சுனாமி (tsunami, ஜப்பானிய மொழியில்) என்றழைக்கப்படும் கடல் கொந்தளிப்பு கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கங்களாலும், கடலடி எரிமலைகளாலும், விண்கற்கள் கடலில் விழுவதாலும் ஏற்படுகிறது. கடலில் ஒரு இடத்தில் ஏற்படும் இத்தகைய அதிர்வு மற்ற இடங்களுக்குக் கடல் கொந்தளிப்பாகப் பரவுகிறது. இக்கொந்தளிப்புப் பரவும் நேர அளவைக் கணக்கிட இயலும். 1960களின் ஆரம்பத்தில் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் அலாஸ்காவையும், சிலியையும் பாதித்த பிறகு 1965ல் யுனெஸ்கோ உதவியுடன் 1965ல் International Tsunami Information Center ஹவாய்யில் ஹோனலுலுவில் நிறுவப்பட்டது. இது பசிபிக் கடற்பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களைப் பதிவு செய்கிறது. ரிச்டர் அளவு, நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் இவற்றைக் கொண்டு கொந்தளிப்பு எவ்வளவு நேரத்தில் எந்தெந்த நாடுகளுக்குப் பரவும் என்ற எச்சரிக்கையை அந்தந்த நாடுகளுக்கு அனுப்புகிறது. இந்த எச்சரிக்கையின் படி கடலோர மக்கள் இடம் பெயர்க்கப் படுகிறார்கள். இதோ இந்தப் படத்தைப் பாருங்கள்.
இதில் ஒவ்வொரு பட்டையும் கொந்தளிப்புப் பரவ ஒரு மணி நேரமாகும் என்பதைக் குறிக்கிறது. இதன்படி ஹவாயில் ஏற்படும் நிலநடுக்கம் அலாஸ்காவில் கடல் கொந்தளிப்பை ஏற்படுத்த சுமார் 6 மணி நேரங்களாகும்.
கொடுமை என்னவென்றால் இந்தத் தகவல் மையம் பசிபிக் கடற்பகுதிக்கு மட்டுமே எனத் தெரிகிறது. சமீபத்தில் நடந்த ஒரு மாநாட்டில் இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆசிய நாடுகளையொட்டிய பசிபிக் பகுதிகளுக்கும் இத்தகைய மையம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது. எது எப்படியோ...இன்னொரு விபத்து தவிர்க்க முடியாமல் போனது.
தொடர்புடைய சுட்டிகள்: http://www.drgeorgepc.com/TsunamiFAQ.html
http://wcatwc.arh.noaa.gov/ttt/ttt.htm
மதியம் ஞாயிறு, டிசம்பர் 26, 2004
கொந்தளிப்பு - சிறு குறிப்பு
Posted by சுந்தரவடிவேல் at 12/26/2004 09:35:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment