வீரத்தியாகி விஸ்வநாத தாஸின் வழி வந்த தமிழ் நாடகத் துறையின் பெருந்தூணாக நிற்கும் நாடகப் புயல், நாடக வேந்தன், கலைப் பொக்கிஷம் காத்தாடி ராமமூர்த்தியின் ஐம்பதாவது வருட நாடகப்பணி இன்று சென்னையில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப் பட்டது. 1964ல் தொடங்கி இவர் பல நாடகங்களைப் பல சபாக்களிலும், தொல்லைக் காட்சிகளிலும் நிகழ்த்தி இன்று ஒரு மாமேதையாக நம்மிடையே திகழ்கிறார். 13வது நாடக உற்சவத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றிய சோ அவருக்குப் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். நல்லி குப்புசாமி குத்து விளக்கேற்றினார். நாரத கான சபாவின் செயலர் கிருஷ்ணசாமி, தூர்தர்ஷன் கேந்த்ராவின் முன்னாள் இயக்குனர் நடராஜன், நாடக அகாடமியின் செயலர் ராது எல்லோரும் காத்தாடி அவர்களை வாழ்த்திப் பேசினார்கள்.
இது போன்ற நல்ல நகைச்சுவைக்கு முக்கியத்துவம் வழங்கும் இந்துவைப் போய் இலங்கையில் நடந்த போலீஸ் வன்முறையில் தமிழர்கள் கொல்லப்பட்டதை எழுதவில்லை என்று தங்கமணி குறைபட்டுக் கொள்ளலாமா?
மதியம் ஞாயிறு, மே 02, 2004
இந்து தினசிரி
Posted by சுந்தரவடிவேல் at 5/02/2004 06:13:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment