ஊளைகள்

இட்டுப் போர்த்தி நானிறங்க
சுற்றுச் சுவர்ப் பனித் துருவலைப்
பறக்கடித் தோடியது
அணிலொன்று அம்மணமாய்.

பனியூதலில் உம்
குளிரூளைகள்-
ஜட வானரங்கள்
தெளிந்தும் பிறப்பதில்லை
பிறந்தும் தெளிவதில்லை,
எங்கள் ராமனின்
சொல்லுக்கு அலையடங்கும்
அவன் வரைந்த
கோட்டுக்குக் குளிரடங்கும்.

0 comments: