வானந் தெளிந்து வீசும் வளர்மதி
சுடரைத் தெறிக்குங் கடலின் மெல்லலை
இரவுக் காற்றிலே யேறுங் குளுமை
மணலிலே யிட்ட அடியெலாஞ் சிப்பிகள்
இரையைக் கொண்டு காற்தடம் விட்டுப்போய்
எங்கோ வுறங்கலாம் வெண்கடற் பருந்துகள்
துணையொரு மாது கைப்பிடி மதலை
தொலைவிற் தெரியும் விளக்க வெளிச்சம்
நெஞ்சில் லமைதி நிறைந்த வோரிரவு
எனக்கிருந் தாற்போல் உனக்கும் வேண்டும்.
No comments:
Post a Comment