சனிமூலை கறுத்திருக்குன்னு ஊரே பேசும்
மேயப் போன மாடாடு சீக்கிரமாய் வீடு வரும்
குஞ்சு குளுவான்கள் மேகமூட்டக் களியிலாடும்
ரோட்டில் காயும் அவித்த நெல் வீட்டுக்குள் விரையும்
தூரு நனஞ்சாக்கூடப் போதுமேன்னு கதிர் காத்திருக்கும்
எல்லா நெஞ்சும் பெய் பெய்யெனத் துடிக்கும்
நாலு தூறல் விழக்
கவிந்திருந்த மேகத்தைக் காற்றள்ளிப் போகும்
நேற்று வெட்டிப்போட்ட விறகு
நனையாத திருப்தியில்
நம்மில் கொஞ்சம்.
மதியம் செவ்வாய், ஜனவரி 20, 2004
இன்னொரு முரண்
Posted by சுந்தரவடிவேல் at 1/20/2004 06:08:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment