ஆச்சி, அம்மாச்சி, அப்பச்சி, அப்பாச்சி, அண்ணாச்சி, தங்கச்சி, அக்காச்சி, அத்தாச்சி, மச்சினிச்சி... இந்த உறவுப்பெயர்களிலெல்லாம் ஒட்டியிருப்பது ச்சி என்ற பின்னொட்டு. இது பாசத்தையும், மரியாதையையும் குறிப்பதற்காக நம்மிடையே தொன்றுதொட்டு வழங்கப்படுவது. இந்த ச்சி பின்னொட்டுதான் வடக்கே ஜி ஆனதோ என்று எண்ணுகிறேன். உங்களுக்கு வேறு ஏதேனும் ச்சி தோன்றுகிறதா? மச்சி என்ன ரகமென்று தெரியாது!
ஆமைக்குட்டி, திருக்கை, சுத்தியல் சுறா...இதெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா? எங்களூர்ப் பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு வகுப்புக்குமான பெயர்கள். மழலை வகுப்புப் பிள்ளைகளை ஆமைக்குட்டிகள் (Laggerheads) என்று அழைக்கிறார்கள். இந்த ஊரின் இயற்கை வளங்களுக்கு ஏற்றாற்போல் பலவிதப் பெயர்களைக் கல்வி முறையில் புகுத்துவது பிடித்திருக்கிறது.
திருச்சி வேலுச்சாமியிடம் இருக்கும் செய்திகளைப் பரப்பவேண்டும். கார்த்திகேயனையும், சு.சாமியையும், ச.சாமியையும் விசாரிக்காமல் விடமாட்டார் என்று தோன்றுகிறது. நீதி வெல்லட்டும். முழுமையாகப் பாருங்கள்:
பேரவை நன்றியறிவித்தல் கூட்டம் அடுத்த வாரம். ஒரு அழகான பூங்காவில். கூட்டம் முடிந்த பின் நண்பர்கள் சிலர் கூடாரமடித்துத் தங்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். பேரவைத் திருவிழாவுக்கு உழைத்தோரே வருக! வருக!
வேலுச்சாமி அண்ணாச்சி, கார்த்திகேயன் ஜி!
Labels: பத்மஸ்ரீ கார்த்திகேயன், வேலுச்சாமி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment