எனக்குக் கிடைத்த ஒரு அழைப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆர்வமிருக்கும் அன்பர்கள் கலந்து கொள்ளலாம். உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization) நியூ ஜெர்ஸியில் ஒரு கருத்தரங்கை நடத்த இருக்கிறது. இதன் விபரம் கீழே:
மையக் கருத்து: துணைக்கண்டம் - நேற்று, இன்று, நாளை
இடம்: V.F.W
11 Henderson Road
Kendall Park
New Jersey - 08824
Tel: 732-297-9823
காலம்: டிசம்பர் 11, சனிக்கிழமை, காலை 10.30 முதல் மாலை 6.00 வரை
இந்துமாக்கடலா, அதன் பாதுகாப்புச் சிக்கலா, உலகமயமாக்கும் தோற்றத்திலே தமிழ்நாடா, ஈழப் போர் அழிவுகளா, ஈழப் பயணச் செய்திகளா, மாநிலங்கள்-நீர்வள நதிநீர் இணைப்பு ஒரு கேள்விக்குறியா, தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் அளவிளாச் செய்தித் தொகுப்புகளா, நம் புதுமைப் பெண்களின் தடம் அடைக்கப்படுகிறதா அல்லது வழிவிடுக்கப்படுகிறதா? என்பன குறித்த கருத்துரைகள் இடம் பெறுவதாக அழைக்கிறார்கள்.
கருத்துரை வழங்குவோரின் பகுதிப் பட்டியல்
1. அருட் கலாநிதி S.J. இம்மானுவேல் (Former Vicar General of the Diocese of Jaffna)
2. திரு. ராசா, செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, புது டெல்லி
3. பேராசிரியர் நாகநாதன், பொருளியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம்
4. திரு. சிவராமன் (தராக்கி), இதழாசிரியர், ஈழம்
5. திருவாட்டி. கீதா குமரன், மேரி லாண்ட்
6. திரு. இரகுராசா, மேரி லாண்ட்
7. திரு. சங்கர பாண்டியன், மேரி லாண்ட்
மேலும், கலந்துரையாடல், கலை நிகழ்ச்சிகளுடன் நண்பகல், இரவுணவும் உண்டு. இக்கருத்தரங்கிற்கான பதிவுக் கட்டணம் $50.00 (துணைவருக்கு இலவச அனுமதி!). செல்வதாக உத்தேசம்.
மதியம் சனி, நவம்பர் 20, 2004
ஒரு அழைப்பு!
Posted by சுந்தரவடிவேல் at 11/20/2004 06:02:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment