Saturday, November 06, 2004

பறந்த நொடி

கண்ணாடி சன்னலின் அருகே இருந்தும் வெளியே பார்க்கவில்லை. பார்க்காமலிருந்ததாலேயே வெளியே எதுவும் நடக்காமலுமில்லை. கடைக்கண்ணில் விர்ரென்று பறந்த குருவிக்கூட்டம் பார்வையை இழுத்தது. பார்த்தேன். குருவிகளில்லை. இலைச் சருகுகள். காற்று பறக்கடித்தது. ஒரு நொடித் தோற்றந்தான். அதைச் சொல்ல இவ்வளவு நேரமாகிவிட்டது!

No comments:

Post a Comment