இன்னும் நாலு நாள்
மூனு
நாளன்னக்கி
நாளக்கி
மத்தியான பஸ்ல
பெட்டியோட வந்து எறங்குவாங்க
கவுத்துப் போட்டிருந்த கோழி அறுபடும்
நுங்கும் பலாப்பழமும் வெட்டுப்படும்
பெரியவர்களின் பழங்கதைகள்
எங்கோ தொலைவில் ஒலிக்க
நுங்கு மட்டை வண்டியும், பனவோலைக் காத்தாடியும்
புதியவர்களுக்குக் காட்டுபடும்
பட்டணத்துப் பொம்மையை விரல் தடவும்
நெஞ்சு துடிக்க நெடுநாட் சாகசங்கள் சொல்லுபடும்
லைட்ட நெறுத்திப்புட்டுப் படுங்கன்னு சொல்லச் சொல்லக்
தலவாணிச் சண்டையும் கும்மாளமும் காதடைக்கும்...
இன்னும் நாலு நாள்
மூனு
நாளன்னக்கி
நாளக்கி
காலையில மொத வண்டியில ஏத்திவிட்டுட்டு வரும்போது
வெறுமை கவிந்திருக்கும்.
மதியம் சனி, ஜனவரி 03, 2004
விருந்து
Posted by சுந்தரவடிவேல் at 1/03/2004 07:46:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment