மீட்சி

சரக்கென்று செருகிக்கொள்ள
உதைத்தழுத்திப் பிடித்திழுத்தும்
பெயராப் புதைவில்
புதையும் பொழுதுகள்.

என்னவென்றால்?
பனிச் சகதியில் சிக்கிய
காரென்றும் சொல்லலாம்
மண்டைப் புதிரில் மாட்டிய
மனசென்றும் சொல்லலாம்...

எதுவாயினும்,
தாள் இருத்திக்* குமிழ்களுக்குள்
அடைபட்ட காற்றுக்கும்
மறுப்பதற்கில்லை விடுதலையை.

=========================
*தாள் இருத்தி - paper weight

0 comments: