS leaders, some references had emerged but they can’t be linked to any organisation.

Are more arrests likely to be made by the ATS in the Malegaon blasts? Do you also see the involvement of Hindu organisations like the Bajrang Dal, RSS, and Sanatan Sanstha in various terror acts in the country?

The ATS had filed a chargesheet against the Sanatan Sanstha in a different case, but there is no proof to link organisations as yet with the blasts. We are just looking at individuals.

Does the arrest of seers and armymen in terror acts suggest a trend?

Col Purohit was just an aberration. Just because one man has been arrested it does not mean that the entire army is tainted. Tomorrow, you cannot blame the entire police force just because one officer is arrested.

Have some other names cropped up during the investigations of the accused?Has the name of Nitin Joshi, one of the key members of the Abhinav Bharat, cropped up?

At the moment we are looking for Shyam Apte and Ramji, who have been named in the investigations. They played an important role and are absconding.


rana@tehelka.com

From Tehelka Magazine, Vol 5, Issue 48, Dated Dec 06, 2008

ஈழத்தின் வரலாற்றைக் குழப்புகிறாரா கலைஞர்?!

புதினத்தில் இன்று கண்ட ஒரு செய்தியில், கலைஞர் பேசும்போது "ஒரு இனமே, பக்கத்தில் இலங்கைத் தீவில் அழிக்கப்படுகிறது. எந்த இனம்? அங்கே ஆண்ட இனம். எந்த இனம்? இராஜ இராஜ சோழனால் படையெடுக்கப்பட்டு, வெற்றிக்கொடி பறக்க பரிபாலனம் செய்யப்பட்ட அந்த நாட்டில், இன்று அவனது இனம் அழிந்து கொண்டிருக்கின்ற அந்தக் காட்சியை காண்கின்றோம், செய்திகளைக் கேள்விப்படுகின்றோம்." என்று கூறியதாக இருக்கிறது.

அப்படியென்றால் ராஜராஜ சோழனின் படையெடுப்புக்கு முன் அங்கிருந்தது யார் என்பதை சிங்களவர்கள் என்று நம்மை ஊகிக்குமாறு விடுகிறார். அப்படியானால் சிங்களவர்கள் அங்கு ஆதிகுடிகள் என்றாகும். ஈழம் தமிழர்களின் ஆதி நிலம் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முட்பட்ட தமிழர் நாகரிகம் தொடர்பான சான்றுகளைக் கண்டெடுத்திருக்கிறது ஈழம். இந்தியாவின் வடகிழக்கிலிருந்து தமிழர்களுக்கு மிகவும் பிந்தைய காலத்தில் புத்த மதத்தைப் பரப்புதலோடு குடியேறியவர்கள் சிங்களவர்கள் என்கிறது வரலாறு. நிலை அப்படியிருக்க கலைஞரின் கூற்று சிங்களவர்கள் சொல்லும் கதைகளை ஒத்தபடி இருக்கிறது. இது ஈழத்தமிழர்களின் நில உரிமையைப் பறித்து அவர்களது தொன்மையை வெறும் ஆயிரமாண்டுகளுக்குள் முடக்கப் பார்க்கிறது! 

தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்


தமிழ் என்ற மொழியை, அதனோடு இணைந்த வழக்கை, பண்பாட்டை, வாழ்வு முறையைத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அத்தகைய மக்களது தொண்டினாலேயே, தமிழ் இன்றளவும் செழுமையாக வாழ்ந்து வருகிறது. அவர்களில் இன்று வாழ்ந்து வரும் ஒரு பெரியவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை முந்தாநாள் பார்த்தேன். அவர் இரா. இளங்குமரனார் அய்யா அவர்கள். அய்யாவைப் பற்றிச் சென்ற ஆண்டு பேரவை விழாவின் மூலந்தான் தெரிய வந்தது. ராலேயில் நடந்த அந்த விழாவில் அவர் பேசியபோது என் மூதாதையரின் மொத்த உருவில் ஒருவர் உயிர் கொண்டு வந்து பேசியது போலிருந்தது. 78 வயதிலும் கணீரென்ற குரல், தளராத தமிழறிவு. நிறைய பொத்தகங்களை எழுதியவரென்றும், வேர்ச்சொல் ஆராய்ச்சியிலும், தமிழகராதியின் உருவாக்கத்திலும் ஈடுபட்டிருந்தவரென்றும் தெரிந்தது. அவரைப்பற்றிய "உலகப் பெருந்தமிழர், தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்: வாழ்வும் பணியும்" என்ற ஆவணப்படத்தைத்தான் நான் பார்த்தேன்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வாழவந்தாள்புரம் என்ற ஊரில் பிறந்தவர். கிருஷ்ணன் என்பது இயற்பெயர். தமிழாசிரியராக வாழ்வைத் துவக்கி, பின்னர் மறைமலையடிகள், கவிமணி, தேவநேய பாவாணர் போன்ற தமிழ்ப் பெரியவர்களுடன் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுமளவுக்குத் தன்னைத் தன் கவிப்புலமையாலும், தமிழ்மொழி அறிவாலும் வளர்த்துக் கொண்டவர். தன் வாழ்நாள் நினைவுகளை அவரே சொல்லக் கேட்பது, யாரோ நெருங்கிய ஒருவரோடு உரையாடுவது போலிருக்கிறது. தன்னுடைய ஆசானாக நினைக்கும் தேவநேய பாவாணரைப் பற்றிப் பேசும்போதும், தன் மாணவன் ஒருவன் தன்னைக் கவிதை எழுதத் தூண்டிய நினைவைப் பற்றிப் பேசும்போதும் உள்ளிட்ட சில இடங்களில் தழுதழுக்கிறார். திருக்குறளுக்கு இவர் எழுதிய உரை பல இடங்களில் மற்றையோரது உரையிலிருந்து மாறுபட்டது. ஒரு குறளுக்கான உரையை, அந்தக் குறளை மட்டுமே கொண்டு எழுதாமல், நாலடியார்  உள்ளிட்ட வேறு இலக்கியங்களையும், பட்டறிவையும் கொண்டு எழுத வேண்டும் என்பது இவருடைய நோக்கு. திருக்குறள் வாழ்வியல் உரை என்பது இவரது உரை. காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்றொரு பெண்பாற்புலவர் இருந்ததாகப் பள்ளியில் படித்திருப்போம். அவரது இலக்கணக் கவிதைகள் மறைந்துவிட்டன என்ற நிலையில் அவரது கவிதைகளை 'காக்கை பாடினியம்' என்று பல்வேறு இலக்கியங்களிலிருந்து தேடித் தொகுத்திருக்கிறார். பெண்பாற்புலவர் ஒருவர் யாப்பிலக்கணம் செய்தது தமிழுக்கே உரிய பெருமை. இந்த காக்கை பாடினியத்தை மீளக் கண்டுபிடித்தது இளங்குமரனாரின் முக்கியமான படைப்புக்களில் ஒன்று. புறத்திரட்டு, குண்டலகேசியின் மறு உருவாக்கம், தேவநேயம் என்ற 16 தொகுதிகளைக் கொண்ட புத்தகம் என்று சுமார் முந்நூற்று எண்பத்து ஏழு பொத்தகங்களை எழுதியிருக்கிறார். முன்னோர்களின் மடிந்துபோன படைப்புக்களை மீட்டெடுப்பது எனது முக்கியமான வேலை என்கிறார். 

தற்போது திருவள்ளுவர் தவச் சாலை என்ற தவச் சாலையை திருச்சிக்கு அருகிலுள்ள அல்லூரில் அமைத்து அங்கே வசித்து வருகிறார். அவரது நூல்களும், அங்கிருக்கும் நூல் நிலையத்திலிருக்கும் அவர் தேடிய 17,000 நூல்களும் பல ஆராய்ச்சியாளுக்குப் பெரிதும் பயன்பட்டு வருகின்றன. அடுத்த முறை ஊருக்குப் போகும்போது நீங்களும் நானும் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் திருவள்ளுவர் தவச் சாலை! 

ஆவணப்படம் குறித்த தகவல்கள்: தயாரிப்பு மருத்துவர்கள் அ. செந்தில்-அகிலா, உலகமதி மருத்துவமனை, தொலைபேசி 04142-254502, 281233. 

 (இந்த ஆவணப் படத்தை அன்பளித்த நண்பருக்கு நன்றி!)

ஈழத்தில் கிடைத்த கீதை

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஈழத்தில் புதிய கீதை ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் காலம் ஈழப் போர் நடந்த காலம் (சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது) எனக் கருதப்படுகிறது. அக்காலத்து இலங்கையில் இரண்டு இனக்குழுக்கள் இருந்தன. எது காலத்தில் முந்தையது என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆயினும் இரண்டுக்குமான நிலப்பகுதிகள், வாழும் முறை, மொழி எல்லாம் வெவ்வேறு. பிற்காலத்தில் ஊடுருவிய அந்நிய நாட்டினர் (ஆங்கிலேயர், போர்த்துகீசியர் முதலானோர்) எல்லோரையும் ஒரே ஆளுகைச் சிறைக்குள் வைத்து ஆட்சி நடத்திவிட்டு, போகும்போது நாட்டின் ஆட்சியைப் பெரும்பான்மை மக்களின் கையிலே ஒப்படைத்துவிட்டுப் போய்விட்டனர். அந்நியர்கள் போன பிறகு பெரும்பான்மை, சிறுபான்மையை ஒடுக்கியது. ஒரே நாட்டில் பிறந்தவர்கள், சக மனிதர்கள் என்ற முறையில் சிறுபான்மையினர் சமமாக நடத்தப்படும் உரிமையைக் கேட்டார்கள். தரப்படவில்லை. சரி, உங்களோடு வைத்துக்கொள்ள விருப்பமில்லாவிட்டால் ஐந்து மாவட்டங்களைக் கொடுங்கள் எங்களை நாங்களே ஆண்டு கொள்கிறோம் என்று கேட்டார்கள். அதற்கும் பெரும்பான்மை இணங்கவில்லை. எமக்குக் கீழ், நாங்கள் தருவதை வைத்துக் கொண்டு இரும் என்றார்கள். அட, ஐந்து ஊர்களையாவது தாருங்கள் என்றது சிறுபான்மை. முடியாது, ஐந்து ஊசிகளை நாட்டும் இடத்தைக்கூடத் தரமுடியாது என்றுவிட்டது பெரும்பான்மை. விளைவு? ஈழப்போர் தொடங்குகிறது. 

போரின் ஆரம்பத்தின்போது ஈழப்படையின் தளபதிகளில் முதன்மையானவனாக விளங்கிய பிரபாகரன் போர்க்களத்திற்குச் செல்கிறான். அங்கே அவன் எதிரிகளாகக் கண்டவர்களெல்லாம், அவன் தேயத்து மனிதர்கள், அவனுடைய நண்பர்களும், ஆசிரியர்களும், உறவினர்களும், போர்த்திறம் சொல்லித்தந்த குருமார்களுமாயும் ஆனவர்கள். அவர்களைக் கண்டு அவன் மனம் சஞ்சலமடைகிறது. இவர்களுடனா நான் போரிட வேண்டும், இவர்களைக் கொன்று நான் ஈட்டும் வெற்றி தேவைதானா என்று கலங்கி, துவக்கைக் கீழே போடுகிறான். அப்போது அவனுக்குச் சாரதியாக இருந்த கண்ணபிரான், பிரபாகரனுக்குச் சொன்னதே ஈழத்துக் கீதை. இது பல அத்தியாயங்களாக இருந்திருக்கக் கூடும். இதன் சில பகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கலாம் என்று ஆய்வர்கள் கருதுகிறார்கள். கீதை இரண்டு பகுதிகளாகச் சொல்லப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு. அதாவது, போருக்கு முன்பு ஒன்றும், போருக்குப் பின்பு ஒன்றும் என்று இரு பகுதிகள் உள்ளதாக அறியப்படுகிறது. போருக்கு முன் சொல்லப்பட்டது பிரபாகரனைப் போர் செய்யத் தூண்டியதாகவும், இதன் இரண்டாவது பகுதி போரின் வெற்றிக்குப் பல ஆண்டுகளுக்குப் பின் கண்ணபிரானால் சொல்லப்பட்டதாகவும், அது ஆன்மீகக் கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் சொல்லப்படுகிறது. மகாபாரதப் போரை முடித்தவுடன், பிரபாகரனின் அழைப்பிற்கிணங்க கண்ணபிரான் ஈழத்துக்குச் சென்றார். அப்போது அவருக்கு உபதேசிக்கப்பட்டதே ஈழத்துக் கீதை. 

அதிகாரம் - 1
அன்பிற்குரிய கண்ணா, போரிடும் எண்ணத்துடன் இங்கு கூடியிருக்கும் உறவினர்களையும், நண்பர்களையும் கண்டு என் உடல் நடுங்குகிறது. வாய் உலர்கிறது. ரோமம் சிலிர்க்கிறது, சருமம் எரிகின்றது, துவக்கு நழுவுகின்றது. இனியும் என்னால் இங்கு நிற்க முடியாது. குழப்பத்தால் என்னை மறக்கின்றேன். கேசியை அழித்தவரே, கெட்ட சகுனங்களைக் காண்கின்றேன்.

கருவண்ணா, உறவினரை அழிப்பதால் எனக்கென்ன லாபம்? அப்படியொரு வெற்றியையோ, அரசையோ, இன்பத்தையோ நான் விரும்பவில்லை.

அரசையும், சுகவாழ்வையும் அடைவதற்காக, யாருக்காக வாழ விரும்புவோமோ அவர்களையெல்லாம் கொன்றுவிட்டு சுகமாயிருக்க முடியுமா? மூவுலகும் கிடைத்தாலும் நான் இவர்களை இழக்க மாட்டேன். நான் கொல்லப்பட்டாலும் இவர்களைக் கொல்ல மாட்டேன். அல்ப பூமியைப் பெற நான் இதைச் செய்வேனா?

பிரியத்துக்குரியவனே, இந்த ஆக்கிரமிப்பாளர்களைக் கொல்வதால் நமக்கு பாபம்தான் வரும். திருமகள் கணவா, உறவுகளை அழித்துவிட்டு எப்படி மகிழ்வாய் இருக்க முடியும்?

கவலையும், கண்ணீருமாய் கலக்கத்துடன் அமர்ந்துவிட்ட பிரபாகரனைப் பார்த்து கண்ணபிரான் பின்வருமாறு கூறினார்.

அதிகாரம் - 2
பிரபாகரனே, இந்த சிக்கலான நேரத்தில் இக்களங்கம் எங்கிருந்து உனக்கு வந்தது; பண்புடையவனுக்கு இது தகாதது; மேலுலகுக்கும் வழிகாட்டாதது. இகவாழ்விலோ இழிவைத் தருவது. இது போன்ற தளர்ச்சிக்கு இடம் தராதே. இது உனக்கு ஏற்றதல்ல. இதய பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில்.

பிரபாகரன்: கண்ணா, எனது வணக்கத்திற்குரிய வழிகாட்டிகளை நான் எப்படி எதிர்ப்பேன். தனது ஆசிரியனைக் கொன்று வாழ்வதை விட பிச்சையேற்பதே மேல். அவர்கள் பேராசைப்பட்டாலும் பெரியோர்களே. அவர்கள் ரத்தம் சிந்திய நிலத்தை நான் அனுபவிப்பதா? யார் வெல்வார். எது சிறந்தது என்பதை நாமறியோம். யாரை இழந்தால் நாம் வாழ விரும்பமாட்டோமோ அவர்களல்லவா எதிரில் நிற்கின்றனர்.

துயரத்துடனிருந்த பிரபாகரனைப் பார்த்து புன்சிரிப்புடன் இறைவன் கூறினார் : அறிவாளியைப் போல் பேசும் நீ, கவலைப்பட வேண்டாததற்காக கவலைப்படுகிறாய். அறிஞன் இருப்பவருக்காகவோ, இறப்பவருக்காகவோ வருந்துவதில்லை. நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாதிருந்ததும் இல்லை, இல்லாமலிருக்கப் போவதுமில்லை.

உடலில் உயிராயுள்ள ஆன்மா, பாலகன் - இளைஞன் - வயோதிகன் என உடலை மாற்றிக் கொண்டிருப்பது போல இறப்பின் போது வேருடலுக்கு மாறிக்கொள்கிறது. தன்னை (ஆத்மாவை) அறிந்தவன் இதற்காகத் திகைப்பதில்லை. கோடையும் குளிரும் பருவ காலத்திற்கேற்ப நிலையற்று மாறுவது போல, இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் புலன் நுகர்வாலேயே ஏற்படுகின்றன. இதில் பாதிப்படையாமல் பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்வாயாக.

சிறந்தவனே, இன்ப துன்பங்களினால் பாதிப்படையாமல் தன்னிலை மாறாதிருப்பவனே விடுதலைக்குத் தகுதி பெற்றவனாவான். 

நிலையானது, நிலையற்றது இந்த இரண்டிலும் உண்மையை அறிந்தவர்களின் தீர்வு நிலையற்றதற்கு நீடிப்பு, நிலைத்தவைக்கு முடிவில்லை என்பதாகும்.உடல் முழுவதும் அழிவற்ற ஒன்று (ஆன்மா) பரவி இருக்கின்றது. அதனைக் கொல்வதற்கு யாருமில்லை. அது அளவிட இயலாதது. 

ஆதலால் ஈழகுலத் தோன்றலே, போரிடுவாயாக. 

அதிகாரம் - 3
ஆன்மா அழிவதுமில்லை, அழிப்பதுமில்லை. இதை அறிவாளிகள் அறிவார்கள். ஆன்மா ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. முன்பு உண்டாகாமல் பின்பு உண்டாகிறதுமில்லை. அது பிறப்பற்றது, நித்தியமானது, சாசுவதமானது, புராதனமானது, உடல் அழியும்போது ஆன்மா அழிவதில்லை.

ஆன்மாவை அழிவற்றதாக, பிறப்பற்றதாக, மாறாததாக அறிந்திருப்பவன் யாரையும் கொல்வதுமில்லைம் கொல்லச்செய்வதுமில்லை.

நைந்து போன ஆடைகளை புறக்கணித்து, புது ஆடைகளை ஏற்பதுபோல, ஆன்மாவானது உபயோகமற்ற உடலைப் புறக்கணித்து, புதிய உடலை ஏற்கின்றது. அத்தகு தனிப்பட்ட ஆன்மாவை, ஆயுதம் பிளக்காது, நெருப்பு எரிக்காது, நீரும் நனைக்காது, காற்று உலர்த்தாது. எங்கும் இருப்பது, என்றுமிருப்பது, அசையாதது, மாறாதது, மாற்றமுடியாதது, கண்ணுக்கெட்டாதது, சிந்தைக்கு அப்பாற்பட்டது. இவைகளை அறிந்து நீ உடலுக்காக வருந்தாதே.

மேலும் ஆன்மா எப்போதுமே பிறந்து இறந்து கொண்டிருப்பதாகவே நீ எண்ணினாலும் அதில் துக்கப்பட என்ன இருக்கிறது? பிறப்பதெல்லாம் இறப்பது உறுதி என்றால் இறப்பதெல்லாம் பிறப்பதும் உறுதி அல்லவா? தவிர்க்க முடியாத இவ்விஷயத்தில் நீ கடமை செய்யக் கலங்கலாமா?

தோன்றுபவை எல்லாமே முதலில் தோன்றாதிருந்து, இடையில் தோன்றி, இறுதியில் தோன்றா நிலையை அடைகின்றன. இதில் கவலைப்பட என்ன இருக்கிறது. எனவே பிறப்புடைய எந்த ஆன்மாவுக்காகவும் நீ வருந்தத் தேவையில்லை. உனக்கான தர்மத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தாலும் நீ வருந்தத் தேவையில்லை. 

நீதிக்காகப் போரிடுவதைக் காட்டிலும் ஒரு வீரனுக்கு வேறு கடமைகள் உண்டோ? தயங்காதே. வீரனுக்கு வலிய வரும் போர்வாய்ப்புகள் மேலுலகின் கதவுகளைத் திறக்கின்றன. அதனால் அரசர்கள் மகிழ்கின்றனர். இந்த தர்ம யுத்தத்தை நீ செய்யாவிட்டால், அதர்மம் புரிவதுடன், உனது பெயரையும், புகழையும் இழந்து பாபமடைவாய். உலகம் உன்னை அவமதிக்கும். மதிக்கப்பட்டவனுக்கு வரும் அவமானம் மரணத்தைக் காட்டிலும் கொடியது.

ஆதலால் பிரபாகரனே, இன்ப துன்பங்கள், லாப நட்டங்கள், வெற்றி தோல்விகள் இவற்றைக் கருதாமல் போரிடு, இதனால் பாபம் ஏற்படாது.

அதிகாரம் - 4

பிரபாகரன் : ஆயர்குடிக்கரசே, பலனை விரும்பும் செயலை விட, நிலையான அறிவு சிறந்ததாயின், கோரமான கொலைத் தொழில் புரிய என்னை ஏன் பலவந்தப்படுத்துகிறீர்?

எனக்குகந்த வீரனே, பலனில் பற்றின்றி, கடமைக்காக செயல்படுவாயாக. இதனால் மேன்மை அடையலாம். ஜனகர் போன்ற மன்னர்கள் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்தே பக்குவமடைந்தனர். எனவே உலகுக்கு நல்வழி காட்டவாவது செயல்படுவாயாக. வழிகாட்டும் பொறுப்பில் இருப்பவர்கள் செய்வதையே மக்கள் பின்பற்றுகின்றனர். அவர்களின் செயல்களையே உலகம் உதாரணமாகக் கொள்கிறது. அறிவிற் சிறந்த ஞானியும் கூட தன் இயல்புப்படியே நடக்கிறான். இயல்பினைத் தடுப்பதால் ஆவதென்ன?

பர தர்மங்களைச் சிறப்பாய் செய்வதைவிட குறையாயினும் சுயதர்மத்தை செய்வது நல்லது. பிற தர்மம் பயம் தரும். சுயதர்மமோ புரிகையில் அழிவுற்றாலும் நல்லது தான். எனவே கலக்கத்தை மறந்து உன் அறத்தைச் செய். 

செயல்களே ஒருவனை விடுபடுத்துகின்றன. எது செயல், எது செயலற்ற நிலை என்பதைத் தீர்மானிப்பதில் அறிவாளியும் குழம்புகிறான். தன்னில் நிலைபெற்றவனது செயல்கள் அவனை பந்தப்படுத்துவதில்லை.

எனவே பிரபாகரா, அறியாமையால் விளைகின்ற சந்தேகங்களை, அறிவெனும் ஆயுதத்தால் அழித்துவிட்டு, எழுந்து போரிடு.

அதிகாரம் - 5

போரிடுபவரில் உன் எதிரிகள் அழிக்கப்படுவர். எழுந்து போரிடு. எதிரிகளை வென்று வளத்துடன் ஆட்சி புரிவாயாக. எனது யுக்தியால் இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர். இடக்கையால் துவக்குச் சுடுபவனே, இப்போரில் நீ ஒரு கருவியாகவே இருப்பாயாக. பொன்சேகா, மகிந்த, கோத்தபாய போன்றவர்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டனர். வெறுமனே போரிட்டு, வெல்.

நீ போரிட மறுத்தால், உன் வீரம் வீணாகும். மேலும் நீ தவறாக வழி நடத்தப்பட்டு, உன் இயற்கையே உன்னைப் போரிட வைத்துவிடும். மயக்கத்தால் நீ செய்ய மறுப்பதை உன் வீர இயல்பே செய்ய வைத்துவிடும்."

இவ்வாறாகக் கூறி பிரபாகரனுக்குப் போரிடும் மனத் திட்பத்தை ஊட்டினார் கண்ணபிரான். 

இப்போது கிடைத்திருக்கும் இந்த ஈழத்துக் கீதைக்கும் இந்தியாவில் இதே காலகட்டத்தில் மகாபாரதப் போரின்போது அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட பகவத் கீதைக்கும் பெரிய ஒற்றுமைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இரண்டையும் உபதேசித்தவர் ஒரே ஞானாசிரியராகிய கண்ணபிரான் என்பதாலும் இவ்வொற்றுமை இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

பேரறிவாளனின் கடிதம்

ராஜீவ் காந்தி படுகொலையில் கைதுசெய்யப் பட்டு மரண தண்டனைக் கைதியாக வேலூர் தனிமைச் சிறையில் இருக்கும் பேரறி வாளன், சில கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழக முதல்வருக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருக்கிறார்.

அமெரிக்காவில் பிள்ளையாரைக் கரைக்க முடியுமா?


"சீதக்களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பலவிசை பாட..."
நான் மனப்பாடம் செய்த முதல் பெரிய பாடல் என்றால் அது ஒளவையார் எழுதியதாகச் சொல்லப்படும் இந்த விநாயகர் அகவலாகத்தான் இருக்கவேண்டும். எனக்குப் பிடித்த பாடல். ஊரில் ஒரு குளம் உண்டு. பங்களா குளம், வங்களா குளம் என்ற பெயர்களில் அழைக்கப்படும். பஸ்டாண்டு பக்கத்துக்கு வரும் அத்தனை பேருக்கும் பலதுக்கும் உதவும். அக்குளத்தின் மேலக்கரையில் எழுந்தருளியிருந்தார் எங்களூர் பிள்ளையார். சித்தப்பாவுடன் வெள்ளிக்கிழமை மாலைகளில் பாடிய அந்தப் பாடலில் ஆன்மீகத்தோடு மருத்துவக் குறிப்புகளும் கலந்து கிடப்பதாக எனக்குத் தோன்றும். (மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்து, என்பதை stem cellஉடன் ஒப்பிட்டுக் கொண்டேயிருக்கிறேன்!)  தனியே திரியும் பொழுதுகளில் மனதின் மூலையிலிருந்து பலவாண்டுகளுக்கு முன்னே புதைத்துப் போட்டிருந்த வரிகள் மெல்ல மேலெழுந்து வந்து புதிய அர்த்தங்களைச் சொல்லும். இந்த அழகுக்காகவே சில பாடல்களை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வது நல்லது. இளமையில் கல். திருமந்திரத்தின் பாடல்களை இப்படி அசை போடுவது இன்பம் தருவது. (நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை என்று திருமூலர் சொல்லும் நந்தி, சிவபெருமானா, இவரும் மருத்துவப் பாடல்களில் சொல்லப்படும் நந்தி என்பவரும் ஒருவரா, சிவபெருமானுக்கு சித்த வைத்தியம் தெரியுமா என்பதுபோன்ற என் கேள்விகளைச் சிவத்திடமே கேட்டுக் கொண்டிருக்கிறேன்!). 

பிள்ளையாருக்கு ஓங்கார வடிவம் என்பார்கள். ஓம் என்ற ஒலியை உச்சரிப்பதன் பின்னேயுள்ள மருத்துவக் குணங்களைப் பற்றி யோசித்து வருகிறேன். மூச்சினை இழுத்து ஓமை நீட்டி ஒலித்து மூச்சினை விட்டு நிற்கும்போது உடலின் பலவிடங்களில் காற்றுக் குறைவாகிறது (hypoxia என்று சொல்லப்படும்). பிறகு மூச்சினை இழுக்கும்போது ஆக்சிஜன் மீண்டும் உடலின் செல்களுக்குச் செல்கிறது (reoxygenation). இதனைத் தொடர்ந்து செய்யும்போது செல்களுக்கு தகைவுகளைத் தாங்கும் வன்மை அதிகரிக்கிறது. எனவே ஓம் என்பதைச் சுற்றிய பயிற்சி, முதன்மையாக ஒரு மருத்துவ அறிவு. மூச்சின் இருப்புக்கும் இல்லாமைக்கும் மனதை ஊசலாட வைக்கும் ஒரு ஆன்மீக அனுபவம். அது இந்து மதத்தின் ஏகபோக சொத்து கிடையாது. சித்த வைத்தியர்களின் அனுபவம் பொதுமக்களுக்காகக் கற்றெடுத்த பாடம். அதனை மதமாக்கி வியாபாரம் செய்வது சரியா என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஆன்மீகம் ஒரு சொந்த அனுபவம். எனது அனுபவம் இன்னொருவருக்கு ஏற்புடையதாகாது. ஆனால் ஆன்மீகத்துக்கான வாசலாகச் சொல்லப்படும் மதம் பொதுவான முகத்தைக் கொண்டது. சமூகத்தின் ஒரு ஒட்டுமொத்த அனுபவமாக மதத்தன்மை பார்க்கப்படுகிறது. அந்த மதம் சடங்குகளின் குப்பைக் கிடங்காகத் துர்நாற்றமடிக்கிறது. துர்நாற்றம் மதங்களுக்குள்ளாக மட்டுமே நின்றுகொண்டால் தேவலாம். ஆனால் அவற்றின் எல்லைகளையும் தாண்டி தனிமனிதர்களின் மூக்கைத் துளைக்கும்போதுதான் துயரமாக இருக்கிறது அல்லது கோபமாக வருகிறது. 

சிறியதும் பெரியதுமாகச் சுமார் 1500 பிள்ளையார், மன்னிக்க கணேஷா, சிலைகளைக் கொண்டு போய்க் கடலிலே கொட்டுகிறார்கள். இதற்கு ஆயிரமாயிரம் போலீஸ், கடற்கரையிலே பாதுகாப்பு, அடித்துத் திரும்பி வரும் குப்பையை அள்ள மாநகரத் துப்புரவு ஊழியர்கள், இத்தனையையும் தாண்டி தெரிந்தே கடலுக்குள் கொட்டப்படும் இரசாயனக் கழிவுகள். பிள்ளையார் என்று ஒருவர் அந்தக் கடற்கரையில் உட்கார்ந்துகொண்டு இதனைப் பார்ப்பாரேயானால் அந்தத் தும்பிக்கையாலேயே ஒவ்வொரு பயலையும் சுழற்றி அடித்துப் போடுவார். இந்தச் செய்தியைப் பாருங்கள். இதிலே வருகின்ற பெயர்களைப் பார்த்தால் கரைத்தவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தினரல்லாத அல்லது வடநாட்டினரான சென்னைவாசிகள் என்பதை உணர முடியும். சென்னையில் நானிருந்த காலத்தில் ஒரு முறை இந்தக் காலாகோலத்தைக் காண நேர்ந்தது. அப்போது வட இந்தியர்கள் ஒரு லாரி நிறைய வந்திருந்து கடற்கரையில் சிலையை வைத்து ஆடியது நினைவிருக்கிறது. இன்று தமிழ்நாட்டுக்கு அந்நியமான ஒரு மதக் கலாச்சாரம் வலிந்து புகுத்தப்படுகிறது. ஊரில் பிடித்து வைக்கும் சாணப் பிள்ளையார், களிமண் பிள்ளையாரைப் பற்றிப் பலரும் பேசியாயிற்று. இதுதான் தமிழ்நாட்டுப் பிள்ளையார். இதனைச் சொல்லிக் கொடுத்தபடி நம்புவதும்,  அல்லது இந்தச் சாணி உருண்டையின் மூலமென்ன, பொருளென்ன, அல்லது இந்தக் களிமண்ணுக்குள் என்ன இருக்கிறது என்று தேடுவதும், பிள்ளையாரை வைத்துப் பிழைப்பு நடத்தும் மதவாதிகளைச் சாடும் பெரியாரின் பின்னே செல்வதும் அவரவரது தேர்வினைப் பொறுத்தது. சொந்த அலுவல்களுக்குள் மூக்கை நுழைத்து இது சரி இது தவறு என்று சொல்வதற்கான அதிகாரம் எனக்கில்லை. ஆனால் எனது சமுதாயத்துக்குள், என் சுற்றுப் புறத்தில் ஒரு கேடு வலிந்து திணிக்கப்படுகிறதென்றால் அதனைக் கண்டு பொறுக்கவில்லை. 

எனக்கொரு கேள்வி இருக்கிறது. தமிழகத்தின் நீரில்லா நீர் நிலைகளை இப்படிப் பாழடிக்கிறார்களே இந்த இந்து அபிமானிகள், இவர்களில் ஆயிரமாயிரமானோர் அமெரிக்காவிலும் இருக்கிறார்கள். இங்கும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகிறார்கள் (என் நல்ல நண்பர்களும் அடக்கம்). இத்தகைய கொண்டாட்டங்களுக்கோ, ஆன்மீக அனுபவத்துக்கோ, வழிபாட்டு ஆறுதலுக்கோ, சுண்டல் கொழுக்கட்டைக்கோ நான் எதிரியல்லன். என் கேள்வி இவர்கள் ஏன் கணேஷா சிலைகளை அமெரிக்காவின் எந்தக் குளம், ஏரி, கடலிலும் கரைப்பதில்லை? எங்கே பார்ப்போம், இந்தியர்கள் பெருமளவு வசிக்கும் நகரங்களில் சென்னையைப் போல வீதிக்கு வீதி பெரும்பெரும் கெமிக்கல் சிலைகளை வைத்து, வண்ண வண்ணமாகக் கெமிக்கல் சாயம் பூசி, அவற்றை ஒரு நாள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். அமெரிக்க போலீஸ் ஆப்படிக்கும்! இந்தியர்கள் புலம்பெயர்ந்து வாழும் இந்த சில நூறு ஆண்டுகளில் இப்படியொரு கணேஷா சிலை கரைப்பு அமெரிக்காவில் அல்லது வேறு மேலை நாடுகளில் அரங்கேறியிருக்கிறது என்று ஆதாரமிருந்தால் காட்டுங்கள் தெரிந்துகொள்கிறேன். 

நீதி: எங்கு சுரணையும், பொதுப் புத்தியும், விழிப்புணர்ச்சியும் மழுங்கியிருக்கிறதோ அங்குதான் மதங்கள் தம் கொடிய கால்களை வலிய ஊன்றுகின்றன. 

பேருந்துக் குறிப்புகள்

எங்கிருந்தோ வந்து என் சைக்கிளுக்கு முன்னே குதித்தது அணில் ஒன்று. சைக்கிளின் முன்னாலேயே பாதையில் ஓடியது. சற்றைக்குப் பின் இன்னொரு மரத்தில் ஏறிக் கொண்டது. அந்தப் பாதையில் மான்களை இரண்டாவது முறையாகக் காண்கிறேன். இதுவும் அதிகாலை வண்டியைப் பிடிக்க வரும்போதே நிகழ்ந்தது. இன்றைக்கு நான்கு மான்கள். இரண்டு பெரியன. இரண்டு குட்டிகள். ஒரு மனிதனைக் கண்டதும் அவை மிகவும் அஞ்சி நின்றன. நின்று ஒரு படம் எடுத்தேன். சிறந்த மான் படங்கள் பலவற்றைப் பார்த்திருந்தபோதும் ஒரு அலைபேசியால் நான் படமெடுக்க என்ன காரணம்? என் பழக்கம் அல்லது எனது புகைப்படம் என்ற சுயம் சார்ந்த ஆவல் என்பதைத் தவிர வேறெதுவும் இப்போது தோன்றவில்லை. நான் மறுபடியும் என் சைக்கிளை மிதிக்கத் துவங்கியபோது மான்கள் காட்டுக்குள் ஓடின. அவை அடுத்த வளைவில் சாலையைக் கடக்குமிடத்தில் நானும் கடப்பேன் என்பதை நானறிந்திருந்ததைப் போலவே அவையும் அறிந்திருக்க வேண்டும். எனவேதான் மரங்களுக்கூடே நின்று அவை நான் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தன. நான் அதன் பிறகு அவற்றைப் பார்க்கவில்லை. எதிர்பாராமல் எதிர்ப் படுகின்றவர்கள் என்னுள் பதிந்து போகிறார்கள். அன்றைக்கொருவர் என் முன்னே நடந்து போவதை வெகு அருகில் சென்றபோதுதான் பார்த்தேன். சைக்கிளின் சத்தம் கேட்டுத் திரும்பியவர் அதிர்ந்து போனார். முன்னால் ஒரு மனிதனைக் கண்டு நானும் அதிர்ந்து போனேன். அவரது அமைதியான நடையினை நான் குலைத்துவிட்டதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டு கொள்ள வேண்டியிருந்தது. இன்னொரு நாள் ஒரு பெண் பாதையோரமாய் ஒதுங்கி நின்றதை அவளருகே சென்றபோதுதான் கண்டேன். அவள் புன்னகைத்தபடி நின்றிருந்தாள்.

கடவுச் சீட்டைப் புதுப்பிக்க வேண்டும். அதைப் புரட்டிப் பார்த்தேன். அதன் ஏடுகளுக்குள் என் 10 வருடங்களை விறுவிறுவென யார்யாரோ எழுதி முடித்துவிட்டார்கள். முச்சந்தியில் ஒரு நீரூற்றை வைத்திருக்கிறார்கள். அது எப்போதும் உயரமும் குட்டையுமாய்க் கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது. நான் அவளோடு ஒரு உரையாடலில் ஈடுபட்டிருந்தேன். ஓங்கியும் தாழ்ந்தும் கொப்பளித்து விழும் தண்ணீரின் நிறம் மாறிக்கொண்டே இருப்பதை இரவுகளில் பார்க்கமுடியும்.

ஒருநாள் முடிந்தமட்டும் களைந்துவிட்டு நீச்சல் குளத்துக்குள் முங்கினேன். மூச்சை அச்சாகப் பிடித்துச் சுழன்றது நினைவு. மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்வரை நான் மூச்சைப் பற்றி நினைப்பதில்லை. தொலைக்கும்போது தவிக்கிறது மனம். தொலைந்து போகின்ற பொழுதுகளில்தான் அனுபவிக்கும் ஆவல் கிளர்ந்தெழுகிறது. இருக்கும் என நினைப்பது ஆறுதல். ஆறுதலாக இருக்கும்போது மனம் அனுபவிக்க அவாவுவது இல்லை. தொலைந்து போகும் என்ற தவிப்பே அனுபவிக்கும் ஆவலைத் தூண்டுகிறதோ? தவிப்பு துயரம். உய்த்தல் இன்பம். தவிப்பு பசி. தவிப்பு தாகம். உய்த்தல் உணவு. உய்த்தல் விடாய் தீருதல். தவிப்புக்கும் இன்பத்துக்குமான நாளாந்தத் துள்ளல் அணுக்களினுள்ளே மின் துகள்களின் (எலக்ட்ரான், புரோட்டான்) துள்ளலைப் போலிருக்கிறது என்று சொல்லலாமா. வேகமாய்த் துள்ளும் அணுக்கள், உலோகங்கள், வேகமாய் வினைபுரிகின்றன. நிலைமாறிப் போகின்றன. துள்ளலின்றி, வினைகளின்றி நிலைத்த உலோகங்களை noble metals என்கிறோம். inert என்கிறோம். வினை புரியாதவை, காலத்தால் சடுதியில் மாறாதவை எல்லாம் nobleஆகுமா? ஆறுதல் நிலைத் தன்மையைத் தருகிறது. ஆறுதலும் அமைதியும் ஒருபுறம். தவிப்பும் தேடலும் ஒரு புறம். அமைதி மாற்றமின்மையிலும் செயலின்மையில் இழுத்துக் கொண்டுபோய் விட்டுவிடும். இருப்பவற்றின் மதிப்புகளை உணராமலடித்துவிடும். தேடல் அமைதியைக் குலைக்கிறது. இன்பத்தை வேண்டி நிற்கிறது.

சிலர் பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். கல்லூரிச் சாலையில் பெண் பிள்ளைகள் நடந்து போகிறார்கள். சக்கரங்கள் சுழல்கின்றன. எனது நிறுத்தம் அடுத்தது.

குசேலனைப் பற்றி தந்தை பெரியார்

அவசியம் பார்க்க வேண்டிய படம்!

குசேலன் - பாகம் 1
குசேலன் - பாகம் 2

வாஷிங்டனில் நாங்கள் கண்ட கறுப்பு ஜூலை பேரணி

கறுப்பு ஜூலை பேரணி அறிவிப்பைக் கண்டதும் போக வேண்டுமென நினைத்தேன். இங்கிருந்து வாஷிங்டன் சுமார் 500 மைல்கள். ஒரு நாள் விடுப்பில் எட்டு மணி நேரங்கள் ஓட்டிக் கொண்டு போய், திரும்பி வந்து அடுத்த நாள் வேலைக்குப் போவது சற்றே கடினம்தான் என நினைத்துத் தயங்கியபோது நண்பர் ஒருவர் சொன்னார், ராலே (வட கரோலினா)யிலிருந்து பேருந்து கிளம்புகிறது. ராலே நாலைந்து மணி நேரப் பயணந்தான். கிளம்பினேன். மகன் நானும் என்றார். ஆறு வயதாகிவிட்டதே, இனி இதற்கெல்லாம் தயாராகத்தான் இருக்க வேண்டும், அதோடு விடுமுறைதானே, சரி கிளம்புங்கள் என்றுவிட்டேன். நாங்கள் இருவர் மட்டும் தொலைதூரம் காரோட்டுவது இதுவே முதன்முறை. வழியில் பேச்சும் சிரிப்புமாகச் சில நேரம் இருந்துவிட்டுத் தூங்கிப் போனார். இரவில் மழையும் இடியும் மின்னலுமாக, அதுவொரு அனுபவம். இரவு 12 மணி வாக்கில் ராலே போய்ச் சேர்ந்தோம். காலை மூன்றறைக்கு எழுந்து தயாராகிப் பேருந்திற்குச் சென்றோம். சுமார் 45 பேர்களுடன் பேருந்து கிளம்பியது.

தூங்கி வழிந்து அதற்கு நடுவில் காலைச் சாப்பாடும் சாப்பிட்டு ஒரு வழியாய் முழித்த போது கிட்டத்தட்ட பத்து மணியாகியிருந்தது, பேருந்தும் வாஷிங்டனில் இருந்தது. குழந்தைகள் அவர்களுக்கான தோழமைகளை விரைவிலேயே கண்டுகொள்கிறார்கள். அவர்கள் ஆடித் திரிந்தார்கள். பேரணியை ஒழுங்கு செய்திருப்பது PEARL என்ற இளைஞரமைப்பு. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருக்கும் பிள்ளைகளால் ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்றாண்டுகளாக இயங்குவது இது. இவ்வமைப்பின் முக்கிய நோக்கம், ஆட்சியாளர்களுக்கு, ஈழத்தில் மக்கள் படும் அவலங்களைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருத்தல், அதற்காக அமெரிக்க மக்களைத் திரட்டுதல். இவ்வாண்டு பேரணியில் பர்மாவின் விடுதலைப் போராட்டத்தினரும் இணைந்து கொண்டனர். 8.8.88 அன்று நடைபெற்ற எழுச்சியில் 3000 பர்மியர்கள் கொல்லப்பட்டதை அவர்களும் நினைவு கூர்ந்தார்கள். இந்த இரண்டு நாடுகளிலும் சீனாவின் பங்கு முக்கியமானது. சூடானுக்கு மட்டுமல்லாது இலங்கைக்கும் பர்மாவுக்கும் ஆயுதங்களையும், நிதியையும் வழங்கி, அங்கு ஒரு பெரிய போரைத் திணிப்பதில் சீனாவின் கை இருக்கிறது. எனவே சீனாவை இதை நிறுத்துமாறு கோருவதும் இப்பேரணியின் நோக்கம்.

வெள்ளை மாளிகையை ஒட்டிய செனட் மாளிகையின் வெளியில் இப்பேரணி நடந்தது. ஒரு அம்மா ஒலிபெருக்கியின் மூலம் குரல் எழுப்ப, பேரணிக்கு வந்திருந்தோர் வலமாக வந்து அவருடன் இணைந்து ஒலித்தோம். இவரைப் பின்புதான் Dr. Ellyn Shander என்று அறிந்தேன். சுனாமிக்குப் பின் பணிக்கு ஈழத்திற்குச் சென்று வந்ததன் பின்னர் அமெரிக்காவில் போராட்டங்களுக்குத் தனது ஆதரவினைத் தெரிவித்து வருகிறார். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் petitiononlineஇல் இவரது மனு ஒன்றை வாசித்த நினைவு இருக்கிறது. மகனும் நானும் கைகளைக் கோர்த்துக் கொண்டு குரலெழுப்பிக் கொண்டு போனது எனக்கு உணர்வு பூர்வமாக இருந்தது. மனமெங்கும் மக்களின் அவலத்துக்கு ஒரு முடிவு வராதா என்ற ஏக்கம் நிரம்பியிருந்தது. மகனின் ஓங்கிய குரல் என்னுள் நம்பிக்கையையும் எழுச்சியையும் பொங்க வைத்துக் கொண்டிருந்தது. அவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன். வலத்தின் முடிவில் கூட்டம் ஆரம்பமானது. கொளுத்தும் வெய்யிலுக்குச் சிலர் மர நிழலில் அண்டிக் கொண்டார்கள். இரு செனட் உறுப்பினர்களின் உரைகள் வாசிக்கப்பட்டன. ஒரு மக்களவை உறுப்பினர் வந்து பேசினார். அவர்களின் உரைகள், தற்போதுதான் தாம் இந்நிகழ்வுகளைப் பற்றி அறிவதாகவும், இதுபோன்ற அறிவுறுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்து நிகழ வேண்டும் என்பதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தாம் துணை நிற்போம் என்பதாகவும் அமைந்திருந்தது.
பர்மிய அமைப்பினர், இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் அமைப்பினர், ஊடக சுதந்திரத்திற்கான அமைப்பினர் எனப் பலரும் வந்திருந்து தம் ஆதரவினைத் தெரிவித்தது மனதுக்குத் தெம்பை அளித்தது. 1983 கலவரத்தில் தப்பிப் பிழைத்த சிலரின் அனுபவங்கள் சொல்லப்பட்டன. இறுதியில் சிலர் பாடல்களைப் பாடினார்கள். இரு அம்மையார்கள் தமிழில் பாடினார்கள். Ellyn Shander மார்டின் லூதர் கிங்கின் ஒரு பாடலைப் பாடியபோது அவருடன் எல்லோரும் இணைந்து பாடினோம். PEARL இளைஞர்களும் இரு பாடல்களைப் பாடினர். கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு மலர்வணக்கம் செய்யப்பட்டது. சுமார் 5 மணிக்கு நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

ஒரு போராட்டத்துக்குப் பல முகங்களுண்டு. ஒவ்வொரு முகத்திலும் நிற்பவரின் வேலைகளும் வெவ்வேறு மாதிரியானவை. எல்லாமும் சேர்ந்தால்தான் போராட்டம் வெற்ரியடைகிறது. ஈழத்தில் போர்க்களத்திலும், பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெளி நாடுகளிலே இருப்பவர்கள் அப் போராட்டத்திற்கு என்ன செய்ய முடியும்? மனித உரிமைகள் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அங்கே தொடர்ந்தும் மீறப்பட்டு வருகிறது. அரசாங்கம், மக்களைக் காப்பதற்குப் பதிலாகக் கொடிய அடக்கு முறையை ஏவியபடி இருக்கிறது. மற்ற நாட்டினர் தத்தமது காரியங்களிலே கண்ணாயிருக்கிறார்கள். இந்நிலையில், நாம் நம் தரப்பின் நியாயங்களை எல்லோருக்கும் சொல்வது அவசியமாகிறது. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், தமிழ் என்றொரு மொழி இருப்பதையும், இலங்கை என்றொரு நாடு இருப்பதையும் அறியாதவர்கள் அதிகம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் அடங்குவர். எனவே அமெரிக்கர்களிடம் ஈழத்தைக் குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும், அங்கு நிகழும் மனிதவுரிமை மீறல்கள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டதுதான் PEARL. இது மக்களின் கருத்துரிமையின் வழியே சென்று ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபடும் இது ஒரு சட்டபூர்வமான அமெரிக்க அமைப்பு. வெளிநாடுகளில் இருக்கும் நாம் செய்ய வேண்டியதெல்லாம், PEARL போல அந்தந்த நாடுகளில் இருக்கும் அமைப்புகள் நடத்தும் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஆதரவளித்தல்.


பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது மகன் கேட்டார், "China China, Shame on You" என்று ஏன் கத்தினோம் என்று. தம்பி, இது உன்னுடைய சீன நண்பர்களுக்கோ, சீன மக்களுக்கோ எதிரானதில்லை. அவர்களுடைய அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒரு செயலுக்கு மட்டுமே எதிரானது என்று விளக்கினேன். குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். இப்பேரணியில் கலந்து கொண்டதும், மகனோடு சென்று வந்ததும் மிகுந்த நிறைவையளித்தன. ஈழத்தில் உரிமையோடான வாழ்வொன்று மலரும் என்ற நம்பிக்கை ஓங்குகிறது. பேரணியை ஒழுங்கு செய்த PEARL இளையோர்களுக்கும், பயணத்தில் உதவிய வட கரோலின நண்பர்களுக்கும் எனது நன்றி!

தமிழ் அறிஞர்களா, யார் அவர்கள்?

தமிழ் அறிஞர்கள் என்று சொல்கிறோமே, அவர்களில் சிலர் இங்கே இருக்கிறார்கள். இவர்களில் எத்தனைப் பேரை உங்களுக்குத் தெரியும்? பெயரையாவது கேள்விப்பட்டிருக்கிறோமா என்பதற்கு ஒரு சிறு சுய சோதனை! தொகுக்கும் தமிழத்துக்கு நன்றி!

ஷோபாசக்தி போன்றவர்களெல்லாம் பைத்தியங்கள் - தியாகு

கீற்றில் தியாகுவின் பேட்டியிலிருந்து...

"...சாதி ஒழிப்பு குறித்து தனியான சிந்தனையோ, வேலைத்திட்டமோ சி.பி.எம்மிடம் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை நிலப்பிரபுத்துவ சமூகத்தின் மிச்சசொச்சம் தான் சாதி. வர்க்கப் போராட்டம் நடந்து முடியும்போது சாதி தானாக ஒழிந்து விடும் என்பது தான் அவர்களது கருத்து. இதனால் தான் இடஒதுக்கீட்டில் அவர்களுக்கு ஆர்வம் கிடையாது. இட ஒதுக்கீடு தொழிலாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்தி, முதலாளித்துவ ஒழிப்பு ஐக்கியத்தை அழித்து விடும் என்பது அவர்கள் கருத்து..."

"...52ல் தி.மு.க. தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த அதிகாரத்தின் மூலம் திராவிட நாடு சாத்தியமில்லை என்பதால் அவர்கள் போட்டியிடவில்லை. அதே தி.மு.க.தான் 57ல் போட்டியிடுகிறது. இப்போது வரை அது நீடிக்கிறது. இடையில் கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள் ஆசை காட்டினார்கள்; இவர்கள் பலியானார்கள். தேர்தலில் போட்டியிட்ட போது பதவிகளின் மீது மோகம் வந்தது. அந்தப் பதவிகள் தங்கள் நோக்கங்களுக்கு உதவுமா என்று பார்க்கத் தவறி விட்டார்கள். அப்படியே தங்களது குறிக்கோளையும் இழந்து விட்டார்கள். இலக்கை கைவிட்டு அமைப்பைப் பாதுகாத்தார்கள்..."

"...நக்சலைட்டுகள் இப்போதும் யாரையாவது திட்டுவது, சொன்னதையே சொல்வது என்றுதான் இருக்கிறார்கள். இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவே இல்லை. இன்றுவரை எந்த ஆயுதப் போராட்டமும், புரட்சியும் நடந்து விடவில்லை. அதற்காக அவர்களை நான் குறைகூறவில்லை. நிஜ வாழ்க்கை அதை அங்கீகரிக்காதபோது அதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி. சமூகத்தின் உணர்வுநிலையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டிருக்கும்போது, அந்த மாற்றத்தை செயல்படுத்த அரசு எந்திரம் தடையாக இருக்கும்போது ஆயுதம் உதவும். ஆனால் சமூகத்தின் உணர்வு நிலையையே மாற்றுவதற்கு ஆயுதம் உதவாது..."

"...சாதி குறித்து தெளிவான பார்வை இருந்தால் அதை ஒரே நாளில் சட்டம் போட்டு தடுத்துவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அதிகாரத்தை கைப்பற்றிய பின்பு, சாதி ஒழிப்பில் முக்கிய கவனம் செலுத்திய பின்னாலும் அது பண்பாட்டுத் தளத்தில் வெகுகாலம் நீடிக்கும். புலிகள் சாதிமறுப்பை தீவிரமாக கடைப்பிடிக்கிறார்கள். சொந்த சாதிக்குள் திருமணம் செய்வதை அமைப்புக்குள் தடை செய்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஷோபாசக்தி போன்றவர்களெல்லாம் பைத்தியங்கள். அவர்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. புலிகளுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு செய்பவர்கள் அரசின் கைக்கூலிகளாக கூட இருக்கலாம்..."

"...சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம் என்பதே பார்ப்பன எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும் தான். கடைசிவரையில் அவர் அதில் உறுதியாக இருந்தார். தமிழ்நாடு தமிழருக்கே என்ற அரசியல் கோரிக்கையை முன்வைத்தாலும் அரசியல் இயக்கம் எதையும் அவர் கட்டவில்லை. அமைப்புக்குள் ஜனநாயகத்தன்மையை கட்டமைக்காதது ஒரு மிகப்பெரிய குறை. தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற நிலையை அவர் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகத் தான் வீரமணி போன்றவர்கள் இப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தெளிவான கருத்தியலோ, அறிவியல் கண்ணோட்டமோ பெரியாரிடம் இல்லாததால் தான், அவர் பெயரைச் சொல்லி ஜெயலலிதாவால் அரசியல் நடத்த முடிகிறது..."

பேட்டியை முழுமையாகப் படிக்க இங்கு அழுத்தவும்

அவமானச் சுவர் மீது சில கருத்துக்கள்

அவமானச் சுவரைப் பற்றிய இந்தக் கட்டுரையை ( thamuyesa (தமுஎச): அவமானச் சுவர்) வாசித்தபின் எனக்குத் தோன்றியவை:

ஆதிக்க சாதி இந்துக்களுக்கு அரசு, அதிகாரிகள், காவல் துறை, கட்சிகள், பெரும் மக்கள் படை, ஊடகங்கள், செல்வம் என எல்லா ஆதரவுகளும் இருக்கின்றன. அனைத்துக்கும் மேலாகத் தாங்கள் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் என்ற சாதிய இறுமாப்பும் இருக்கிறது. ஆனால் இதுநாள் வரையில் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு அவமதிக்கப்படும் தலித்துகளுக்கு ஆதரவு எது? பெரும்பான்மையாக இருக்கிற சாதி இந்துக்களின் மனங்களிலே 'தாம் உயர்குடிகள்' என்ற நினைப்பு ஒழிந்து, அனைவரும் மக்கள்தாம் என்ற புரிதல் வந்தாலொழிய அங்கே அமைதி நிலவாது. இவ்விடத்தில் வலுத்தவர்கள் இரண்டு விதங்களில் செயற்படலாம். ஒன்று தங்களது அதிகாரங்களைத் தட்டியெழுப்பலாம். அல்லது தங்களிடம் இருக்கும் ஆன்மாவைத் தட்டியெழுப்பலாம். ஆன்மாவைத் தட்டியெழுப்புவது கடினம். அதற்கு இத்தனைக் காலங்களாக, பரம்பரை பரம்பரையாகச் சேர்த்து வைத்திருந்த சாதிய 'உயர்வை'த் தொலைக்க வேண்டியிருக்கும். எல்லோரும் ஒன்றுதான் என்ற சமத்துவத்தின் தாங்கமுடியாத அவமானத்தை, தலித்துகளும் தாமும் ஒரே பிறவிதான் என்ற உண்மையின் வலியைத் தாங்க வேண்டியிருக்கும். தாம் மட்டுமே துய்த்து வந்த ஊர் வசதிகளான குளம், கிணறு, பள்ளி, கடை, கோயில் எல்லாவற்றிலும் சம உரிமையை தலித்துகளோடு பகிர்ந்துகொள்ளவேண்டிய கீழ்நிலையை அடைய நேரும். ஆனால் மற்ற தேர்வான அதிகாரத்தைக் கையிலெடுப்பது சுலபம். கூப்பிடு தூரத்தில் தம் சாதியைச் சேர்ந்த செல்வாக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு, இப்படிப்பட்ட ஒரு போராட்டத்துக்கு என்னவிதமான தீர்வினை ஆதிக்க இந்துக்கள் எடுக்க முடியும்? சுலபமான தீர்வே. தம்மிடம் இருக்கும் எல்லா வளங்களையும் பயன்படுத்தி இந்தப் போராட்டத்தை அடக்கலாம், திரிக்கலாம், பூசி மெழுகலாம், ஒன்றுமே இல்லாமல் ஆக்கலாம்.

ஆக, இது ஆதிக்க சாதி மனிதருக்குள்ளே ஆன்மாவுக்கும் அதிகாரத்துக்கும் நடக்கின்ற போட்டி. எதைக் கையில் எடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். தலித்துகள் இன்றைக்கு 'தேசிய'த் தலைவர்களைக் கொண்டு வந்து சமத்துவத்தை நிலைநாட்டப் பார்க்கலாம். ஆனால் எல்லாக் கூட்டமும் போனபிறகு, எல்லா ஆதரவுகளும் அகன்ற பிறகு அங்கேயிருக்கும் சிறுபான்மை தலித்துகளுக்கு எவரால் பாதுகாப்பு அளிக்க முடியும்? ஆதிக்கம் செலுத்தும் சாதி இந்துக்களிடமிருந்து அவர்களது சாதிய வெறி அகன்று, எல்லா மனிதர்களும் சமம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டால்தான் தலித்துகளுக்குப் பாதுகாப்பு. அப்போதுதான் தலித்துகளுக்கு சமவுரிமையை அனுபவிக்கும் நிலை ஏற்படும்.

ஆதிக்க சாதி இந்துக்களிடையே, உத்தப்புரமாகட்டும், இந்தியாவின் வேறு எப்பகுதியுமாகட்டும், 'தாம் உயர்ந்தவர்கள்' என்ற நிலையை உடைக்க, எல்லோரும் சமம் என்ற உணர்வைப் பரப்ப அரசும், சமூக அமைப்புகளான கோயில்கள், சங்கங்கள் முதலானவையும், ஊடகங்களும் என்ன செய்கின்றன? நம் சமூகச் சூழலில், சிறுமைக்கும், பெருமைக்குமான வேறுபாடு தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்டே வருகிறது. உதாரணமாக இந்தத் தொழில் செய்வது அசிங்கம், இது உயர்ந்த தொழில் என்று இடைவிடாது சுட்டப்படுதல். சுபவீ அவர்களின் கட்டுரை ஒன்றில் படித்தபோதுதான் திருக்குறளின் ஒரு வரி சுள்ளென்று உறைத்தது, "சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்." அதாவது செய்கின்ற தொழிலால் சிறப்பு வந்து சேர்வதில்லை. எல்லாத் தொழிலும் ஒன்றுதான். ஆனால் வருணாசிரமத்தின்படி கட்டமைக்கப்பட்ட நம் சமூகத்தில் இது பெரிது, இது சிறிது என்ற தொடர்ச்சியான புகட்டுதல் நடந்தபடியே இருக்கிறது. இது நம் இரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. அதனால்தான் டெல்லியில் இடவொதுக்கீட்டை எதிர்த்த மருத்துவ மாணவர்கள் இனி நாங்கள் சிரைக்கவும், சாலை கூட்டவும் போகலாம் என்று வேடம் போட்டு, அத்தொழில்களை அவமதிக்க முடிகிறது. இது மேன்மை, இது பெரிது, இதுதான் உயர்ந்தது, புனிதமானது என்று தொடர்ச்சியாக ஒரு கற்பிதம் இந்தியக் காற்றில் செறிந்து அடர்ந்து மிதக்கிறது. மேகக்கூட்டத்தைப் போல அது இந்தியப் பெருநிலமெங்கும், ஏன் கடல்களைக் கடந்து வாழும் இந்தியர்களிடையேயும் அது கவிந்துகொள்கிறது. சாதிய இந்துக்கள் அந்த உயர்ந்த கற்பிதத்தைத்தான் சுவாசிக்கிறார்கள். அந்த உயர்ந்த நிலையினை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், தாழ்ந்தவர்களிடமிருந்து தம்மைத் தெளிவாக, நன்றாகப் பிரித்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த அமைப்பை இந்து மதமும், அதன் ஆணி வேரான வருணாசிரமும் நன்கு காப்பாற்றி வைத்திருக்கின்றன. பிறப்புவாரியாக உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் ஒரு மதமும், அதனைக் குறை களையாது அப்படியே பின்பற்றுவோரும், அதற்காகப் பெருமை கொள்வோரும் இருக்கின்றவரை இந்தியர்களிடையே ஒற்றுமை இருக்காது. சமூக மாற்றத்தை, தனிமனிதருக்குள்ளே மாற்றத்தை ஏற்படுத்தாமல் வெறுமனே அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்வது பயன் தராது.

நான், எங்க தாத்தா மற்றும் கமலஹாசனின் தாயுள்ளம்

வாரமானாலும், வாரக் கடைசியானாலும் விடியலிலிருந்து எனக்குச் சுழல்வதாகத் தெரியும் கடிகாரம் என்னையும் நிறுத்துவதில்லை. என்னால் இந்த இயக்கமின்றியும் ஓய்ந்திருக்க முடியாது. இது சைக்கிளை மிதிப்பதை நிறுத்திவிட்டால் விழுந்துவிடுமோ என்ற அச்சங்கொண்ட ஓட்டமில்லை. காற்றைக் குடித்து நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். சில நேரம் பாயும். பதுங்கித் தேங்கும். கழிவு கலக்கும். தெளியும். ஆறு மாதிரிதான். நேற்று மதியம் தோட்டத்தைக் கொத்தி, வாழைக் கன்று வைத்து, புல்லுக்கு மருந்தடித்துப் பின் மதியம் பிள்ளைகளோடு கதை படித்தேன். பெரியவர் பள்ளிக்குப் போகிறார். அஞ்சரையாச்சே. பள்ளிக்குப் போகும் வரை தமிழில் இனித்த வாய் இப்போது ஆங்கிலத்துக்கு அடிக்கடித் தாவுகிறது. மீட்டு மீட்டுக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. வாரக் கடைசித் தமிழ்ப் பள்ளி கொஞ்சம் உதவுகிறது. மற்றபடி பிள்ளை தமிழில் பேசுவது வீட்டின் கையில்தானிருக்கிறது. ஒரு பெரிய ஆங்கில வெள்ளத்தை எதிர்த்துத்தான் தமிழ் வாய்க்கால் பாயவேண்டியிருக்கிறது.

செவுடர் தாத்தா அப்பாவுக்குச் சித்தப்பா. செவுடர் என்பதை வசையாகவோ ஊனமாகவோ உணர்த்தப்பட்டதே இல்லை. அது ஒரு காரணப் பெயர். வெளிச்சியன், கருப்பையா என்பதுபோல் செவுடர். ரொம்பச் செவிடில்லை. எல்லாம் புரியும். பழனி அவர் பெயர். அவருக்கான மரியாதை அவருக்குக் கிடைத்தே வந்தது. 85 வயது வரை வேலை செய்தார். போன வாரம் செத்துப் போனபோது அவருக்கு வயது 95. எனக்குத் தெரிந்து தினமும் சாராயம் குடித்தார். சந்தோசமாகச் சிரித்தார். அவரது அண்ணியான என் அப்பாயியை வாய்ச்சண்டைக்கிழுப்பார். வெத்தலையும் புகையிலையும் சாராயமும் கலந்து மணக்கும் அவரது அண்மைக்கு இழுத்து "முட்டை முக்காக் காசு, முழு முட்டை எத்தனைக் காசு?" என்று கேள்வி கேட்பார். சுருக்குப் பையில் காசு வைத்து வேட்டி மடியில் முடிந்திருப்பார். ஒரு முறை எல்லோருக்கும் அவ்வைந்து காசு கொடுத்தார். சிரிப்பும், ஆர்ப்பாட்டமும், உழைப்புமாய்க் கழிந்துபோன அவரது வாழ்வுக்கு என் வணக்கம்.

கமலஹாசன் ஒகேனக்கல்லில் பேசியது பிடித்திருந்தது. மற்றவர்களது பிடிக்கவில்லை என்பதில்லை. அதிலும் கமல் பேசியதில் ஒன்று. தாய்மையுள்ளம் வேண்டும் என்றது. சில நாட்களாகவே அவ்வப்போது இந்த யோசனை எழுவதும் அமிழ்வதுமாக இருக்கிறது. கீற்றில் சில வாரங்களுக்கு முன் யாரோ எழுதியிருந்த சிறு பத்தி கிளப்பிய பொறிதான் அது. உலகின் போர்கள் அனைத்திற்கும் பின்னணியில் ஆண்களின் வெற்றிகொள்ளும் மனோநிலைதான் இருக்கிறது. குழப்பங்களின் முக்கியக் காரணி அது என்பதாக இருந்தது அப்பத்தி. சுட்டி கிடைத்தால் தருகிறேன். உண்மையாகத்தான் தோன்றுகிறது. ஆண்கள் மற்றவொரு ஆணை விஞ்சுவதில் அக்கறை காட்டுகிறோம். இது பெண் இணையைப் புணர்வதற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளும் பரிணாமப் பண்பிலிருந்து கிளைத்ததாகக் கூட இருக்கலாம். போட்டி மனப்பான்மை. ஐந்து ஆண்கள் மட்டும் இருக்குமிடத்தில் பிரச்சினை இராது. அங்கே ஒரு பெண் வந்துவிட்டால் பிரச்சினை முளைக்கும் என்று பெண்ணின் மேல் பழியை வைப்போம். ஆனால் பிரச்சினை பெண்ணால் வருவதில்லை. அப்பெண்ணை அடைவதற்கு ஆண்களினிடையே தோன்றும் போட்டியினால் வருவதே பிரச்சினை. கமலஹாசன் பேசியது தாயுள்ளம் வேண்டுமென்று. பெண்ணுறுப்புத் தேவையில்லை. எல்லோருக்குள்ளும் தாயுள்ளம் இருக்கிறதென்று. உண்மை. அதைக் கண்டுகொண்டோமானால் மற்றவரை மன்னிக்கவும், ஏற்றுக் கொள்ளவும், அரவணைத்துப் போகவும் முடியும். தாயுள்ளம் அடிமைத்தனமில்லை. அது பகுத்தாய்வது. ஆராய்ந்து கொள்வது. தாயுள்ளம் போராட்டக் குணம் மிக்கது. தற்காப்புக்காக மட்டுமேயன்றிப் பிறரின் சொத்தினை அபகரிக்கும் நோக்கோடு அது போராட்டத்தினைத் தொடுப்பதில்லை. தன் குட்டிகளைத் துன்புறுத்த வரும் ஒருவரைத் தாக்கி விரட்டும் அதே மூர்க்கம்தான் அடுத்தவரது குட்டிகளைக் கொல்லுதல் கூடாது என்ற புரிதலையும் தருகிறது. ஆண் விலங்குகளில் எத்தனையில் இக்குணத்தைக் காணவியலும்? ஆட்சியதிகாரங்களை வைத்திருப்பவர்கள் தாயுள்ளத்தோடு இருக்க வேண்டும், கர்நாடகம், தமிழகம், அமெரிக்கா, யாராயினும். பெண்ணாக இருக்கும் ஆண்களுக்குத் தாயுள்ளம் சாத்தியப்படாது. ஆண்+அவம் = ஆணவம். ஆணவம் என்பது ஆணின் அவம் (கீழான, பயனற்ற). அப்படின்னா போராட்டம் தேவையில்லையா? தேவைதான். போராட்டம் என்பது ஒரு சுழல். எங்கு எது ஒரு போராட்டத்தைத் தொடங்கிவிட்டதோ அவ்விடத்திலேயேதான் அப்போராட்டம் முடிவுறும். குழந்தைகளோடு விளையாடிப் பாருங்கள், புரியும்!

தலைப்பு: இன்றைய பதிவர் வட்டத்தில் இது ஒரு பிரச்சினை. எனக்கும், என் தாத்தாவுக்கும் (நானறிந்தவரை) கமலஹாசனோடு எவ்வித உறவுமோ அல்லது கொடுக்கல் வாங்கலுமோ கிடையாது. நான் எழுத வந்தவற்றைப் பற்றித் தலைப்பில் குறிப்பிட வேண்டும், ஆனால் அப்படிக் குறிப்பிடும்போது உங்களது மனம் உங்களையும் அறியாமல் அவற்றை ஒன்றோடொன்று தொடர்புபடுத்திக் கொள்ளும். இதை அறிந்திருந்தும் இப்படி ஒரு தலைப்பையோ அல்லது "கமலஹாசனை விட்டுப் பிரிந்த எங்க தாத்தா" என்பதான தலைப்பையோதான் நான் வைக்க வேண்டியிருக்கிறது!

மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்

சுற்றுச்சூழல் ஆர்வலரும், புதிய தென்றல் இதழ் இணை ஆசிரியரும், மனித உரிமைப் போராளியுமான தி. ஆனந்தராம்குமார் () அசுரன் அவர்கள் அண்மையில் அவரது 38ஆம் வயதில் மறைந்தது அறிந்திருப்பீர்கள். தன்னுடைய இறுதி மூச்சு வரை மக்களுடைய அடிப்படைப் பிரச்னைகளை முன்வைத்து எழுதியும், போராடியும் வந்தார். கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில், நாகர்கோவில் ராஜேந்திரா சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். உடல் நோயால் அவதியுற்ற நிலையிலும் திண்ணை இணைய இதழ், புதிய தென்றல் இதழ்களில் எழுதி வந்தார். மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுதே புதிய தென்றல் இதழில் இணையாசிரியராக மும்முரமாகப் பணியாற்றினார். பின்பு நோய் முற்றிய நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திண்டுக்கல்லில் இருந்து வெளியாகும் "புதிய கல்வி" என்ற சுற்றுச்சூழல் இதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய அசுரனுக்குச் சில ஆண்டுகள் முன்புதான் திருமணம் நடந்தது.

அசுரனின் தொண்டு பற்றிய செய்திகளைப் பின்வரும் சுட்டிகளில் படிக்கலாம்.

http://makkal-sattam.blogspot.com/2007/12/blog-post_22.html

http://madippakkam.blogspot.com/2007/12/blog-post_6603.html

http://athirai.blogspot.com/2007/12/blog-post_1945.html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20712277&format=print


அசுரனின் சில எழுத்துக்களைப் பின்வரும் சுட்டிகளில் படிக்கலாம்.

http://www.thinnai.com/?module=archives&op=searchauth&search_string=+அசுரன்

http://www.keetru.com/puthiyathendral/index.php


அசுரனின் தன்னலமற்ற பணிகளை நினைவுகூர்ந்து அவரது வாழ்க்கையைப் போற்றும் வண்ணம் அவரது சிந்தனைகளையும், சிறந்த எழுத்துக்களையும் தொகுத்து நூல் வடிவில் கொண்டு வர விரும்புகிறோம். அசுரனின் செயல்பாட்டின் மீது நம்பிக்கை கொண்ட எத்தனையோ வாசகர்களும், களப்பணியாளர்களும் அந்த நூலை வாங்கிக் கவுரவிப்பார்கள் என்ற முழுநம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அந்நூல் விற்பனையில் வரும் தொகையனைத்தையும், அசுரனது இளம் மகளது எதிர்காலக் கல்விக்காக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்துக்கு பொருளுதவியளிக்க விரும்பும் நல்ல உள்ளங்கள் பின்வருவோரைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். சிறு உதவிகள் கூட பெரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளப் படும்.

இந்தியா:

எஸ். பி. உதயக்குமார்

தொலைபேசி: 91-4652-240657

drspudayakumar@yahoo.com

அமெரிக்கா:

சொ. சங்கரபாண்டி

தொலைபேசி: (443) 854 -0181

sankarfax@yahoo.com

பழங்குடி மக்களைப் பற்றிய கட்டுரை ஒன்று

தமிழக வரலாறு என்றதும் மூவேந்தர்களோடும், விடுதலைப் போராட்டம் என்றால் மிகக் குறுகிய எண்ணிக்கையுள்ள அரசியல் தலைவர்கள், மன்னர்கள் என்பதோடும் நின்றுவிடுகிறது நம் கல்வி.
ச. பாலமுருகன் கீற்றில் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையில் (பழங்குடி மதிப்பீடுகள் நம்பிக்கைகள்) பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, இயற்கையோடு அவர்கள் கொண்டிருந்த கொடுக்கல் வாங்கல் உறவுகள், தம் பகுதியின் மீதான ஆக்கிரமிப்பினை அவர்கள் எதிர்த்த வீரம், இந்திய விடுதலைப் போரில் அவர்கள்து பங்கு ஆகியவற்றை அழகாகத் தொகுத்துள்ளார். மேலும், பழங்குடியினருக்கும் அவர்களது வாழ்வாதாரமான மலை/காடுகளுக்கும் தற்போது பொதுமக்களாகிய நாமும், நாம் அங்கம் வகிக்கும் அரசாங்கமும் நிகழ்த்தும் இடர்களையும் காட்டியுள்ளார். நீங்கள் வாசிக்க வேண்டிய கட்டுரை. இவர்தான் சோளகர் தொட்டியை எழுதிய பாலமுருகனா என்று தெரியவில்லை. அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

சிலுவையில் தொங்கும் முயலும், முட்டையும்

இந்த வருடமும் ஈஸ்டர் வருகிறது! வழக்கம் போலவே முயலையும், முட்டையையும் கடைகளில் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். பலூன் முயல், பஞ்சு முயல், துணி முயல், முட்டை முட்டாய், முட்டை ரொட்டி, முட்டைக்குள் முட்டாய் என்றும், டோரா முட்டை, ஸ்பைடர் மேன் முட்டை என்றும் பலவகையாக நீங்கள் பார்க்கலாம். இந்நாட்களில் ஏசுவை விட, புனித வெள்ளியைவிட அதிகமாகப் பேசப்படுவது ஈஸ்டர் கொண்டாட்டம், அப்போதைய துணிக்கடைத் தள்ளுபடிகள், பீர் கடை கொண்டாட்டங்கள் இவை பற்றித் தாம். ஒரு மனுசன், நீங்க யோசிக்கிறதுக்கு நாலு தத்துவத்தைச் சொல்லிட்டு, உங்ககிட்ட அதைச் சொன்னதுக்காக சிலுவையில தொங்கிப் போனாரே அதை நெனைக்கிறீங்களா, அல்லது அவரு மறுபடியும் வந்தாருன்னு கொண்டாட நெனைக்கிறீங்களா, அல்லது உங்களுக்கு சுகமும் துக்கமும் கொண்டாட்டாந்தான் என்ற பேரின்ப நிலையில இருக்கீங்களா? ஒன்னுமே புரியலையேப்பா. அது சரி, என்னத்துக்கு இத்தனை முட்டை? முட்டைக்கும் ஈஸ்டருக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை 40 நாள் விரதமிருந்தவங்கள்லாம் விரதம் முடிக்கிறப்ப தெம்புக்காக முட்டை சாப்பிடுவாங்களான்னு யோசிச்சேன். இருக்கலாம். ஒருத்தரு சொன்னாரு, முட்டை என்பது உயிர்ப்பின் அடையாளம். அதுக்குள்ளேருந்துதான் எல்லாம் வருது. அதே மாதிரி ஏசுவும் மறுபடியும் வருவார். சரி, இருக்கட்டும், முயல்? அதுவா, அது வந்து ஸ்பிரிங்க் வருதுல்ல, அது. துள்ளித் துள்ளிக் குதிக்குதுல்ல, அதான். ரொம்பச் சரி. உங்க கடைகளையும், 50% சிறப்புத் தள்ளுபடி விளம்பரங்களையும் பாத்துட்டு, உங்களுக்காகத் தொங்கின ஆளோட ஆத்மா சாந்தியடைஞ்சாச் சரிதான்.

படம்: எல்லாப் பெற்றோர்களும் தலா 12 பிளாஸ்டிக் முட்டைகளை வாங்கி அதற்குள் பரிசை (மிட்டாய் என்று அர்த்தம்) வைத்துப் பள்ளிக்கூடத்துக்குக் கொடுத்துவிட வேண்டும். அங்கே ஆசிரியர்கள் அதை 'ஒளித்து' வைத்துவிட்டுப் பிள்ளைகளைக் கண்டுபிடிக்கச் சொல்வார்கள். நல்ல செய்தி என்னவென்றால், ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு எண்ணைச் சொல்லிவிட்டு அந்த எண் போட்டிருக்கும் முட்டையைத்தான் அந்தப் பிள்ளை கண்டுபிடிக்க வேண்டும். ஆசிரியர்கள் ஒவ்வொரு எண்ணையும் 12 முட்டைகளின் மேல்தான் போடுவார்கள். இதனால் எல்லோருக்கும் ஒரே எண்ணிக்கையுள்ள முட்டைதான் (12) கிடைக்கும். தெறமை இருக்க புள்ள பொறுக்கிக்கன்னு விட மாட்டாங்க. ஏன்னா சில பிள்ளைகள் பொறந்ததுலேருந்து முட்டை பொறுக்கிக்கிட்டே இருக்கும், சிலதுகளுக்கு முட்டைன்னா என்னன்னே தெரியாது, அதை எங்க ஒளிச்சு வைப்பாங்கன்னே தெரியாது. அப்படி இருக்கப்ப “இந்தா புள்ளைகளா, இங்கின 240 முட்டை இருக்கு, தகுதியும் தெறமையும் இருக்க புள்ளைக போயி பொறக்கிக்கங்க”ன்னா வகுப்பு வெளங்குமா? அதுக்குத்தான் சமமாக் குடுக்கணும்கறது. படம் மாசிலன் எடுத்தது.

கறுப்பும் வெளுப்பும்

இந்த ஒளிப்படத்தைப் பாருங்கள். 


குற்றவாளி என்று கருதப்படும் ஆள் ஓடுகிறார். அவரைத் துரத்துகிறது போலீஸ் கார். அவர் தப்புவதற்காக சாலையோரத்துக்கு ஓடுவதற்குள் அவரை அடித்துத் தூக்கியெறிகிறது கார். சற்றைக்குப் பின் அவர் மேல் காரை மோதியதைப் பெருமையோடு நண்பர்களோடு பகிர்ந்துகொள்கிறார் காவலர். அடிபட்டது கறுப்பர். காவலர் வெள்ளையர். இது நேற்று வெளிவந்திருக்கும் செய்தி. அடிச்சது சரிதான் என்று சிலர். என்ன இருந்தாலும் இப்படியா என்று சிலர். தெரியாம அடிச்சுட்டாரு என்றொரு போலீஸ்காரர். இப்படி அடிச்சதோட இல்லாம அதப் பத்தித் தம்பட்டம் அடிச்சுக்குற போலீஸ் எங்களுக்கு வேணாம் அப்படின்னாங்க கூட வேலை செய்யுற அம்மா. 


கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதுல இயக்குனர் மறைந்திருந்து படம் பிடிக்கிறார். சில பதின்ம வயதுப் பையன்களைக் கொண்டு அங்கே நிறுத்தியிருக்கும் கார் ஒன்றின் மீது (அவர்களது கார்தான்) பெயிண்டால் கிறுக்கவும், ஏறிக் குதிக்கவும் சொல்கிறார். அது வழியே நடந்து போகிறவர்கள் என்ன மாதிரி நடந்துகொள்கிறார்கள், யாரேனும் போலீஸைக் கூப்பிடுகிறார்களா, அந்தப் பையன்களைக் கண்டிக்கிறார்களா என்று பார்க்கிறார். முக்கியமானது - அந்தச் சோதனையை வெள்ளைக்காரப் பையன்களைக் கொண்ட ஒரு குழுவைக் கொண்டும், கறுப்புப் பையன்களைக் கொண்ட ஒரு குழுவைக் கொண்டும் நிகழ்த்துகிறார். வெள்ளைக்காரப் பிள்ளைகள் அட்டகாசம் செய்தபோது தட்டிக் கேட்டவர்கள் ஒன்றோ என்னவோ. 911க்கு ஒருத்தரோ இரண்டு பேரோதான் கூப்பிட்டார்கள். ஆனால் அதையே கறுப்புப் பையன்கள் செய்யும் போது 911 அனல் பறந்தது, யார் யாரோ வந்து கேட்கிறார்கள். இது எதைக் காட்டுது? கறுப்பர்கள் என்றாலே தப்பு செய்பவர்கள், கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதாக நம்மிடையே வளர்க்கப்பட்டிருக்கும் மனோநிலையைத்தான்.


தென் கரோலினாவில் கறுப்பர்கள் நிறைய. மேற்கண்ட ஒளிப்படம் சில அதிர்வுகளைப் பரப்பும். நேத்து ராத்திரி ஒபாமா, நிறப் பாகுபாட்டைக் களைய வேண்டும் என்று பேசியிருக்கிறார். உரையாடலையாச்சும் தொடங்குவாங்க. 


சில புழுக்களை ராணியாக்குவது எப்படி?

தேனீக்களின் வாழ்க்கையிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். சமூக ஒழுங்கு மட்டுமில்லை, புதுப்புது உயிரியல் விளக்கங்களையும் தேனீக்களிடமிருந்து பெறலாம். அதுமாதிரியாக வந்திருப்பதுதான் இந்தப் புதுக் கதை. உங்களுக்கு ராயல் ஜெல்லின்னா என்னன்னு தெரியுமா? வளர்ந்த தேனீக்களின் தலைப்பகுதியில் (உமிழ்நீர் சுரப்பிகளுக்கருகில்) ராயல் ஜெல்லி சுரக்கிறது. அதுவே தேனீக்களின் புழுப் பருவத்தில் முக்கியமான உணவு. எல்லாப் புழுக்களும் ஒன்றுதான். ஒரே ராணித் தேனீயால் இடப்பட்ட முட்டையிலிருந்து வந்தவைதான். எல்லாப் புழுக்களுக்கும் சில நாட்களுக்கு ராயல் ஜெல்லி கிடைக்கும். ஆனால் தொடர்ந்து அதிக அளவில் ராயல் ஜெல்லி மட்டுமே புகட்டப்படும் புழுக்கள் மட்டுமே பின்னாளில் ராணித் தேனீயாகின்றன. புரிந்துகொள்ள வேண்டிய 1) ராயல் ஜெல்லியைத் தாராளமாகச் சாப்பிடும் புழுக்கள், இனப்பெருக்கத் திறனும், நீண்ட ஆயுளும், பெரிய உருவமும் கொண்ட ராணித் தேனீக்களாகின்றன; அதே வேளையில் ராயல் ஜெல்லி கொஞ்சூண்டு கிடைத்த புழுக்கள் சிறியதான, குறைந்த ஆயுளைக் கொண்ட, மலட்டுத்தன்மை கொண்ட வேலைக்காரத் தேனீக்களாகின்றன. அப்படின்னா அந்த ராயல் ஜெல்லியில என்னமோ இருக்கு. சரி அடுத்த கட்டத்துக்குப் போவோம்.

நம் உடம்பு மரபலகுகளின் (ஜீன்கள்) வேலைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதாவது ஒரு மரபலகு எல்லா நேரங்களிலும் எல்லாத் திசுக்களிலும் இயங்கிக் கொண்டு இருப்பதில்லை (இயங்குதல் என்பது அதற்கான புரதத்தை உண்டாக்குதல் எனக் கொள்க). சில நேரம் அமைதியா இருக்கும். அந்த அமைதிக்குக் காரணம் அந்த மரபலகின் மூலக்கூறுகளில் (டி.என்.ஏ) ஏற்படும் ஒரு சின்ன வேதியியல் மாற்றம், Methyl ஏற்றம். (சரக்கு அடிச்சா அதுல இருக்கது Ethyl alcohol. எத்திலை விடக் கொஞ்சம் சிறியது மெத்தில். ஆனா நீங்க சரக்கடிக்கிறதுக்கும் இதுக்கும் எதுனா சம்பந்தம் இருக்கான்னு கேக்கப்படாது. இல்லன்னு நானும் சொல்ல முடியாது!). மெத்திலேற்றம் நடந்த மரபலகு அமைதியா இருக்கும். அமைதியா இருந்தா அது உண்டாக்க வேண்டிய புரதம் உண்டாகாது. அந்தப் புரதம் இல்லன்னா அந்த செல்லோட வேலைப்பாடு மாறும். ஒன்ன மாதிரி நாலு பேரு இருந்தா வேலை நடந்துடும் அப்படின்னு நாம சொல்றது இல்லையா. அதுமாதிரிதான், ஒரு நாலு புரதங்கள் சேர்ந்தா, அல்லது இல்லாமப் போனா, உடம்பே மாறிப் போயிடும். இந்த மெத்திலேற்றத்தைச் செய்யும் ஒரு நொதிக்குப் பேர் DNMT3. சில மரபலகுகளை DNMT3 மெத்திலேற்றம் செய்து வைக்கும்போது அந்த மரபலகு அமைதியாக இருக்கிறது. இப்போ நீங்க DNMT3 ஐ லபக்குன்னு புடுங்கி எறிஞ்சுர்ரீங்க, அப்போ என்னாகும், எந்தெந்த மரபலகுகளை DNMT3 அமுக்கி வைத்திருந்ததோ அதெல்லாம், மடை திறந்த வெள்ளமாகப் பாயும். அந்தப் புரதங்களெல்லாம் அதிகமாக உருவாகி, செல்லை, உடம்பை மாற்றும். புரிந்துகொள்ள வேண்டிய 2) DNMT3 ஒரு விசை. அதை இயக்குவதன் மூலம் முக்கியமான மரபலகுகளின் வேலைகளை இயக்கலாம். சரி, இதுக்கும் தேனீக்கும் என்ன சம்பந்தம்? அதான் அடுத்தது.

தேனீக்களின் புழுக்கள்ல இருக்க DNMT3 ஐ நீக்கிட்டா அந்தப் புழுக்கள் எல்லாம் ராணித்தேனீயா மாறுது. பூம்!! ராயல் ஜெல்லி புகட்டாமலேயே இது நடக்குது. இது எப்படி நடக்குது? DNMT3 இல்லாத போது புழுக்களில் இருக்கும் 'இராணித் தேனீயாக்கும்' புரதங்கள் தங்குதடையின்றி உருவாகின்றன. சாதாரணப் புழுக்களில் ராயல் ஜெல்லியை நன்றாகப் புகட்டினால்தான் இப்படியான ஒரு நிலை ஏற்படும். அப்படியென்றால், ராயல் ஜெல்லி எப்படியோ ஒரு வழியாக DNMT3 மூலம் ஏற்படும் மெத்திலேற்றத்தைக் குறைத்து ராணியாவதற்குரிய வழியைச் செய்கிறது. புரிந்துகொள்ள வேண்டிய 3) தேன் புழுக்களின் உடலிலிருந்து DNMT3 ஐக் கழற்றிவிட்டால் அத்தனையும் ராணியாகிவிடும்.

அதுனால என்னா இப்ப?
1) நாம் இயற்கையைப் படுத்தும் பாட்டில் உலகம் முழுக்கத் தேனீக்கள் குறைந்துகொண்டே வருகின்றன. ராணித் தேனீக்களை நிறைய உருவாக்கினால் கூடுகளை உயிர்ப்பித்துவிடலாம் என்று கருதுகிறார்கள்.
2) ராயல் ஜெல்லியை ஏற்கெனவே புட்டியில அடைச்சு வச்சு, நீடித்த வலிமை, குன்றாத இளமை, அழகு அப்படின்னு கந்தர் சஷ்டி கவசம் பாடினா கிடைக்கக் கூடிய அத்தனை நன்மைகளும் ராயல் ஜெல்லியால கிடைக்கும் அப்படின்னு ஒரு இணையத்துல கடை கட்டிக்கிட்டுத் திரியிறாங்க்ய. அவங்களுக்கு லாபம் பார்க்க இன்னொரு 'அறிவியல் கண்டுபிடிப்பு.'
3) தேனீக்களுக்கு என்ன? DNMT3 இன்னும் எதுக்குத் தேவைன்னு தெரியாத நிலையில் அதைப் புடுங்கி எறியுறது தேனீக்களுக்கு ஆபத்தாகப் போகலாம். இன்னொரு மரபுமாற்றம் செய்யப்பட்ட வீரிய கொடுக்கால் இப்போதிருக்கும் தேனீக்கள் கொட்டப்பட்டு விரட்டப்படப் போகின்றனவா?

சைக்கிள் பாதை

வீட்டுலேருந்து வேலைக்கு 16 மைல். அந்தக் கார் நெரிசல்ல நகர்ந்து நகர்ந்து போறதுக்குள்ள மனுசனுக்கு சீவனத்துப் போயிரும். அப்படி அல்லாடுனப்பதான் புதுப் பேருந்து, எக்ஸ்பிரசாக்கும், ஒன்ன விட்டாங்ய. பெட்ரோல் விக்கிற விலையில மாசத்துக்கு நூத்தம்பது டாலர் பெட்ரோலுக்கே போகுதேன்னு தாடையைச் சொறிஞ்ச வேலையில இது நல்ல சேதிதானே. நம்ம வீட்டுக்குப் பக்கத்துல இருக்க சூப்பர் வால்மார்ட்டுலேருந்து கிளம்புது. சுமார் 40 நிமிசத்துல வேலைக்கு வந்துடலாம். போக ஆரம்பிச்சேன். படிக்கலாம், தூங்கலாம், நாம பஸ்சை ஓட்ட வேண்டியதில்லை. பஸ் புடிச்சிருச்சு.

இந்த ஊரு பஸ்ல எல்லாம் முன்னாடி, வெளிய, ஒரு சின்ன rack இருக்கு. அதுல ரெண்டு சைக்கிள் வச்சுக்கலாம். போற எடத்துக்கெல்லாம் சைக்கிளையும் எடுத்துக்கிட்டுப் போகலாம். அதைப் பார்த்ததும் எனக்கும் சைக்கிள் ஆசை வந்துடுச்சு. ஆனா பிரச்சினை வீட்டுலேருந்து வால் மார்ட்டுக்கு வர்றது 55 மைல் வேகப் பெரிய ரோடுதான். அதுல சைக்கிள் பாதையும் இல்ல. ஒரு ஞாயித்துக் கெழம சைக்கிளை எடுத்துக்கிட்டு அது வழியாத் திரிஞ்சப்ப ஒரு சின்ன உள் ரோடு இருக்கதைக் கண்டுபிடிச்சேன். அது ஒரு காடு மாதிரி இருக்கும். Campground இருக்க இடம். ஒரு அழகான சின்ன ஏரி, அல்லது பெரிய குளம். நிறைய மரங்கள். வளைந்து வளைந்து போகும் பாதை. காரோடு முட்டிக்கத் தேவையில்லாம சின்ன நடை/சைக்கிள் பாதை. ஆகா. கிளம்பிட்டேன். இப்பதான் கொஞ்சம் குளிர் குறைஞ்சுக்கிட்டு வருது.

நேத்து நல்ல வெய்யில். சைக்கிள்லதான் வந்தேன். ஊர்ல இருக்கும்போது, விடுமுறைக்குப் போகும்போதோ தங்கமணியுடன் சேர்ந்துகொண்டு பெரியாறு, கருப்பர்கோயில் அப்படின்னு சைக்கிள்ல திரிவோம். சைக்கிள்ல போயிக்கிட்டே அவனைக் கூப்பிட்டேன். இருந்தான். கொஞ்ச நேரம் கதையடிச்சோம். அப்புறம் அமெரிக்கக் குடிநீர்ல மருந்து கலந்திருக்காம்னு பேச்சு வந்துச்சு. செயற்கை மருந்துகள். மண்ணுயிரிகளால் சாதாரணமாக அழிக்கப் பட முடியாத மருந்துகள். உங்க உடம்புல ரொம்ப நேரம் தங்கி வேலை செய்யணும்னே திடமாகச் செய்யப்பட்ட மருந்துகள். திடமாகவே மண்ணிலும், தண்ணீரிலும் தங்கிவிடுகின்றன. மறுபடியும் மனிதனுக்கே வருகின்றது என்று பதறுகிறார்கள். யாரு அப்படியாபட்ட மருந்துகளைக் கண்டுபுடிக்கச் சொல்லுறது? இயற்கை மருந்துகளைப் பற்றிய அறிவை நாம் சரிவரப் பயன்படுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்ம ஊர்லயே மஞ்சளிலிருந்து கிடைக்கும் curcumin என்ற மருந்தை, கூடுதல் செயற்பாட்டுக்காக வேதிமாற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதெல்லாம் சாதாரணமாக மட்கிப் போகக் கூடிய இயற்கை மருந்துப் பொருட்களை ப்ளாஸ்டிக் மாதிரி ஆக்கி உடம்பையும், வெளியையும் மாசுபடுத்துகின்றன. இதில் இந்த மருந்துக் கம்பெனிகளின் அராஜகம் தாங்க முடியாதது. இதெல்லாம் மாற வேண்டுமானால் மக்களின் உணவு முறையில், இயற்கை சார்ந்த உணவாக, வாழும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதை அமெரிக்கா விரும்பாது. இப்படியாக வளர்ந்த பேச்சு கீற்றின் பக்கம் திரும்பியது. யமுனா ராஜேந்திரன் சினிமா விமர்சனத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் சினிமாவின் விமர்சகர்கள், சினிமாவைப் பற்றிய இலக்கியப் படைப்பாளிகள் ஆகியோரை ஒரு வாங்கு வாங்கியிருக்கிறார். கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் உபபாண்டவம் படித்து முடித்து எஸ்.ராமகிருஷ்ணன் சுழற்றிவிட்டிருந்த பரிசலில் மிதந்துகொண்டிருந்தேன். சினிமா, மற்றும் சினிமா அரசியல் குறித்து எஸ்.ராவை யமுனா போட்ட போட்டில் பரிசல் ஆட்டம் கண்டுபோச்சு.

அ! வீடு வந்துடுச்சு. சைக்கிளை வெளியே சுவரோரம் சாய்த்துவிட்டு (ஏன்னா ஸ்டாண்டு இல்ல பாருங்க) வீட்டுக்குள்ள போனேன். ஒரு சிங்கம் பாய்ந்து வந்தது. ஆமா, அவங்க பள்ளிக்கூடத்துல இன்னக்கி சர்க்கஸாம். இவர்தான் சிங்கமாம். மூஞ்சியில அப்பின சாயத்தோட அப்பாகிட்ட காட்டுறதுக்காக நிக்கிறார். இனிமே பேச்செல்லாம் வேற இடங்களுக்குப் பறந்து போகும்.

சுஜாதா இன்னும் இறக்கவில்லை!

ஒவ்வொரு மரணமும் ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதங்களில் வினைபுரியத் தூண்டுகிறது. இதிலே ஒருவரைப் பற்றிய நிறுவப்பட்ட கதைகள் மற்றும் ஊடகங்களின் முன்னேற்பாடுகள் (பில்டப்புகள்) பெரும்பங்கு வகிக்கின்றன. பெருங்கூட்டத்தின் போக்கு சரியானதாகத் தோற்றம் பெறுகிறது. அதனால்தான் இராவண வதத்தையும், வீரப்ப சம்ஹாரத்தையும் கொண்டாடுகிறோம், நகுலனை அவரது எழுத்தழகையும் தாண்டி அனாதையாக அனுப்புகிறோம். தமிழ்ச்செல்வனுக்கு அழும்போது அழுகையைக் கண்டிக்கிறோம். சுஜாதாவின் மரணம் நிச்சயமாக எந்தவொரு மரணத்தையும் போலவே உற்றார், உறவினர், நண்பர்கள், விசிறிகள் என்பாருக்கு வருத்தத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் அவர் வாழ்ந்த காலத்தில் எந்தெந்த மக்களை எதிர்த்து எழுதினாரோ, செயல்பட்டாரோ, எந்த மனிதாபிமானமற்ற தன்மைகளுக்குக் கொடி பிடித்தாரோ, அத்தகைய செயல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இப்போது இவ்வளவு அழுகை ஏன் என்று கேட்கிறார்கள். இன்னும் யாரும் இதைத் தீபாவளியாகக் கொண்டாடவில்லை, அல்லது அவர் ஒரு இந்துத் தீவிரவாதி அவருக்காக அழுவது சட்ட விரோதம் என்று யாரும் சொல்லவில்லை. எனவே மரணித்தவர் ஒவ்வொருவரையும் எப்படிப் பாதித்தாரோ அதே வகையிலேயே அவரது மரணத்தை எதிர்கொள்வதே நேர்மையாக இருக்க முடியும். அமைதியாக இருத்தல் போலி மனிதாபிமானத்தைக் காட்டுமே தவிர எழுத்து நேர்மையாக இராது. சுஜாதாவின் மரணத்தால் வருத்தமுற்றிருப்பவர்களுக்கு எனது உண்மையான ஆறுதல். அதே மாதிரி சுஜாதாவின் கருத்துக்களின் மீது விமரிசனங்களை இந்நேரத்தில் வைப்பதும் அவரவரது தேர்வு.

சுஜாதா இன்னும் இறக்கவில்லை. அவரது கதைகளிலும், கருத்துகளிலும், ஒவ்வொரு சொல்லிலும் இன்னும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்!

காரால் அடித்துத் தூக்குவது எப்படி? விளக்கப் படம்!

பொதுவிடத்தில் அத்துமீறிக் கட்டப்பட்டிருந்த ஒரு கோயிலின் ஒரு பகுதியை நீதிமன்றத் தீர்ப்புக்கமைய இடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பக்த கேடிக்குச் சாமி வந்து, அம்பாசடர் ரதத்தை எடுத்துக்கொண்டு வந்து பொறியாளர்களை அடித்துத் தூக்கியிருக்கிறார்.
கடவுள் மேல் கொண்ட காதல் கண்களை மறைக்கிறது.(இதற்குத்தான் சொன்னான், ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்று!) அல்லது இது சாதாரண மதவெறி, சாதிவெறி, பணவெறி கேசா?
நடந்தது கன்னியாகுமரி மாவட்டத்தில். இது குறித்த பதிவெதுவும் என் கண்ணில் படவில்லை.

காரோடும் படத்தை ஓட்டிப் பார்க்க இதை அழுத்தவும்!

எனக்கு வாய்கண்ட மருந்து - திரிபலா

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிவற்றல் மூன்றும் சம அளவில் சேர்ந்தது திரிபலா. இது சூரணமாக இம்ப்காப்சில் (IMPCOPS, திருவான்மியூர் தலைமையகம் மற்றும் அடையாறு பார்மசி போன்ற மருந்துக் கடைகளில்) கிடைக்கிறது. திரிபலாவுக்குப் பல பயன்களைச் சொல்கிறார்கள். இப்போதைக்கு சொந்த அனுபவத்தில் நான் கண்ட இரண்டு:

தொண்டை வலி:
சளி பிடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தொண்டை ஒரு மாதிரி கரகரக்கும். அப்பவே தெரியணும், நமக்கு நாளைக்கு சளி பிடிக்கப் போவுதுன்னு. அந்த மாதிரி நேரத்துல நான் என்ன செய்வேன்னா, கொஞ்சம் திரிபலாவை எடுத்து சுடுதண்ணியில போட்டு, நல்லா வாய் கொப்பளிப்பேன். அம்புட்டுதான். சளி வராது. தொண்டைக்கும் இதமா இருக்கும். பிள்ளை அவ்வப்போது பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவரும் மற்ற தொண்டை வலிகளுக்கும் இது நல்ல மருந்து. வாய் கொப்புளிச்சுத் துப்பத் தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். முழுங்கினாலும் பெரிய பிரச்சினை இல்ல, இருந்தாலும் ரொம்ப சின்ன பிள்ளைங்களுக்கு வேணாம்.

பல்லிடுக்குப் பிரச்சினை:
சில நேரம் பல்லிடுக்கில் உணவுத் துகள் மாட்டிக் கொள்கிறது. காரட் துண்டு, ஆட்டுக்கறி இப்படி. அப்போது கவனிக்காம விட்டுட்டா, அடுத்த நாள் வலிக்கும். அப்போ அந்தத் துணுக்கை floss போட்டு எடுத்துட்டாலும் வலிக்கும். அந்த நேரத்தில் திரிபலாவை சுடுதண்ணியில போட்டு வாய் கொப்பளிச்சா, அல்லது அந்த இடத்தில் வைத்து லேசாக பல் தேய்ப்பது போலத் தேய்த்தால் வலி மாயமாய்ப் போகிறது. மற்ற வகை பல்/ஈறு வலிகளுக்கும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன்.