பாரதீ! சாமிமார்க்கெல்லாம் தொப்பை சுருங்கியதா?

வாழ்வில் முரண்கள் இயற்கை. காலையில வெயில், மதியம் மழை. இல்லன்னா ஒரு நேரம் ரெண்டும் கலந்தடிக்கிறது. அழகு. அணுவுக்குள்ள ஒன்னு + இன்னொன்னு -. இது சமச்சீர். ஆனா சில முரண்கள் மனசை வாட்டும். அதுல ஒன்னு பசித்துக் காயும் வயிறும் அதுக்குப் பக்கத்திலேயே வளர்ந்து சாயும் தொந்தியும். ஒரே நாட்டுக்குள். ஒட்டின வயித்துக்காரன் பயிர் செய்றவன். தொந்திக்காரன் பயிர் செய்றவனுக்கு, செத்ததுக்கப்புறம் அல்லது அடுத்த பிறவியில் சந்தோஷமா எப்படி இருக்கது அப்படின்னு, சொல்லிக் குடுக்குற மடக் கூட்டத்துக்காரன்.

நேத்து ஒரு புகைப்படம் பாத்தேன். ஒரு தொந்தி ஒரு புறம் ஏதோ ஒன்னைச் சொல்லுது, மறுபுறம் ஐந்தாறு தொந்திகள் அதைக் கண்டிக்குது. என்னடா சொல்லுது, தண்ணிப் பிரச்சினையா, இல்லன்னா, அஞ்சாவது தடவையா வாடிப் போன காவிரிப் பாசனப் பயிர்க் கவலையா, இல்ல தலையில துண்டு போட்டுக்கிட்டு இருக்க விவசாயிங்ககிட்டயிருந்து கோவணத்தைப் பறிக்க வர்ற கடங்காரனப் பத்தின விவாதமா...இல்லங்க. திருப்பதியில வர்ற லஞ்சத்தை, கறுப்புப் பணத்தை, வைரத்தை எந்தத் திருடன் கொள்ளையடிக்கலாம்னு அடிதடி. இதுகள் சினம் இறக்கக் கற்கவில்லை, சித்தியெல்லாம் பெற்றதில்லை, மனமிறக்கவும் கற்கவில்லை ஆனால் வாய் மட்டும் பெரிதாய், பேசவும், புசிக்கவும் (தாயுமானவர் சொன்னதுக்கு அப்படியே எதிர்மறையாக). சங்கர் சொல்றது மாதிரி இதெல்லாம் ஈனப் பிறவிகள். இதுகளைக் குருவென்று கொள்ளும் பிறவிகளை என்னவென்று சொல்ல?

நேத்து இதுகளைப் பார்த்தவுடன் ஒரு யோசனை தோன்றியது. ஆகா, தமிழனுக்குள் பிளவு வந்தால் கூத்தாடும் இந்தக் கூட்டத்துக்குள்ளேயே பிளவா, இதை அவனை மாதிரியே, பசு நெய்யையும், இளங்கன்றுக்குட்டிகளையும் போட்டுக் கொளுத்தி யாகப் பெருந்தீயாய் வளர்த்தால் என்ன, அவன் அடித்துக் கொண்டு ஒழிவான், குடிமக்கள் நற்கதியடைவார்கள் என்கிற மாதிரியாய் அதே குள்ளநரித்தனத்துடன் யோசித்துப் பார்த்தேன். என் அப்பன், தமிழன், "சீச்சீ இது எழுத்து நேர்மையாடா?" என்று காறியுமிழ்வானென்று விட்டுவிட்டேன்.

0 comments: