இன்றைக்கு என்ன தினம்? போன வாரம் நம்மகிட்ட இதே கேள்வியைக் கேட்டிருந்தால் கண்ணு படபடத்திருக்கும், இதயம் தடதடன்னு ஓடிருக்கும். ஆனா இன்றைக்கு என்ன தினம்னு செய்தி பார்க்கும் வரை எனக்கும் தெரியாது. பிப்ரவரி 21 சர்வதேச தாய்மொழிகள் தினமாம். UNESCO 1999ல அறிவிச்சதாம். உலகத்துல 6000க்கும் மேற்பட்ட மொழிகள் இருக்காம். இதுல 95% மொழிகளைப் பேசுறது 4% க்குக் குறைவான மக்களாம். செத்துக்கிட்டு இருக்க மொழிகள் அனேகம்ங்கறது தெரிஞ்ச கதை. இந்த எடத்துலதான் UNESCO சொல்லுது, புள்ளைகளுக்கு உங்க தாய்மொழில சொல்லிக்குடுங்க. கூடுதலாயும் மொழிகளைக் கற்றுக் கொடுங்கள், பிராந்திய அல்லது சர்வதேச மொழிகளை. இதன் மூலம் நாம மொழியப் பாதுகாக்கலாம், குழந்தைகளை மொழித்தடங்கலில்லாமல் அறிவுலகுக்குள் அழைத்துச் செல்லலாம்.
இதைப் பற்றி மேலும் படித்து எழுத ஆசைதான். இப்போதைக்கு முடியவில்லை. மேலதிக விபரங்களுக்கு இங்கே சுட்டுங்கள்:
http://portal.unesco.org/en/ev.php@URL_ID=18626&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html
மதியம் சனி, பிப்ரவரி 21, 2004
தாய்மொழி
Posted by சுந்தரவடிவேல் at 2/21/2004 09:16:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment