ஆள் + அறிவு -> சோறு
ஆள் + மொழி -> சோறு
ஆள் + வினை -> சோறு...
இப்படியாக நம் மனம், வாக்கு, செயல் எல்லாமே சோறா மாறுனாத்தான் நமக்குச் சந்தோசம். இந்த மாதிரியான சமன்பாட்டை, கொள்கையை வச்சுக்கிட்டுத்தான் தமிழ் சோறு போடுமா போடுமான்னு சிலர் கூப்பாடு போடுறதும். அப்படிக் கூப்பாடு போடுறவங்களை சந்தோசப் படுத்துறதுக்காக இந்தப் பதிவு. தமிழ் இப்படிச் சோறு போடுதோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனா ஆங்கிலம் இப்படி ஒரு சோத்தைப் போடுது. அதாவது நேத்து ரேடியோவில ஒரு செய்தியக் கேட்டேன். ஒரு அப்பா, தன்னோட பிள்ளைங்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்குறதுக்காக ஒரு நாள் சமையற்கட்டுல விளையாட ஆரம்பிச்ச விளையாட்டு இப்ப சாப்பாடு இல்லாத பலருக்கு சாப்பாடு குடுக்குது. போயிப் பாக்கணும்னு தோணிச்சு. பாத்தப்ப என்னோட ஆங்கில வாத்தியாரான கே.வி சாரை நெனைக்க வச்சிருச்சு. விளையாடிப் பாத்தேன். நல்லாத்தான் இருக்கு. நீங்களும் www.freerice.com தளத்துக்குப் போயி விளையாடிப் பாருங்க. ஆங்கிலம் சோறு போடும்!
ஆங்கிலம் சோறு போடுமா?
Posted by சுந்தரவடிவேல் at 1 comments Links to this post
புலிகளுக்குப் பொருளுதவி, வளங்களை அளித்தல் குற்றமில்லை!
அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் குர்திய அமைப்பு ஒன்றின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் அமெரிக்காவில் 1996ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 2004ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்"களின் சில பகுதிகள் மொன்னையாக இருப்பதாகவும் அவற்றை நீக்கும்படியும் கோரப்பட்டது. அந்த அமைப்புகளுக்குப் பொருளுதவியும் மற்ற வளங்களும் வழங்கி அமைதியான தீர்வுக்கும், ஐ.நா சபையில் தங்கள் தரப்பினை எடுத்துச் சொல்லவும் உதவ நினைப்பவர்களும் இச்சட்டப்படி குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. நேற்றைய தீர்ப்பின்படி, இத்தகைய பொருளுதவிகளும், வளங்களை வழங்குதலும் ("material support or resources") குற்றம் என்பதான பகுதிகள் இச்சட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.
செய்தி:
Posted by சுந்தரவடிவேல் at 8 comments Links to this post