வாய்ப்பிருந்தால் நாளைக்கு வெள்ளை மாளிகைக்குச் செல்லுங்கள்

மிகக் கொடூரமான இனப்படுகொலை நிகழ்கிறது. பொறுத்திருந்து பார்க்கும் அமெரிக்க அரசின் முகம் அசிங்கமாக இருக்கிறது. "போருக்குப் பின்"னான நடவடிக்கைகள் எப்படி இருக்கவேண்டும் என்று ஆலோசிக்கும் அமெரிக்க நடவடிக்கை வன்மம் நிறைந்ததாகத் தெரிகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன், தீவிரவாதம் வேறு, விடுதலைப் போராட்டம் என்று முழங்கிய ஹிலரி, ஒபாமாவின் வாய்கள், அரியணையேறியபின் மௌனித்திருக்கின்றன. அமெரிக்காவில் நிகழ்ந்த இது, ஜெயலலிதாவின் வாய்க்கும் நடக்கலாம். ஈழத்தில் நேற்று ஓரிரவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டும் என்கிறார்கள். அமெரிக்காவில் இருந்துகொண்டு செய்வதற்கு என்ன இருக்கிறது என்று அயர்ந்து போக வேண்டாம். ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதிநிதிகள் மற்றும் செனட் உறுப்பினர் அலுவலகங்களுக்கு முன் திரளுங்கள். வாஷிங்டன் பகுதியிலிருப்பவர்கள் வெள்ளை மாளிகைக்கு முன் நாளை போராடுகிறார்கள். இயன்றவர்கள் செல்லுங்கள்; கீழே விபரமிருக்கிறது. நான் வாழும் காலத்தில் இப்படியொரு இனப்படுகொலை நடக்கும்போது நான் பார்த்துக்கொண்டு சும்மாயிருந்தேன் என்று நாளைக்கு உங்கள் சந்ததியினருக்கு முன்னும், மனசாட்சிக்கு முன்னும் தலைகுனிய நேராதிருக்கும். எதையேனும் செய்யுங்கள்.

There is an emergency rally organized for tomorrow (05.11.09) at the Lafayette Park in front of the White House. Please try to gather by 9 A.M, Monday (05.11.09).

0 comments: