அச்சமில்லை அமுங்குதலில்லை

ராமாவென்று வீழ்ந்த மகாத்மாவை
மசூதியின்பின்னே இடிந்து புதைந்தாரை
குஜராத்திலேயுயிர் துடித்து எரிந்தாரை
மாமாங்கக்குளத்திலே மிதிபட்டுச் செத்தாரை
இலவசச்சேலைக்கு நெரிந்தழிந்த பெண்டிரை,

காலக் குப்பையிற் புதைத்துமறந்து,
அத்தனைக்கும் பின்னிருந்து திளைத்துத்
தீரத்தீர நம்குருதியைப் பருகுவாரை
மன்னித்துக் கொடிபிடிக்கும் சிங்கத்தமிழா!
போபார்ஸ்காந்தி உயிரென்ன கரும்போதேனோ?

அமைதிப்பூங்காவாம் தமிழ்நாடு அதில்
வந்து மாண்டாராம் அருந்தியாகி,
நாளொருபொய்யும் பொழுதொரு கொலையும்
ஏமாளியாய்த்தமிழன் நின்று கண்டிருக்க
யாருக்குச் சொல்கிறீர்உம் பூங்காக்கதையை?

நிழற்பேய்கண்டு நடுங்கும் சோதர,
போதும் பொய்க்கதை கேட்டுத்துயின்றது
வில்வாளெடுத்துக் களம்புக வேண்டாம்
உண்ணாநோன்பில் உயிர்விட வேண்டாம்
ஓய்ந்திருப்போருக்கே விளையாட்டும் வீண்வம்பும்
உம்மோடு யாமென்று ஒருசொல்லுரைத்து
முழக்கின் அதிர்வில் பொய்கள்பொடியத்
தீண்டாமுரசை யதிர முழக்கு
நாளை
ஈழம்விடிந்து உன்கரம் பற்றும்.

அப்புறமாய் ஒன்று, பாரதி சொன்னது:

"சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை யிரங்காரடீ - கிளியே
செம்மை மறந்தாரடீ".

0 comments: