Tuesday, April 07, 2009

தமிழர்களை அழிக்கின்ற இந்திய இராணுவம்

2008இல் சிறிலங்கா இராணுவத்தால் உருவாக்கப்பட்ட 58ம் படையணி வலிந்த தாக்குதல் நடாத்துவதில் சிறப்பு பயிற்சி பெற்ற ஒரு படையணி. இந்த படையணியே பூநகரி, ஆனையிறவு, மற்றும் பரந்தன் ஏ35 பாதையில் புதுக்குடியிருப்புவரை தனது தாக்குதலை நடாத்தி வந்தது. இந்த படை அணி புலிகளின் தொடர் தாக்குதலால் தனது படைத்திறனை சிறுது சிறுதாக இழந்து கொண்டிருந்தது.

ஆனால் அண்மையில் நடைபெற்ற புலிகளின் பாரிய தாக்குதல்களால் இந்த படையணி முற்றாகவே சிதைந்து இதன் பல பிரிவுகளை இணைத்தே தனது தாக்குதலை சிறிலங்கா இராணுவம் நடாத்தி வந்தது. தற்போது இதன் செயற்திறன் முற்றாக புலிகளால் அழிக்கப்பட்டதை அடுத்து இந்திய இராணுவத்தின் சிறப்பு தாக்குதல் படை பிரிவை சேர்ந்த பல படையினர் 58ம் படையணியில் முன்னணி தாக்குதலை நடாத்தும் படையணியாக செயற்படுகின்றனர். சிறீ லங்கா இராணுவத்தின் சீருடையில் புதியரக ஆயுதங்களுடன் இவர்கள் தற்போது செயற்படுவதாக விரக்தி அடைந்த சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் தனது தமிழ் நண்பருக்கு இந்த செய்தியை வவுனியாவில் வைத்து கூறியுள்ளார்.

58ம் படையணியை சேர்ந்த இந்த சிப்பாய் ஒரு தொற்று நோய்க்காக வவுனியாவில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் இந்த நேரத்திலேயே இந்த தகவல்களை கசிந்துள்ளார். தமது படையணியில் 58ஆம், 59ஆம் படையணி முற்றாகா சேதமாகி விட்டதாகவும் சிறப்பு தாக்குதல் அணியான 58அம் படைபிரிவில் பல டிவிசன்களில் முற்றாக இந்திய கொமாண்டோக்களும் 59ம் படையணியில் ஆட்பலத்தை நிவர்த்தி செய்யும் வகையில் 50சதவீதமான இந்திய சிப்பாய்கள் இருப்பதாகவும் இவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த இராணுவத்தை வழி நடாத்தும் அதிகாரிகளாக இலங்கை இந்திய ஓப்பந்த காலத்தில் இந்திய இராணுவத்தில் படையாற்றி தற்போது பதவி உயர்வு பெற்ற சில அதிகாரிகள் இருப்பதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
செய்தி:பாரிஸ் தமிழ்

4 comments:

  1. If that is so, then it is a war between India and LTTE. Why should India fight in another country so directly. Could it be that SriLankan army had hired some mercenaries who were with Indian
    army earlier. That possibility could not be ruled out although
    it is unlikely that they could hire so many ex-soldiers of Indian
    army.

    ReplyDelete
  2. செய்யக் கூடியவர்கள் தான் இவர்கள். மும்பையில் குண்டு வைக்கும் பாகிஸ்தானிடமோ இந்திய வரைபடத்தை கீழே உதிரும் மயிருக்கு தரும் மரியாதையும் தரமால் நினைத்த இடத்தை எல்லாம் தனதாக கோரும் சீனாவிடமும் வீரத்த காட்ட வக்கில்லாத முதுகெலும்பற்ற ஜந்துக்கள்.

    ஆடாத ஆட்டமெல்லாம் போட்டு மண்ணுக்குள் போன பல வல்லரசுகள் நினைவுக்கு வருகின்றன. அதே நிலைமை இந்தியாவுக்கும் வரும் நாளை எண்ணிக் காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  3. இச்செய்தி உண்மையாயிருக்குமாயின்,
    இந்திய அரசும் சோனியாவும் வெட்கி நாண வேண்டும்!

    இந்திய மக்களின் குறிப்பாகத் தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழர்களின் அரத்த உறவுகளைக் கொல்ல இந்த மானங்கெட்ட காங்கிரசு அரசுக்கும் மாந்தநேய உணர்வே அற்ற அந்த சோனியாவுக்கும் யார் அதிகாரம் தந்தது?

    கள்ளத் தனமாகப் போய் அங்கு மாந்த உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்துக் கொடுங்கொலை புரியும் காங்கிரசு அரசின் முகத்தில் காறித்
    துப்புகிறோம்!

    மாந்த உருவில் நடமாடும் சோனியா காந்திக்கும் துணைபோகும் கருணாநிதிக்கும் கடுமையான தண்டனையைத் தரத் தமிழர்கள்
    மே 13க்குக் காத்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. எனதருமை தமிழ் உள்ளங்களே அன்று இரண்டாம் உலக யுத்ததில் அமேரிக்க பயன்படுத்திய அணுகுண்டு யப்பனியரை அந்த சமயத்தில் உருக்கி போட்டாலும் சில வருடங்களில் வெகுண்டு எழுந்தார்கள். இன்று வல்லரசுக்கே பாடம் சொல்கிறார்கள்.. இன்று நம் தமிழ் மக்கள் மீது உலகமே தடை செய்த ஹைட்டரஜன் குண்டுகளை இந்தியா பயன்படுத்தி இருக்கிறது. தமிழர்களை கொல்வது மட்டுமே இந்தியா அரசின்
    நோக்கம் என்பது புலனாகிவிட்டது. நம் தமிழர்கள் சாம்பலில் இருந்தும் எழுந்து போராடும் திறன் படைத்தவர்கள் என்பதை மறந்து ஹைட்டரஜன் குண்டுகளை போட்டு மிரட்டி பார்க்கிறது.

    கண்களின் நீர் வற்றி விட்டது
    உலக நாடுகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஒரு சிலருக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருக்கும் சாவுங்கடா என்று ஆனால் ஒட்டு மொத்த தமிழரும் இரத்த கண்ணீர் வடிப்பது கண்கூடு, சனவரியில் இருந்து தொடரந்து தினமும் நூற்றுக்கணக்கான தமிழின உடலங்களை கண்டு எனது கண்களின் நீர் வற்றி விட்டது. கருகிபோன உடலங்களை போல எனது கண்களும் வரண்டு விட்டது. ஆனால் உள்ளம் துவண்டு
    விடக்கூடாது,

    சாவு இன்றல்ல நேற்றல்லா என்றும் நம்மீது விழும் பூமாலை, சிந்தனை செய்யுங்கள் நீங்கள் உறங்கி எழுந்து உண்டு உடுத்தி பயணித்து பணித்து மீண்டும் உறங்க செல்லும் நாட் சக்கரத்தில் ஈழத்தில் நாளை என்ன என்றல்ல அடுத்த வேளை என்ன என்று தெரியாமல் சாப்பிடும் போது குண்டு விழுமா அல்லது அமரும் போது குண்டு விழுமா என்று எதிர்பாராது கடந்த 30 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும்
    நம் இனம் ஆனால் இன்று தமிழர்கள் அனைவரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் என்று நினைத்து கொண்டு மத்திய அரசு எம் இனத்தின் மீது கொடிய அவலத்தை தொகுத்துள்ளது.

    ஹைட்டஜன் குண்டு
    படையணிகள், ஆயுதங்கள், நுட்பங்கள் மற்றும் நேரடியாகவும் இறங்கி பார்த்துவிட்டது. இவற்றிற்கெல்லாம் அஞ்சாச இமயங்களை கண்ட

    கயவர்கள் உலகத்திலேயே தடை செய்யபட்ட ஹைட்டஜன் குண்டுகளை பாவித்து மகிழ்ந்திருக்கிறது. அவ‌ர்க‌ள் என்ன‌ கேட்டார்க‌ள் எங்களையும் சுத‌ந்திர‌மாக‌ வாழ‌ விடுங்க‌ள் என்றுதானே கேட்டார்க‌ள். சுத‌ந்திர‌ வேள்வியின் மூல‌ம் விதை கொண்டு எழுந்த‌ இந்தியாவே த‌மிழீத்தின் சுத‌ந்திர‌ தாக‌த்தை ஹைட்ட‌ர‌ஜ‌ன் குண்டுக‌ள் மூல‌ம் பொசுக்க‌ நினைத்தாய்

