Monday, August 29, 2011

தோழர் செங்கொடி



செங்கொடினு கூப்பிட்டாதான் அவளுக்கு பிடிக்கும். சரஸ்வதிங்கிற தன் பேரையே அவ மறந்துட்டா.

ரொம்ப சூட்டிகையான பொண்ணு. அதே நேரத்துல நிறைய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பா. எல்லாமே அறிவியல் தொடர்பா இருக்கும்.

எங்க கூடவே நாங்க கிராமங்கள்ல பிரச்சாரம் பண்ண போறப்ப வருவா.

செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பா. எங்களுக்கே அதை பார்க்க ஆச்சரியமா இருக்கும்.

கலை மூலமா பிரச்சாரம் செய்யறது அவளுக்கு பிடிக்கும். அதனால மனமுவந்து அவ இதை செய்வா. ‘சென்னை சங்கமம்’ல அவளோட நிகழ்ச்சி நடந்திருக்கு.

புழல், வேலூர்னு செங்கொடி பார்க்காத சிறை இல்ல.

பாரதிதாசன் பாடல்கள அவ்வளவு அழகா, உணர்வோட பாடுவா.

- படங்கள், குறிப்புகள்: வினவு.

"தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.
இப்படிக்கு
தோழர் செங்கொடி"

Friday, August 12, 2011

பேரறிவாளனை மீட்போம்


"நான் மரணத்திற்கு பயப்படவில்லை ஆனால் நான் நிரபராதி என நிரூபிக்கத்தான் போராடுகிறேன்,நீதி தவறிவிட்டது எனது வழக்கில் என்று நிரூபிக்க போராடுகிறேன்,சாவை விட பல கொடுமைகளை இந்த 21 ஆண்டுகள் சிறைவாழ்க்கையில் அனுபவித்துவிட்டேன்.எனது மரணம் நீதியின் மரணம் மட்டும் அல்ல,தளராது வயதிலும் எனது விடுதலைக்கு போராடும் என் அன்னை ஏமாற்றப்படுவார்கள் என்பதே எனது கவலை" - பேரறிவாளன்

கையொப்பமிடும் சுட்டி:
http://www.change.org/petitions/plea-to-cancel-the-death-sentence-wrongly-given-to-innocent-perarivalan

ராஜீவ் கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனைக் கைதியாக இருபத்தோரு ஆண்டுகள் நீதிக்காக காத்திருக்கும் திரு.பேரறிவாளனின் கருணைமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரின் தாய் அற்புதம் அம்மா அவர்களுடன் ஒரு சந்திப்பு-

http://www.youtube.com/watch?v=A7Hbdt6vWDw