Caution! இன்னொரு பெயர்க்குழப்பம்

பாலாஜி, பரி, பாரி மாதிரி இன்னொரு பெயர்க்குழப்பம் வந்துடக்கூடாதுங்கற ஒரு எண்ணத்துலயும், ஒரு நல்ல கவிஞர், கதையெழுத்தாளருக்குச் சேரவேண்டிய மாலையைப் பொன்னாடையைப் பெயர் மயக்கத்துல யாரும் தப்பா எனக்குப் போட்டுடக் கூடாதுங்கற இன்னொரு எண்ணத்தாலயும் சொல்லுறேன்,

மரத்தடியில சுந்தர் அப்படிங்கற பேருல எழுதுறது நான் இல்லை. இல்லை. இல்லவே இல்லை. நான் வலைப்பூக்கள்ல எங்கயாச்சும் கருத்துப் பெட்டியில சுருக்கம் கருதி சுந்தர்னு என் பெயரை எழுதிக்கிறது உண்டு. நண்பர்களும் அதே காரணத்துக்காக சுந்தர் என்று விளிப்பதுண்டு. இனிமேல் நான் சுந்தரவடிவேல்னு நீளமாவே இருக்கேன். தேவை ஏற்பட்டால் கரம்பக்குடி சுந்தரவடிவேல் பாலசுப்ரமணியன் அப்படின்னும் ரயில் விடுறேன்.

அப்புறமா, மரத்தடி சுந்தர் அழகா எழுதுறார். நல்ல கவிதைகள். அப்பாவின் சைக்கிள் என்றொரு கதை. இவருடைய பார்வை ரொம்பக் கூர்மை எனத் தெரிகிறது. எனவே நண்பர்களே, நான் எழுதி வரும் கடந்த சில மாதங்களில் மரத்தடி சுந்தர்தான் இவர் என்று யாரேனும் என்னைத் தப்பா பாராட்டியிருந்தா, மாலை போட்டிருந்தா, தயவுபண்ணி வந்து சொல்லி எடுத்துக்கிட்டு போயி அவருக்குப் போட்றுங்க. கோச்சுக்க மாட்டேன். சரியா?! :)

0 comments: