செங்கொடினு கூப்பிட்டாதான் அவளுக்கு பிடிக்கும். சரஸ்வதிங்கிற தன் பேரையே அவ மறந்துட்டா.
ரொம்ப சூட்டிகையான பொண்ணு. அதே நேரத்துல நிறைய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பா. எல்லாமே அறிவியல் தொடர்பா இருக்கும்.
எங்க கூடவே நாங்க கிராமங்கள்ல பிரச்சாரம் பண்ண போறப்ப வருவா.
செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பா. எங்களுக்கே அதை பார்க்க ஆச்சரியமா இருக்கும்.
கலை மூலமா பிரச்சாரம் செய்யறது அவளுக்கு பிடிக்கும். அதனால மனமுவந்து அவ இதை செய்வா. ‘சென்னை சங்கமம்’ல அவளோட நிகழ்ச்சி நடந்திருக்கு.
புழல், வேலூர்னு செங்கொடி பார்க்காத சிறை இல்ல.
பாரதிதாசன் பாடல்கள அவ்வளவு அழகா, உணர்வோட பாடுவா.
- படங்கள், குறிப்புகள்: வினவு.
"தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.
இப்படிக்கு
தோழர் செங்கொடி"
மதியம் திங்கள், ஆகஸ்ட் 29, 2011
தோழர் செங்கொடி
Posted by சுந்தரவடிவேல் at 8/29/2011 05:04:00
Labels: செங்கொடி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எப்படியானாலும் இந்தமாதிரி தீக்குளிப்புகள் தடுக்கப்படவேண்டியவை.
//எப்படியானாலும் இந்தமாதிரி தீக்குளிப்புகள் தடுக்கப்படவேண்டியவை.//
எனது கருத்தும் அஃதே!
Post a Comment