பழங்குடி மக்களைப் பற்றிய கட்டுரை ஒன்று

தமிழக வரலாறு என்றதும் மூவேந்தர்களோடும், விடுதலைப் போராட்டம் என்றால் மிகக் குறுகிய எண்ணிக்கையுள்ள அரசியல் தலைவர்கள், மன்னர்கள் என்பதோடும் நின்றுவிடுகிறது நம் கல்வி.
ச. பாலமுருகன் கீற்றில் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையில் (பழங்குடி மதிப்பீடுகள் நம்பிக்கைகள்) பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, இயற்கையோடு அவர்கள் கொண்டிருந்த கொடுக்கல் வாங்கல் உறவுகள், தம் பகுதியின் மீதான ஆக்கிரமிப்பினை அவர்கள் எதிர்த்த வீரம், இந்திய விடுதலைப் போரில் அவர்கள்து பங்கு ஆகியவற்றை அழகாகத் தொகுத்துள்ளார். மேலும், பழங்குடியினருக்கும் அவர்களது வாழ்வாதாரமான மலை/காடுகளுக்கும் தற்போது பொதுமக்களாகிய நாமும், நாம் அங்கம் வகிக்கும் அரசாங்கமும் நிகழ்த்தும் இடர்களையும் காட்டியுள்ளார். நீங்கள் வாசிக்க வேண்டிய கட்டுரை. இவர்தான் சோளகர் தொட்டியை எழுதிய பாலமுருகனா என்று தெரியவில்லை. அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

1 comments:

said...

உங்களால் கீற்று எனும் இணையதள பத்திரிக்கையை அறிந்துக் கொண்டேன், நன்றி.