வன்னி இனவழிப்பில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் - சாட்சியின் குறிப்புகள்

தொண்டு நிறுவனமொன்றுக்குப் பணிபுரிந்தவரிடம் கிடைத்த நேரடித் தகவல்களை இச்செய்தியில் காணலாம்.


மீதமிருக்கும் தமிழர்களைக் காக்க உடனே மின்னஞ்சல் அனுப்புங்கள், இங்கே சென்று:

நன்றி!

சாட்சிகளைக் காப்பாற்ற உடனே கையெழுத்துப் போடுங்கள்!

 
இனப்படுகொலையின் கோர முகத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாக இருப்பவர்கள் இந்த மூன்று மருத்துவர்களும். பயங்கரவாதச் சட்டத்தில் அவர்களைத் தடுத்து வைத்திருக்கிறது சிறீலங்கா அரசு. அவர்களது பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை விடுவிக்குமாறு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. கீழுள்ள பக்கத்திற்குச் சென்று "Take Action Now" என்ற பொத்தானை அழுத்தி இந்த மனுவை அனுப்புங்கள். உங்கள் விபரங்களைப் பதிவு செய்தால் போதும், குறிப்பிட்ட அலுவலர்களுக்கு அந்த இணையத் தளமே அனுப்பிவிடும். மிக்க நன்றி!

PEARL ACTION : http://www.pearlaction.org/action-alerts/2009/aa81.php

பதிவர்களின் கவனம் செல்ல வேண்டிய இடங்கள்!

1. வன்னி அவலங்களை வெளியுலகிற்குச் சொன்ன மூன்று மருத்துவர்களை இலங்கையரசு பிடித்து வைத்துள்ளது. இந்த மூவரும் போரின்போது கொல்லப்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் எண்ணிக்கையைக் குறித்துப் பொய்யான செய்திகளை வெளியிட்டார்கள் என்று கூறி இவர்களைக் கைது செய்து "விசாரித்து" வருகிறது சிறீலங்கா அரசு. எவ்வித வசதிகளும் அற்ற நிலையிலும் இம்மருத்துவர்கள் வன்னியில் நின்று தங்களாலான அளவுக்கு உயிர்களைக் காப்பாற்றியவர்கள். இவர்களைத் தடுத்து வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம். இவர்களை விடுவிக்குமாறு Reporters without Borders கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து மனுக்களை அனுப்பலாம். அல்லது உங்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களை அழைத்துப் பேசலாம். விபரங்கள் தெரிந்தவுடன் பகிர்கிறேன்.

2. பிரபாகரனின் மரணச் செய்தியினைச் சுற்றியே தமிழர்கள் தம் கவனத்தை வைத்திருக்க வேண்டும் என இலங்கையரசும், அதன் தோழமை நாடுகளும் விரும்புகின்றன. இதன் காரணம், போரில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள், போரியல் குற்றங்கள், சிறீலங்கா அரசு இனிமேல் தமிழர்களைக் காட்டி சர்வதேசத்திடம் பிச்சையெடுக்கப் போடவிருக்கும் நாடகங்கள் அனைத்தின் மீதும் மக்களின் கவனம் திரும்பிவிடக் கூடாது என்பதே. இதனைப் பதிவர்கள் உணர்ந்து, மேற்சொன்ன போரியல் குற்றங்கள், சிறீலங்கா அரசுக்கு என்னவிதமான உதவிகளை யார் செய்யப் போகிறார்கள், ஐ.நா அடுத்து என்ன செய்யப் போகிறது, பல்வேறு நாடுகளில் என்னவிதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தே கவனத்தைச் செலுத்த வேண்டும். இதுவே மனிதநேயம் கொண்டவர்கள் செய்ய வேண்டியது. புலியெதிர்ப்பையும், தமிழின எதிர்ப்பையுமே கடமையாகக் கொண்ட சில பழங்கொட்டைப் பதிவர்களும், நீதிமான்களும் பொத்திக் கொண்டுவிட்டனர். அவ்வளவுதான் அவர்களது மனிதவுரிமைப் பற்று! ஒருவேளை மகிந்தவின் லட்டு அவர்கள் வாயிலும் இனித்துக் கிடக்கலாம். கவனத்தைத் திருப்பும் பதிவுகளைப் புறக்கணித்தலே இப்போதைய தேவை.

வெள்ளை மாளிகை முன் தொடர் போராட்டம்


இன்றைய போராட்டம் CNN, FOX முதலான பல செய்தி ஊடகங்களையும் வரவழைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து நாளையும், நாளைய மறுநாளும் அதே இடத்தில் போராட்டம் நடைபெறவிருக்கிறது. விபரங்கள் கீழே. இயன்றவர்கள் தவறாது கலந்துகொள்ளவும்! 

05.12.09 and 05.13.09  Rally at Lafayette Park in front of the White House. Please try to gather by 9 A.M. The rally will be over by 4 P.M.

வாய்ப்பிருந்தால் நாளைக்கு வெள்ளை மாளிகைக்குச் செல்லுங்கள்

மிகக் கொடூரமான இனப்படுகொலை நிகழ்கிறது. பொறுத்திருந்து பார்க்கும் அமெரிக்க அரசின் முகம் அசிங்கமாக இருக்கிறது. "போருக்குப் பின்"னான நடவடிக்கைகள் எப்படி இருக்கவேண்டும் என்று ஆலோசிக்கும் அமெரிக்க நடவடிக்கை வன்மம் நிறைந்ததாகத் தெரிகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன், தீவிரவாதம் வேறு, விடுதலைப் போராட்டம் என்று முழங்கிய ஹிலரி, ஒபாமாவின் வாய்கள், அரியணையேறியபின் மௌனித்திருக்கின்றன. அமெரிக்காவில் நிகழ்ந்த இது, ஜெயலலிதாவின் வாய்க்கும் நடக்கலாம். ஈழத்தில் நேற்று ஓரிரவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டும் என்கிறார்கள். அமெரிக்காவில் இருந்துகொண்டு செய்வதற்கு என்ன இருக்கிறது என்று அயர்ந்து போக வேண்டாம். ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதிநிதிகள் மற்றும் செனட் உறுப்பினர் அலுவலகங்களுக்கு முன் திரளுங்கள். வாஷிங்டன் பகுதியிலிருப்பவர்கள் வெள்ளை மாளிகைக்கு முன் நாளை போராடுகிறார்கள். இயன்றவர்கள் செல்லுங்கள்; கீழே விபரமிருக்கிறது. நான் வாழும் காலத்தில் இப்படியொரு இனப்படுகொலை நடக்கும்போது நான் பார்த்துக்கொண்டு சும்மாயிருந்தேன் என்று நாளைக்கு உங்கள் சந்ததியினருக்கு முன்னும், மனசாட்சிக்கு முன்னும் தலைகுனிய நேராதிருக்கும். எதையேனும் செய்யுங்கள்.

There is an emergency rally organized for tomorrow (05.11.09) at the Lafayette Park in front of the White House. Please try to gather by 9 A.M, Monday (05.11.09).