கருணா இயக்கத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
அவர் அரசியல் ரீதியாக எந்தவொரு உறுதியான நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.
தமிழ் ஊடகங்களோடு எந்தத் தொடர்புமின்றி இருக்கிறார்.
சந்திரிகாவின் தூதரைப் பிரிவுக்கு முன்பே சந்தித்திருக்கிறார். சந்திரிகாவோடு உறவு கொள்ளத் துடிப்பவரைத் தமிழுலகம் விடுதலை வீரர் என நம்பாது.
பிபிசி, இந்து போன்ற பத்திரிகைகளிடம் இயக்கத்தின் ரகசியங்களைத் திறந்து காட்டுவதால் இவர் மீது நம்பிக்கைக் குறைவு ஏற்படும்.
நிதிப் பற்றாக்குறையால் கிழக்கின் முழுப் படையணியையும் காலப் போக்கில் அவரால் பராமரிக்க முடியாமற் போகும்.
கிழக்கின் பொதுமக்களும், தமிழ் ஊடகங்களும் இயக்கமோ மக்களோ பிளவுபடுவதை விரும்பவில்லை. எனவே அவருக்கான ஆதரவு மங்கும்.
(நன்றி: I AI'NT THEMன் மேற்கோள்கள்)
...இது மாதிரியான காரணங்களால் கருணாவின் இந்தப் பிரிவு இயக்கத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை பிறக்கிறது. அதே நேரத்தில் கருணா எழுப்பிய நடைமுறைப் பிறழ்வுகள் குறித்த கேள்விகள் நியாயமானவையாக இருப்பின் அவற்றுக்குப் பதில் சொல்லும் கட்டாயம் இயக்கத்திற்கு இருக்கிறது.
மதியம் ஞாயிறு, மார்ச் 14, 2004
கருணாவின் பலவீனங்கள்
Posted by சுந்தரவடிவேல் at 3/14/2004 07:56:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment