வளர்சிதை

கிடக்கும் குச்சியைக் கல்லை
துணி சுத்திய மரத்துண்டை
விரி வானைக்
கேள்வி கேட்க, அவை
கேளாக்(?) கேள்விக்கு
விடையிறுக்க
யாரும் துரத்தாமல் ஓட
காரணமின்றிக் குதித்துச் சிரிக்க...
முடிகிறதா இப்போது?
வளர்வெனும் மயக்கில்
ஓட்ட வெறியில்
உதிர்ந்த சிறகுகள்
உதிர்ந்தவைதானா?


0 comments: