இனங்களும், வாரக்கடைசியும்

அன்றைக்கு என் மகனுக்கு உயிர்மெய்யெழுத்துக்களை எழுதிக் காட்டிக் கொண்டிருந்தேன்.
கஙசஞடணதநபமயரலவழளறன
அப்புறமா
கசடதபற வல்லினம்,
ஙஞணநமன மெல்லினம்,
யரலவழள இடையினம் அப்படின்னு சொன்னேன். இதுல என்ன அதிசயம்னு கேக்குறீங்களா?

இந்த வல்லின எழுத்துக்கள் ஒன்று விட்டு ஒன்று வருவதைக் கவனித்தீர்களா? மட்டும் கடைசிக்குப் போயிடுச்சு. அதே மாதிரி மெல்லின எழுத்துக்களும் வல்லினத்துக்கு அடுத்து ஒன்று விட்டு ஒன்று. மட்டும் கடைசிக்கு, அதிலும் ற வுக்குப் பக்கத்தில். இந்த இடையினம் இருக்கு பாருங்க அது மட்டும் அப்படியே கூட்டா ஒரே இடத்துல யரலவழள அப்படின்னு சேர்ந்து இருக்கு. எழுத்துக்களின் இந்த இட அமைப்புக்கு எதாச்சும் அர்த்தம் இருக்குமா?! ஓசை நயத்துக்காகவும், ஒலிகளைத் தெளிவாப் பிரிச்சு சொல்றதுக்காகவும் இருக்கலாம். வேற எதாச்சும் உங்களுக்குத் தோணுதா?

வாரக்கடைசியில நல்ல பிள்ளையா இருந்தேன். சனிக்கிழமை சாம்பார் வைத்து, பாகற்காய் வறுத்தேன். அன்று நல்ல மழை! 'அண்டத்திடிபல தாளம் போட' அப்படின்னு கொட்டியது. வெளியில போகாதீங்கன்னு தொலைக்காட்சியில அறிவிப்பு வேற. நேத்து வெயில், வெளியில போனோம். பக்கத்துல மிடில்டௌன் அப்படின்னு ஒரு ஊருக்கு. அங்கே சின்னப் பிள்ளைகளுக்கான அருங்காட்சியகமொன்று. ஒரு பெரிய வீட்டுக்குள். ஒரு புறத்தில் கடலடிப் பவளப் பாறைகளைப் போல் கட்டியிருந்தார்கள். குழந்தைகள் அதனுள் புகுந்து ஊர்ந்து திரிந்தனர். அப்புறம் சமையற்கட்டு, கார், கடை, தோட்டம், துணிக்கோழி, ப்ளாஸ்டிக் முட்டை, எல்லாம் விளையாட்டுக்குத்தான். எல்லாம் அறைகளுக்குள். செயற்கைத்தனம் சற்றே உறுத்தினாலும் குழந்தைகளுக்கு அவை ஆச்சர்யத்தையும் மகிழ்வையும் தருவதைக் காண முடிந்தது. வீறு கொண்டு நடக்க ஒரு வாரக்கம்பளம் விரிக்கப் படுகிறது. கிளம்புகிறேன்!

0 comments: