நாடகமேவுலகம்

என்னென்னமோ நடக்குது. ஒக்காந்து எழுதினா எல்லாத்தையும் எழுதலாம். ஒவ்வொன்னா எடுத்துப் படிச்சு உடனே கெளம்புற ஒணர்ச்சிகளை எழுதி வக்யலாம். வச்சு? ஆனா இதான் நடக்குது. இதோ இச்சாமத்துக்கு என்னாலானது.
அண்மைய இரு நாடகங்கள்:

1. இலங்கைக்குப் போன கோபி அன்னாரை வடக்கே செல்லக் கூடாதெனத் தடுத்தது இலங்கை அரசு. அன்னாரும் அகில உலக நிவாரணக் கொட்டிடம் காலேயைக் கண்டு பின் திரிகோணமலையில் சென்று ஆறுதல் கொடுத்துவிட்டுத் திரும்பிவிட்டார். அவர் வடக்கே வராததால் தமிழர்கள் தாம் புண்பட்டுவிட்டதாகவும் இதனால் அமைதிக்குக் கிடைத்திருக்கக் கூடிய ஒரு ஆதரவு கிடைக்காமற் போய்விட்டதாகவும் வருந்திக் கடிதம் கொடுக்க, கடிதத்தைப் படித்த கோபி அன்னான் இப்போது மறுபடியும் வருவேன், எல்லாத்தையும் சுத்தி சுத்திப் பாப்பேன்னு சொல்லிருக்கார். சந்திரிகாம்மா இதை எப்படித் தடுப்பாருங்கறது அவருக்கே வெளிச்சம்.

2. வடக்குப் பகுதிக்கு ஒரு விலையுயர்ந்த சவப்பெட்டி "கடத்த"ப் பட்டதாம். உடனே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அது பிரபாகரனுக்கு என்றொரு புரளியைக் கிளப்பியது. புலிகள் "வெத்துப்புரளிக்கு இதாடா நேரம்"னு ஒரு உறுமு உறும, இலங்கை வானொலி ஒலியாய்ப் போன அந்தச் சேதியைத் திரும்பி உறிஞ்சி இழுத்து கிளம்புன வாயிலேயே போட்டு முழுங்கிருச்சாம்.

கூத்துக்கள் தொடரும்.

இப்ப பாருங்க ஒரு கொழப்பம். இது ரெண்டுக்கும் சுட்டி குடுக்கலாம்னு நெனச்சேன். ஒடனே மாலன் சொன்னது ஞாபகம் வந்துச்சு, செய்திச் சுட்டியெல்லாம் வேலைக்காவாது தம்பீ. அதெல்லாம் கொஞ்ச நேரம் இருக்கும், அப்புறம் காணாமப் போயிரும். இது ஒரு லைட்டைப் போட்டுருச்சு. ஒரு பெரிய கொளத்துல நீர்க்குமிழியாக் கொப்புளிச்சுக்கிட்டே இருக்கு. அந்த மாதிரிதானிருக்கு செய்திகளின் ராச்சியம். கொப்பளிக்கிறது குளம் மட்டுமில்ல, ரத்தமுந்தான். இப்படியே நான் ரத்தம், கார்த்திக்ராமாஸ் டமாஸ், டமாஸ் கடலை விக்கும் எங்கவூரு சினிமாக் கொட்டாய், சினிமாவுக்குத் தேவையான இனிமா, எஸ்ராவின் சினிமாப் பொஸ்தகம், பொஸ்தகக் கண்காட்சி, ராம்கி தின்ன சமோசான்னு நீட்டிக்கிட்டே போலாம். வுடுறேன். உங்கள விட்டுர்றேன். சரி, குமிழிச்சுட்டி குடுக்குறேன், வந்தா ஒங்களுக்கு வரலன்னா குமிழி ஒடஞ்சிருச்சுன்னு விட்ருங்க.

0 comments: