அனைத்துலகத் தொண்டு நிறுவனங்களின் மீது தாக்குதல்


எண்ணிலாத போர்க்குற்றங்களைச் செய்துவரும் இலங்கை அரச படையினர், இதுவரை கணக்கிலடங்காத தொண்டுநிறுவனங்களின் மேல் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதன் இன்னொரு சேர்க்கையாக நேற்றும் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் மேல் எறிகணைகளை வீசியிருக்கிறார்கள். இவற்றை மனிதாபிமானமுள்ள எவரும் கண்டிப்பார்கள். 

செய்தி: 
சிறிலங்கா அரசாங்கத்தால் "மக்கள் பாதுகாப்பு வலயம்" என அறிவிக்கப்பட்ட பகுதியான உடையார்கட்டில் அமைந்திருந்த அனைத்துலக தொண்டர் நிறுவனங்களான வன்னி மறைக்கோட்டம், கியூடெக், கரித்தாஸ் ஆகிய நிறுவனங்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் அவை முற்றாக அழிந்துள்ளன.

இவற்றின் மீது நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். 48 மணி நேரக் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனைத்தான் இந்தியா சிறிலங்காவின் யுத்த நிறுத்த அறிவிப்பு என்று கூறிவருகின்றது.

இதேவேளை, படையினரின் இந்தத் தாக்குதலில் கியூடெக், கரித்தாஸ் நிறுவனங்களின் ஆவணங்கள், வன்னிமறைக்கோட்ட ஆவணங்கள் யாவும் முற்றாக அழிந்துள்ளதுடன் அங்கிருந்த சகல கட்டடங்களும் ஊர்திகளும் அழிந்துள்ளன.

மேலும் சிறிலங்கா படையினரின் தாக்குதலால் கியூடெக் நிறுவனம், வன்னிமறைக் கோட்டம் என்பன இயங்கிய தூய யூதா கோவிலும் சேதங்களுக்குள்ளாகியது. கியூடெக், கரித்தாஸ், வன்னிமறைக் கோட்டத்தின் சகல ஆவணங்கள் உடமைகளும் இதில் எரிந்து அழிந்துள்ளன. மூன்று நாட்களுக்கு முன்னர் இதன் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. நேற்று இதனை அழிக்கும் தாக்குதல் தீவிரமாக சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டுள்ளது.

0 comments: