செவலக் கன்னுக்குட்டியக் காணோம்.
எப்ப?
காலயில மாட்டாஸ்பத்திரிக்கு ஓட்டிக்கிட்டு போவயில, டவுன் பஸ்ஸைக் கண்டு அறுத்துக்கிட்டு ஓடிருச்சு.
நரியாத்துப் பாலத்துக்கிட்ட நிக்கின்னாக, பட்டுக்கோட்டாயி கொல்லைகிட்ட நிக்கின்னாக, ஒரு பக்கமுங் காணோம்.
தம்பி தேடிக்கிட்டு அலயுறான்.
சீத்தாப்பா வெத்தலக் குறிகாரர்கிட்ட மை போட்டுப் பாக்கலாமுங்குறார்.
நரங்கிப்பட்டுல போனவாரம் நாலு மாடு காணோமாம். நம்பரு போட்டு கேரளாவுக்கு ஏத்திருப்பாங்யன்னு பேசிக்கிட்டாக.
நல்ல கன்னுக்குட்டி யாரு ஓட்டிக்கிட்டு போனதோ.
சரி சரி சாப்புட்டுப்புட்டு படுங்க. கன்னுக்குட்டி வந்துரும்.
மதியம் புதன், ஜனவரி 07, 2004
கன்னுக்குட்டி
Posted by சுந்தரவடிவேல் at 1/07/2004 08:52:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment