இன்னொரு தரம், வலம்புரி ஜானுக்கு...

அமெரிக்க வலைப்பதிவு நண்பர்களுக்கு,
எனக்கு வலம்புரி ஜானைப் பற்றி அதிகம் தெரியாது. அவரது பேச்சாற்றலைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேனேயொழிய ஒரு முறையும் கேட்டதில்லை, பார்த்ததில்லை. ஆனால் இலக்கியத்துக்காக என்னென்னவெல்லாமோ செய்ததாகச் சொல்கிறார்கள். அவரது விமர்சனங்கள், சொல்லாக்கங்கள் ஆங்காங்கே மேற்கோளிடப்படுகின்றன.

அவருடைய தற்போதைய உடல்நல மற்றும் பொருளாதாரச் சீர்கேடுகளை முன்னிறுத்தி மன்னை மாதேவன் நேற்று ஒரு பதிவினை இட்டிருந்தார். சென்ற மாதத்தில் ஜோ (கணியம்) என்பவரும் ஒரு பதிவினை இட்டிருந்ததைக் கண்டேன். ம்யூசிக் இந்தியா.காம் இணையதளத்திலும் ஒரு செய்தி காணக்கிடைக்கிறது. நானறிந்திராத அவருடைய அரசியல் வாழ்வைத் தாண்டித் தமிழுக்காகத் தொண்டு செய்தவர் என்ற ரீதியில் அவருக்கு உதவ நமக்கொரு (வலைப்பதிவாளர்கள்) கடமை உண்டு என நினைக்கிறேன். அதிமுக்கா திமுக்கா தமுக்கா கட்சிகளெல்லாம் செய்யாது, அவர்களுக்கு இன்றைக்கு வாயடிக்க வண்ணையோ காலில் விழக் காளிமுத்தோ போதும், வலம்புரி ஜான் இனித் தேவையில்லை. நாமும் அப்படி இருக்க முடியாது.

அமெரிக்காவில் இருக்கும் வலைப்பதிவர்கள் யாருக்கேனும் கொடுக்கும் ஆவல் இருந்தால் என்னிடம் தெரிவிக்கவும் (sundarappaa@yahoo.com). நீங்கள் சொல்லும் பணத்தை மொத்தமாக அனுப்பி விடுகிறேன், நீங்கள் இன்றோ நாளையோ எவ்வளவு என்று சொல்லிவிட்டு வரும் வாரத்தில் அனுப்பினால் போதும். நம் 10 டாலர் கூட அவருக்கு உதவியாயிருக்கும் என நம்புகிறேன்.

மாடர்ன் கேர்ள் என்பவர் பிரமீளைப் (சிவராமுவை) பற்றிச் சொல்லும்போது //செத்தவுடனே சிலாக்கிக்குற தமிழ் ஈ-இளி-இலக்குயத்தப்பாத்தா இவளுக்கு வாந்தி வாந்தியா வருது. ஆனாலும் இணையத்துக்கு வர சிவராமுவுக்கு முடிஞ்சிருக்குமான்னும் தெரியல. அசோகமித்திரன் சாரு இலக்கியவாதியா இருந்து இங்க ஒன்னும் கிழிக்கமுடியாதுன்னு சொல்லிருந்ததும், பாரதி வெறுத்துப்போயி டோப்பு அடிச்சதும் சில நேரம் யோசிக்கத்தகுந்ததுன்னும் சொல்லிக்கிறா.// அப்படிங்கறார்.

நாம செய்ய வேண்டியது என்னன்னு உங்களுக்குத் தெரியும். உங்கள் மின்னஞ்சலை எதிர் நோக்குகின்றேன். நன்றி!

பின் குறிப்பு: இது எனது முந்தைய பதிவேதான். இன்னொரு முறை பதிந்தால் கவனம் கூடலாம் என்ற எதிர்பார்ப்பில்! இன்றைக்கு மதியம் அனுப்பப் போகிறேன், விரைந்து உங்கள் பதிலைத் தெரிவியுங்கள். நன்றி!

1 comments:

said...

வலம்புரி ஜானைப் பற்றிய அண்ணா கண்ணனின் தற்போதைய பதிவை முக்கியமானதாகக் கருதுகிறேன்.

http://annakannan.blogspot.com/2005_03_13_annakannan_archive.html#111082614365781877