    வாழ்க‌ இந்தியா

    நீங்கள் எரிந்த ஹைட்டஜன் குண்டு சில தமிழ் உடலங்களை எரித்தது. ஆனால் அந்த ஹைட்டஜன் குண்டு உல‌க‌ம் முழுவ‌தும் இதுவ‌ரை முக்கி முன‌ங்கி கிட‌ந்த‌ த‌மிழ‌ர்க‌ளை உள்ள‌த்தில் இருந்த‌ சுத‌ந்திர‌ ப‌ந்ததை எரிக்க‌ நெருப்பாய் மாறிவிட்ட‌து. க‌ருகிய‌ உட‌ல‌ங்க‌ளை க‌ண்டு க‌ல‌ங்கி விடாதீர்க‌ள் இந்த‌ உட‌ல‌ங்க‌ளின் ஆண்மாக்களை இனி உங்க‌ளுக்குள் தாங்குங்க‌ள்,

    இவ‌ர்க‌ள் ப‌க‌டான‌ வாழ்விற்காக‌வோ கைநிற‌ய‌ ச‌ன்மான‌த்திற்காக‌வே க‌ள‌ம் கான‌வில்லை, இவ‌ர்க‌ளின் அத்த‌னை ஆண்மாக்க‌ளும் எம் ம‌க்க‌ளுக்காக‌ சுத‌ந்திராமான‌ ஒரு தேச‌ம் என்ற‌ க‌ன‌வை கொண்டே க‌ள‌ம் இற‌ங்கினார்க‌ள். வ‌ர‌லாறு த‌ம‌து ப‌க்க‌ங்க‌ளில் இதுவ‌ரை புர‌ட்சிக‌ள் தோல்வி என்று எழுத‌வில்லை,

    அதிலும் உல‌கிற்கே நாக‌ரிக‌த்தை க‌ற்றுத‌ந்த‌ த‌மிழின‌ம் தொல்வி அடைவ‌தா?? சில‌ இழ‌ப்புக‌ளை க‌ண்டு க‌ல‌ங்காதீர்க‌ள், ஹைட்ர‌ஜ‌ம் குண்டுக‌ள் ம‌ட்டும‌ல்ல‌ இனி அணுகுண்டு போட்டாலும் த‌மிழீழ‌ போராட்டாம் அந்த‌ அணுகுண்டின் ச‌க்தியை விட‌ ப‌ண்ம‌ட‌ங்கு அதிக‌ரிக்கும் ஆம் இனி உல‌கெங்கும் வாழும் த‌மிழ‌ர்
    உண‌ர்வு ம‌ங்கி விட்டாதா உண‌க்கு,
    சீக்கிய‌ர்க‌ள் மீதுந‌ட‌த்த‌ ப‌ட்ட‌ வ‌ண்முறைக்கு ப‌தில் சொல்ல‌ சொல்லி இன்று ஒரு சீக்கிய‌ர் சித‌ம்ப‌ர‌த்தின் மீது சூவை கொண்டு எறிந்தார். அவ‌ர் உண‌ர்வாள‌ர் இன்று உன‌து இன‌மே எரிகிற‌து, ஓட்டு கேட்டு இவ‌ர்க‌ள் வ‌ருவார்க‌ள், ஆம் அத‌ற்குள் ஈழ‌ம் என்ற‌ இன‌த்தை அழித்து விட்டு வ‌ருவார்க‌ள்.

    ப‌ட‌ங்க‌ளை பாருங்க‌ள் உருத்தெரியாம‌ல் ஆக்கிவிட்டார்க‌ள், இவ‌ர்க‌ளின் க‌ன‌வுக‌ளுக்கு உல‌க‌ த‌மிழின‌மே உருகொடு
    க‌ருகினாலும் க‌ல‌ங்க‌ மாட்டோம், த‌மிழா , க‌ளைப்பு நீங்கி எழ‌டா
    தோல்வி வெற்றியின் முதல் படி மீள்வோம் மீட்போம் தமிழரின் தாகம் தமிழ் ஈழம் என்று சங்கே முழங்கு

    போராளி ஒருவர் மீது நேரடியாக எரி நச்சுக்குண்டு பட்டு அவரின் உடல் கருகியதை படத்தில் காணாலாம்

    எரி நச்சுக்குண்டு பட்டு உடல் எரிந்த நிலையில் இறந்துகிடக்கும் போராளிகள்

    http://www.tamilwin.com/view.php?2adsE99Zb0bcfDpYUe0ec4C0jt20cc35ZLu624d326Wn534b30tVQ6C4d4eQUG7fcd0ebPh2gsde

    ReplyDelete