உள்ளது

பாதையிட வகிர்ந்தெறியப்
பாறையின் நெடுக்குவெட்டில்
வெளித்தெரியா வரலாறு
வரிகளாய் இறுகி.

வரிவரியாய் இறங்கி
மண்ணைப் புல்லை
செத்ததைப் புதைந்ததை
உளுத்ததை உரத்தை
விரல்தடவி இனங்காண
வேரின் ஈரத்தில்
நனைந்த மார் ஓரடுக்கில்.

0 comments: