கோடை விடுமுறை



துணிக்கடை மஞ்சள் பை புத்தகங்களோடு ஆணியில்,
தொடுவாரற்றுத் தொங்கும்.
காலையில் எழுப்பிவிடும் புளிய மரத்தடிப்
பாளையக்காட்டின் சத்தம்.
சூரியன் உச்சி வந்து காயும் வரை கோயில் குளம் ரெண்டுபடும்
புளியங்காயடித்துச் செங்காயாய்ப் பொறுக்கித் தின்னும்
தெருவில் விற்று வரும் ஈச்சம்பழத்துக்கும் முந்திரிப்பழத்துக்கும் வாயூறும்
ரோடுபோடக் கொட்டி வைத்திருக்கும் சூரியங்கல்லால்,
வேலிக் கரட்டான்கள் அவ்வப்போது வேட்டையாடப்படும்.
அய்யர் வீட்டுக் கொல்லையில் மாங்காய் பால் தெறிக்கப் புல்லில் விழும்
டோய் என்ற சத்தத்துக்குப் பஞ்சாய்ப் பறக்கும் கூட்டம்
அடங்கிக் கிடந்தாத்தானே என்று திட்டிக்கொண்டே,
சைக்கிள்ல விட்ட காலுக்கு மஞ்சப் பத்துப் போடும் அம்மா...

இங்கினதான் வச்சேன்
திரும்பிப் பாத்தாக் காணோம்.

0 comments: