Monday, February 23, 2004

வளர்சிதை

கிடக்கும் குச்சியைக் கல்லை
துணி சுத்திய மரத்துண்டை
விரி வானைக்
கேள்வி கேட்க, அவை
கேளாக்(?) கேள்விக்கு
விடையிறுக்க
யாரும் துரத்தாமல் ஓட
காரணமின்றிக் குதித்துச் சிரிக்க...
முடிகிறதா இப்போது?
வளர்வெனும் மயக்கில்
ஓட்ட வெறியில்
உதிர்ந்த சிறகுகள்
உதிர்ந்தவைதானா?


No comments:

Post a Comment