பள்ளியில் வெடித்தது
தனற்புகைத் திரையூடே
தோழியரின் அதிர்வதனம்
சோழிச் சிதறலில்
தொலையும் தங்கைமார்...
தொண்டைப்புண் மிடறாய்க்
காலம் விழுங்கியும்
விடியலின் வறண்ட குரலில்
தெறித்துச் சுடும்
மனைவியின் கனவில்
இன்னமும் வெடிக்கிறது
சிங்களக் குண்டு.
மதியம் ஞாயிறு, ஜனவரி 04, 2004
பதிவின் எச்சம்
Posted by சுந்தரவடிவேல் at 1/04/2004 07:16:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment