கார்த்திக்ராமாஸ் வரவு, நியூஹேவன் விழாக்கோலம்!

நியூஹேவனின் Art & Ideas நிகழ்வுகளை இந்த வருடம் அதிகம் பதிய முடியவில்லை. 10 ஆவது வருட நிகழ்வின் இறுதி நாளான சனிக்கிழமை திடீர் விருந்தாளியான கார்த்திக்குடன் (செர்ரி, கதிர்காமஸ் போன்ற அவதாரப் பெயர்களையும் தாங்கியவர்) சென்று கலந்து கொள்ளவொரு வாய்ப்புக் கிட்டியது. இதை கார்த்திக்கின் வருகையையொட்டிய விழாவாகவும், அவரது பத்தாவது பிறந்த நாளாகவும் என்னைப் போலவே நீங்களும் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பல்ல!

பாலகருக்கு அகவை மகுடம் சூட்டும் பாலகன்
Image hosted by Photobucket.com

பிறந்த நாளுக்கு வந்திருந்த திருக்கூட்டம்
Image hosted by Photobucket.com

மக்களுக்கு விநியோகிக்கப் பட்ட இனிப்பு
Image hosted by Photobucket.com


கார்த்திக்கிற்காக ஏற்பாடு செய்யப் பட்ட Bomb Squad இசைக் குழு
Image hosted by Photobucket.com

கார்த்திக்கின் திருமுகப் பொம்மையை ஏந்தி வலம் வரும் தொண்டர்கள்
Image hosted by Photobucket.com


வலைப்பதிவர்கள் இருக்குமிடத்தில் முகமூடி இல்லாமலா?!
Image hosted by Photobucket.com

36 comments:

said...

where is the photo of cherry ? :)

said...

Ravi, If you look carefully, you'll see Cherry who is dancing (and singing) in the 4th photo (with bare foot and wearing violet tank top):-). Also I'm wondering when cheery becomes part of the Bomb Squad band.

said...

ஐயா , பாஸ்டன் பாலாஜிகிட்ட அடிவாங்க வைக்காம ஓய மாட்டீங்க போல இருக்கே?

said...

கதிர்காமஸ்,

எதையா "நீ" ரூ?

said...

நாந்தானுங்கோ அந்த கடைசிக்கீழ் போட்டோவிலுள்ள முகமூடி :-)

said...

oh, nice body (*_*)

said...

ரவி, செர்ரி இல்லை, போன வாரம் பறிக்கப் போன ஸ்ட்ராபெறிதான் இருக்கிறது, போடட்டா?:)

டிசே சரியான பார்வை :)

கறுப்பி, நன்றி, மாசிலன்கிட்ட சொல்லிர்றேன் :)

//பாஸ்டன் பாலாஜிகிட்ட அடிவாங்க வைக்காம ஓய மாட்டீங்க போல இருக்கே?//
அடடே அப்படியா, பாக்கணுமே :))

said...

வடிவேலுத்தம்பி, தப்பு நடந்துபோச்சே!
பேயர் ஸ்கூலு ஸைட்ல போயி செர்ரீயோட நேயர்விருப்பமா வள்ளி தெய்வானை எடுத்தமா, வள்ளி எஸ்கேப்ப்ப்ப்ப்... அண்ணனோட அக்கா மக தெய்வானை "தேவுடா"ன்னு தலைல கைய வெச்சிட்டுதண்ணே. கவலைல அண்ணேன் வருந்தி ஏதாச்சும் கவித கிவித வாசிச்சுட்டு ஸூஸைட்டு பண்ணிட்டா, நா என்ன பண்ணுவேன் நான் என்ன பண்ணுவேன்.

கறுப்பி நல்ல காமெண்டுங்கோ; Oh nice boot*y அப்டீன்னு கார்த்திக்க பாத்து ஒரு ஸீரியான காமெண்டு குடுக்காம இருந்தீங்களே அது பெரிசுங்கோ. ;-)

said...

Peyarily, that comment for Masilan.

said...

பெரிய கொண்டாட்டமாத் தான் இருந்திருக்கும் போலிருக்கு. :-)

said...

ஐய்யய்யோ! அவசரத்துல அவரச காமெண்டாப்போச்சே:-(
ZIPPPPPPPPPPPPPPPPPP! என்னோட காளவாயிக்கு. கறுப்பி அக்கா கொஞ்சம் தெளிவாச் சொல்லியிருக்கக்கூடாதா ஆத்தா? உங்களைச் சொல்லியும் தப்பில்லை. குடுக்குற சம்பளத்துக்கு வேலை நேரத்துல இந்தளவு தெளிவாத்தான் காமெண்டு குடுக்க முடியுதாக்கும் :-( க்யூபன் ஸிகார் மனேஜரே ப்ளாக்கு ப்ளாக்கி மேலான நேரக்கட்டுப்பாட்டை விலக்கு. தொழிலாளர் பேச்சுச்சுதந்திரத்தை, தட்டச்சுச்சுதந்திரத்தைத் தடுக்காதே காதே!!

"யாகாவாயினும் வாய் காக்க காக்காக்கால், சோ காப்பார் கூடச் சுப்பிரமணியசுவாமியையும்" என்றதுமாதிரி ஆச்சே என் நிலைமை. என் சோகக்கதையைக் கேளு.

said...

பெயரிலி, தாங்கள் இந்த அளவிற்கு மனம் வருந்தத் தேவையில்லை. சுந்தரவடிவேல் கதிர்காமாஸின் படத்தைப் போட்டிருந்தால் தாங்கள் சொன்ன அந்த //Oh nice boot*y\\
கொமெண்டைத் தயங்காமல் கொடுத்திருப்பேன். ஆண்கள் உலகில் பிறந்ததே பெண்கள் ரசிப்பதற்குத்தானே. இதில் வெட்டகமென்ன? அபச்சாரம்! அபச்சாரம்!

said...

//ஆண்கள் உலகில் பிறந்ததே பெண்கள் ரசிப்பதற்குத்தானே. இதில் வெட்டகமென்ன?/
என்ன துணிவிருந்தால், செர்ரீயைப் பார்த்து வெட்கமில்லாத ஒட்டகமென்பீர்கள்? எல்லாம் அவர் வெறுமனே பெண்கள் ரசிப்பதற்கு உலகிலே பிறந்த ஆண் என்ற பெண்மேலாதீச்சிந்தனையின் பாற்பட்ட கூற்றுத்தானே! நீங்கள் பெண் என்பதால் எதையும் சொல்லிவிட்டு ஆதம்டீஸிங் பண்ணிவிட்டுப்போய்விடலாமென்ற துணிவுதானே! ஏ கேடுகெட்ட பெண்மேலாதீயுலகமே! இத்தனையும் சொல்லிவிட்டு, ஆணியல்வாலி என்று சொல்லிக்கொள்ள உங்களுக்கு வெட்டகமாக இல்லையா?

:-(

said...

பெயரிலி, 'தீயினால் சுட்டபுண் ஆறும் ஆறாது/ நாவினால் சுட்ட வடு' -அய்யன் வள்ளூவன் சொன்னது வாசுகிக்கு அல்ல, எங்களைப் போன்றவர்களுக்கு. ஆகவே இந்தப் பாவத்தைப் போக்க, தாங்கள் இந்த வாரவிறுதியில் எடுத்த வசந்தகாலத்தின் குளிர்ச்சியான படங்களைப் பதிவில் போடவும்.
....
அடடா விடியவெள்ளனவே கறுப்பியும் பெயரிலியும் சண்டை பிடிக்கத் தொடங்கீட்ட்டாங்களப்பா :-).

said...

செர்ரியே கண்டுகொள்ளாத போது நீர் ஏனையா பறக்கிறீர். இறைவனின் படைப்பில் ஆண் ஒரு அதிசயம், அபூர்வம். சும்மா தத்துவத்தை விட்டிட்டு அழகை ரசி, இயற்கையோடு இயம்பு. (:<<<<

அது விடுங்க செர்ரி.. நீங்க சொல்லுங்க.. எங்க உங்கட படம்?

//அடடா விடியவெள்ளனவே கறுப்பியும் பெயரிலியும் சண்டை பிடிக்கத் தொடங்கீட்ட்டாங்களப்பா :-).\\
DJ (*_*)

said...

ஆட்டம் அமர்க்களப்படுதைய்யா...
அமர்க்களப்படுது...
கதிர்காமாஸ்..பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
:D
(இன்று புதிதாய் பிறந்தாயோ?)

இதுல ஒருத்தர் வந்துட்டு மறைந்திருக்கும் மர்மம் என்ன? காமெண்ட் மட்டும் எகிறுது..ஆளக் காணலையே ராசா...

said...

Sorry கதிர்காமாஸ்..பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
(*_*)

பாலாஜி பாரி, நீங்கள் ப்பீல்டில தான் நிக்கிறீங்களா? நான் எங்கேயோ போட்டீங்க எண்டு நினைச்சன்.

said...

கறுப்பி, பாலாஜி பிரெஞ்சுக் கிளாஸ் என்னும் காதல் களத்தில் அந்நியன் 'ரெமோ' மாதிரி ஒற்றை ரோஜாவுடன் சரியான பிஸியாக இருக்கின்றார். தயவு செய்து அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம் :-).
....
அதுசரி, நம்ம கதிர்காமஸிற்கு உண்மையில் இன்று பிறந்தநாளா?

said...

பெயரிலி நேத்தடிச்ச சோக்குகளுக்கே இன்னும் சிரிச்சு முடிக்கலை, இதுக்கும் மேலயா :)
கதிர்காமஸ், நீங்க சொன்னா படங்களைக் கறுப்பிக்கு அனுப்புறேன், என்ன சொல்றீங்க?
கறுப்பி, நேத்துகூட அர்னால்ட் ச்வாச்நெகரின் தலைக்கு கா.ராவின் உடலைப் பொறுத்தும் பேச்சு அடிபட்டது!
டிசே, சிவப்புரோஜா பாலாஜியைப் போலவே இன்றைக்கும் என்றைக்கும் அவருக்குப் பிறந்த நாள்தான்:)

said...

பாலாஜி பிரெஞ்சுக் கிளாஸ் என்னும் காதல் களத்தில் அந்நியன் 'ரெமோ' மாதிரி ஒற்றை ரோஜாவுடன் சரியான பிஸியாக இருக்கின்றார். தயவு செய்து அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம் :-).

if so what about that/those girl(s) in
I.I.Sc. :-)

said...

ஆஹா..DJ..நீர் ஷிப்பாகன் வரும்போது நல்லா 'கவனி'ச்சு அனுப்பறேன்.

ஐயோ.. ரவி..இது என்ன புதுக் கதை?? என்னோட வாழ்க்கைல விளையாடாதீங்க..:)

நான் பாட்டுக்க நான் உண்டு.. என் ரிசர்ச் உண்டுன்னு பொழுத கழிச்சா..வுடமாட்டீங்களே...:))

said...

/என்னோட வாழ்க்கைல விளையாடாதீங்க..:)/
ஆஹா! பாரி வாழ்க்கையிலே ரவி வாள்_கை விளையாட்டு. ரவிமளம், மேலே சொல்லு!!

/நான் பாட்டுக்க நான் உண்டு.. என் ரிசர்ச் உண்டுன்னு பொழுத கழிச்சா../
அய்யோ! எங்க எம். ஆர். ராதா நிச்சயதாம்பூலத்திலே புத்திசிகாமணி பெத்த புள்ளையிலே ஆராய்ச்சின்னு சொல்லிருக்கிறத அப்புடியே சொல்றீங்களே! பாட்டும் கூத்துமா பொழுத கழிக்குறத இப்படியா பகிரங்கமாச் சொல்லுவீங்க.

/பெயரிலி நேத்தடிச்ச சோக்குகளுக்கே இன்னும் சிரிச்சு முடிக்கலை,/
அவ்வொளவு ஸ்லோவா புர்யதெல்லாம் சோக்கா? சுளுக்கா?

/அடடா விடியவெள்ளனவே கறுப்பியும் பெயரிலியும் சண்டை பிடிக்கத் தொடங்கீட்ட்டாங்களப்பா :-)/
Broண்ணே, இது போன கிழமை போட்டே முடிக்காத சண்டை; வெள்ளனத் தொடங்கின சண்டை எண்டாச் சரி, ஆனால், விடியவெள்ளனத் தொடங்கிறதெண்டிறியளே, உது நியாயமா? உப்பிடியே தொடந்து கதைச்சீரெண்டால், உமக்கு ரோசாவும் கிடைக்காதுபோகவும் கூசாவும் கிடைக்காதுபோகவும் சாபம் போட்டுடுவன்.

said...

//ரிசர்ச்//
என்னங்ணா? :))

said...

//அதுசரி, நம்ம கதிர்காமஸிற்கு உண்மையில் இன்று பிறந்தநாளா?//
நியூ ஹேவன் வெயிலிலே, ஜீன்ஸ்-பேண்ட் டீ சர்ட் சகிதமா "உருண்ட நாள் " என்று வேணுமனால் கொண்டாடலாம். கையிலே இருந்த தட்டையும் ஒருத்த பிடிங்கிட்டார்.


/நான் பாட்டுக்க நான் உண்டு.. என் ரிசர்ச் உண்டுன்னு பொழுத கழிச்சா./
பொழுதா கழிச்சா நல்லதுதான் பாரி. உடல் நலத்தை எப்படி இப்படி நல்லா பேணுறீங்க ?

said...

//கையிலே இருந்த தட்டையும் ஒருத்த பிடிங்கிட்டார்.//
இதற்காக பெயரிலியைத் தட்டையாகக் கண்டிக்கிறேன்!

said...

/இதற்காக பெயரிலியைத் தட்டையாகக் கண்டிக்கிறேன்!/
அதுசரி; வெத்துத்தட்டைப் புடடுங்கினவன் வாலைப் புடிச்சு நெருப்புக் கொளுத்தூவீங்க; வெள்ளித்துட்டைப் புடிங்கினவன் வாளுக்கு தீப்பந்தம் கொளுத்திப் புடிப்பீங்க. சே! என்ன ஒலகமாடா ஆசாமீ!

said...

மகுடம் சூட்டின பிறகு பாலாபிசேகம் நடந்துதா?

நல்லா ஆடியிருக்கீங்க போல! எங்க மற்ற வலைப்பதிவர்களெல்லாம் கானோம்? பெயரிலி கூட்டத்துல ஜோதில அய்க்கிய
மாய்ட்டாரா?

ஆனா பெயரிலி கொடுத்திருந்த போட்டாவுல இப்படி தெய்வானையை கார்த்திக் மிஸ்பண்ணியிருக்கக்கூடாது!

கடைசீ படத்துல சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு- ங்குற மாதிரி எங்க போறார் மாசிலன். கதிர்காமஸ ஒரு கவனிப்பு கவனிக்கவா?

நல்ல படங்கள். நல்ல பின்னூட்டங்கள், நல்ல சண்டைகள்.

பாலாஜி நீங்க எப்ப ரேமோ வில் இருந்து அம்பியா பர்சனாலிட்டி சேஞ்ச் பண்ணீங்க?

said...

பாலாஜி நீங்க எப்ப ரேமோ வில் இருந்து அம்பியா பர்சனாலிட்டி சேஞ்ச் பண்ணீங்க?

canada nandini(s) likes/like ambi personality than remo personality :).so when balaji knew this there was that great transformation.

said...

//canada nandini(s) likes/like ambi personality than remo personality //
ஓ அதுவா விசயம். ரொரண்ரோவில் நிற்கும்போது எங்களோடு பொழுதைக் கழியுங்கள் என்று கேட்டபோது இல்லை தன்னைத் தன் அத்தை வீட்டில் விடச்சொல்லி அடம்பிடித்தற்கு இதுவா காரணம். மற்றது ஒவ்வொரு முறையும் நன்றி நன்றி என்று கூறும்போது Nandi Nandi என்று (யாரையோ நினைத்து செல்ல மொழி) பேசியதன் காரணம் இப்பத்தான் புரிகின்றது. பாலாஜி இப்படிக் கவித்துப்புட்டீங்களே. இது mulitple personality disorder இல்லை, இது one and only personality disorder and you guys know what it is :-)?

said...

கோழி கூவுற நேரத்துல வந்து சேர்ந்தது இப்படி அமர்க்களப்படுத்துறதுக்குத்தானா???

காதில் புகையுடன்,
மதி

said...

//ஓ அதுவா விசயம். ரொரண்ரோவில் நிற்கும்போது எங்களோடு பொழுதைக் கழியுங்கள் என்று கேட்டபோது இல்லை தன்னைத் தன் அத்தை வீட்டில் விடச்சொல்லி அடம்பிடித்தற்கு இதுவா காரணம். மற்றது ஒவ்வொரு முறையும் நன்றி நன்றி என்று கூறும்போது Nandi Nandi என்று (யாரையோ நினைத்து செல்ல மொழி) பேசியதன் காரணம் இப்பத்தான் புரிகின்றது. பாலாஜி இப்படிக் கவித்துப்புட்டீங்களே. //

டிஜே,

நீர் யாரிட்டயோ நல்லா வாங்கப்போறீர் எண்டு மட்டும் தெரியுது. அது கிஸோ கண்ணனா, பாலாஜி-பாரியா?

யாம் அறியோர் பராபரமே!

-மதி

said...

/ஒவ்வொரு முறையும் நன்றி நன்றி என்று கூறும்போது Nandi Nandi என்று../
எந்த நந்தியோ இன்று நாமறியோம்; ஆனால், நந்தி, என் ரொரொண்டோ ப்ரோ மேலே மத்தளம் தட்டுகையிலும் கொம்பால் முட்டுகையிலும் நாம் நிச்சயமறிவோம்.
RAP--->RIP!

said...

//அது கிஸோ கண்ணனா, பாலாஜி-பாரியா?//
த்சொ த்சொ நான் பாக்குறப்ப கிஸோக்கண்ணன் நல்லாயிருந்தாரே!

said...

/த்சொ த்சொ நான் பாக்குறப்ப கிஸோக்கண்ணன் நல்லாயிருந்தாரே!/
ஆஹா! அதைத்தான் சனி பார்வைன்னு நான் சொல்றது, என்னாங்குறீங்க.

said...

என்னப் பார்வை உந்தன் பார்வை?

said...

அது சரி. ரவி குழப்பம் பண்ணாதீங்க.. :)போட்டுதாக்கீட்டாங்கன்னா சிக்கல்...

வாருமய்யா DJ!! என்னது நன்னி நன்னி-ன்னு சொன்னது செல்ல பேரா..
NB-ல கால வையும் அப்ப பார்த்துக் கொ'ல்'றேன்.

எம்மை யாரோ தான்னு நினைச்சு விடாம பாட்டு பாடி கூத்தாடியாக்கும் திட்டமோ...நித்திலன் உங்க நித்திரைய கலைச்சு கொஞ்சுமாறு பிடி சாபம்..:))

சு.வ: ரிசர்ச்...ரிசர்ச்..;)

நாங்க ரொம்ப ஆடி அலுத்து போய் ஆறின கஞ்சி ஆனதுக்கப்புறம் வந்தருளிய மதியே... நிம்மதியே..
:)