தமிழ்ப் பகுதிகளுக்குள் சிங்களக் கைதிகளை விடுவித்தல்

இலங்கையில் தெற்கிலிருக்கும் சுமார் 30,000 சிறைக்கைதிகளை விடுவித்து, வடக்கில் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அனுப்பி அப்பகுதியை "மேம்படுத்த" சிங்கள அரசு திட்டமிட்டிருக்கிறதாம். இச்செய்தியில் வரும் " Most of them are able bodied people with various skills, he added."
1. சிங்களச் சிறைக்கைதிகள் "உடற்கட்டமைப்போடு" இருப்பது சாத்தியமாம். ஆனால் வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் சத்துணவுக் குறைவால் அவதிப்படலாமாம். இவர்களுள் 5 வயதுக்குட்பட்ட 36,000 குழந்தைகளும் அடக்கம்.

2. சிறைக்கைதிகளும் மனிதர்கள்தாம், அவர்களை விடுவிப்பதிலோ, அவர்களும் திருந்தி வாழவேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் சிங்கள அரசின் ஆசிர்வாதத்தோடும், இனவாதக் கற்பிதத்தோடும் தமிழ்ப் பகுதிகளுக்குள் வந்து குடியேறப்போகும் "சிங்கள"க் கைதிகளால் தமிழர்களுக்கு ஆபத்துக்கள் அதிகம். அப்பகுதிகளில் வன்முறைகள் அன்றாடப் பிழைப்பாகிவிடும். சிங்களமயப்படுத்தலும் அரங்கேறும்.

3. தொடர்ந்து சிறையில் அடைபட்டிருக்கும் மக்கள் தம் கைவினைகளை மறந்துபோவார்கள். விவசாயமாகட்டும், வீட்டு வேலைகளாகட்டும், இதர கைத்தொழில்களாகட்டும், அவர்கள் காலங்காலமாக, பரம்பரை பரம்பரையாகக் கற்றுவந்த அத்தனைத் திறன்களும் அடைத்து வைத்தலில் அழிந்து போகும். சிறைக்கைதிகளின் "திறனை"ப் பயன்படுத்தத் துடிக்கும் சிங்கள அரசு, தமிழர்களின் திறன்களை மறக்கடித்து அழிக்க நினைப்பது இன்னொரு இனவதை.

4. வதை முகாம்களில் இருக்கும் 3 லட்சம் தமிழர்களை விடுவித்தால் அவர்களே தம் மீள் கட்டமைப்பைப் பார்த்துக் கொள்வார்கள்.