அமெரிக்கா அப்புறம் மேற்கத்திய கிறிஸ்தவச் சாமிமாரெல்லாம் காமக் குற்றத்துக்காக உள்ளே போறது சகஜம். நியாயம். பொதுமக்கள் யாரும் அவரை விட்டுருங்கன்னு சொல்றது இல்ல. கிறிஸ்தவ மதம் 2000 வருடங்கள் பழமையானது, பல பெரியவங்க இதுல இருந்தாங்க, இருக்காங்க, இதுக்கு கோடிக்கணக்குல சொத்து இருக்கு, அரசியல் செல்வாக்கெல்லாம் இருக்குன்னு யாரும் சொல்லுறதில்லை. மதவாதிகள் சேர்ந்து கைதைக் கண்டித்துப் போராட்டத்தைத் தூண்டுறதில்லை, சிறையில சிறப்பாக் கவனிங்கன்னு கேக்குறதுமில்லை; இன்னொரு பக்கம் சாமியார்க் கொடும்பாவியைக் கொளுத்துறதுமில்லை. தப்பு பண்ணுனாரா, இல்லையா, விசாரிக்கட்டுமே. அதற்கு இடையூறாய் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?
எனக்கென்னவோ பிரேமானந்தரைப் போலவே ஜகத்குருவையும் அரசியல்வாதிகள் கைகழுவி விட்டதாகவே தோன்றுகிறது. இவரும் உள்ளே போனாலும், மதத்துக்கான தேவையும், தேடலுக்கான ஆவலும் மனிதனுக்கு இருக்கும் வரை போலிச் சாமியார்கள் மக்களைப் பல வழிகளிலும் கொல்வது நடந்து கொண்டேதானிருக்கும். இன்று நீ நாளை நான் என்று ஜகத் சக்கரமும் சுற்றிக் கொண்டேதானிருக்கும்.
மதியம் சனி, நவம்பர் 13, 2004
ஜகத் சக்கரம்
Posted by சுந்தரவடிவேல் at 11/13/2004 05:56:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment